Sunday, January 25, 2015

ஒபாமா தம்பதியின் இந்தியப் பயணம்

ஒபாமா தம்பதியினரும் ஒரு சாதாரணனைப் போல் இந்தியப் பயணம் மேற்கொண்டிருந்தால் அவர்களுக்கு நிகழ்ந்திருக்கக் கூடிய சில வேடிக்கையான கற்பனை நிகழ்வுகள்:

மிட்சலின் லேசான தொண்டை கரகரப்பு அவர் ஊரிலிருந்து கிளம்பும் நாளில் சீக்கிரம் எழுந்து தலைக்குக் குளித்து புளியோதரை போன்றவைகள் செய்ததால் என்று நம்பப் படுகிறது.

அமெரிக்க விமான நிலையத்தில் ஒபாமாவின் ஹாண்ட் பேகேஜில் அதிக எடை இருந்ததால் சில சாமான்கள் அவரின் பெட்டிக்கு மாற்றப் பட்டதாம்.

ஒபாமாவின் செல் போனில் சார்ஜ் போயிருந்ததால் தில்லியில் வந்து இறங்கியவுடன் இருந்த ஏகப்பட்ட மிஸ்டு காலை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தாராம்.

தில்லி விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்த தம்பதியினரை கால் டாக்ஸிக்காரர்கள் மொய்த்துக் கொண்டு மோடி வீட்டுக்குக் கூட்டிச் செல்ல ஐயாயிரம் ரூபாய் வரை கேட்டிருக்கின்றனர். கடைசியில் தில்லியின் ஃபட் ஃபட்டியில் சென்றதாகத் தகவல்.

ஆக்ராவுக்கு ஒட்டகத்தில்தான் சவாரி செய்ய முடியும் என்று ஏமாற்றப் பார்த்த சில தரகர்களின் பேச்சை நம்பி தாஜ் மஹால் பயணத்தை ரத்து செய்ததாகக் கூறப் படுகிறது.

பழைய தில்லி மார்கெட்டில் தன் குழந்தைகளுக்காக ஆசையாக வாங்க விரும்பிய பொம்மை துப்பாக்கி போன்ற விளையாட்டுப் பொருள்களை விமான நிலைய சோதனை கருதி தடுத்த ஒபாமாவின் செயலால் மிகுந்த வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிரார்களாம் வீட்டம்மா.

ஆனால் கரோல் பாக் தெருக்களில் பல செருப்பு ஜோடிகளும் , கைப் பைகளும் வாங்கிக் கொடுத்து அவரை சரி செய்து விட்டார்களாம். ஒபாமாவுக்குத்தான் சரியான அளவில் புகழ் பெற்ற தில்லி குர்த்தா கிடைக்காதது மனைவிக்குக் கொஞ்சம் வருத்தமாம்.

வரும் வழியில் "பதினாலு நாட்களில் ஹிந்தி" புத்தகம் களவாடப் படாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக பேரம் செய்திருக்கலாம் என்று நினைக்கிறார்களாம்.

திரும்புவதற்க்கு முன் குல்ஃபி சாப்பிட அஜ்மல் கான் ரோடுக்குப் போக தம்பதியினர் வழி விசாரித்தாக சொல்கிறார்கள்!

இவர்களின் ரிடர்ன் டிக்கட் இன்னும் கன்ஃபர்ம் ஆகாததால், அம்மையாரின் முகத்தில் கொஞ்சம் கவலை தெரிகிறது என்கிறார்கள்.

No comments:

Post a Comment