Saturday, May 31, 2014

நமக்கென்ன

"தெரியுமா, நாளைலேர்ந்து ரெண்டு மணி நேரம் பவர் கட்டாம். எப்ப வேணும்னாலும் கரண்ட்டு போகுமாம்

நமக்கென்னக் கவலை . அதான் வீட்ல  இன்வெர்டர் இருக்கே !"

"சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி கண்ணாடி விழரதாமே, யார் மேலயாவது விழுந்தா என்னாறது?

நம்ம வீட்டுக்கும் ஏர்போர்ட்டுக்கும் என்ன சம்பந்தம். இப்போதைக்கு ஒருத்தன் இங்கேயேதான், பொண்ணோ படிச்சிண்டிருக்கா... நமக்கென்ன !"

"இந்த 21G பஸ் ரூட்ட மாத்திட்டானாம். இனிமே மந்தைவெளி தொடாமே அடையார் வழியே போயிடுவானாம்

நம்ப அந்த பஸ்ஸுல போய் எந்தக் காலம் ஆச்சு. இதென்ன வேண்டாத கவலை".

"ரோட்ல ஒரு லைட்டும் எரியல. ஒரே கும்மிருட்டு. யாருமே கண்டுக்கறதில்லை.

நம்ப வீட்ல தான் எல்லோருமே சீக்கிரம் வந்துடறாளே- நமக்கென்ன கவலை!"

.
.
.
.
"என்ன ஏதோ கவலையா இருக்கே போலிருக்கு?

நம்ம பொண்ணோட ஃப்ரண்ட் யாரோ அமெரிக்காலேந்து வராளாம். ஏர்போர்ட்டுக்கு அவ ப்ரெண்ட்ஸோட போவேன்னு பிடிவாதம் பிடிக்கறா.

போட்டுமே, இந்தக் காலத்துல இதெல்லாம் பார்த்தா முடியுமா?

இல்ல.... இருந்த ஒரே நேர் பஸ்ஸோட ரூட்டையும் மாத்திட்டான். ஏர்போர்ட்டுக்கு போயிட்டு  ராத்திரி வேளைலே கொஞ்ச தூரம் நடந்து தான் வரணும். அடிக்கடி கரண்ட் வேற போய் கடை வெளக்குக் கூட இல்லாம ஒரே இருட்டு......"