Tuesday, January 16, 2018

மகன் தந்தைக்கு ஆற்றும் . . . .

ஒரு பிரபல முதியோர் இல்லத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்டங்களை  சில புகைப்படங்கள் மூலம் முகநூலில் பார்க்க நேர்ந்தது .

சில இளம் முதியோர்கள் அரிதாரம் பூசி கண்ணன் வேடமிட்டு குழலூதிக் கொண்டிருந்தனர்

ஒரு பெண்மணி ஏதோ வேடத்தில்  நடித்துக் கொண்டிருந்தார்

நடக்க முடியாத சிலர் முன்வரிசையில் அமர்ந்து கை தட்டிக் கொண்டிருந்தனர்

இன்னும் சிலரின் முகத்தில் இருந்த ஏக்கம்- நன்றாகத் தெரிந்தது.

ஆனால் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு ஒரு சின்ன சம்பிரதாயத் சிரிப்புடன் இருந்த முகங்கள் மனதை பிசைந்தது . கண்டிப்பாக அந்த துக்கத்தின் காரணத்தைக் கண்டு பிடிக்க நோபல் பரிசோ இல்லை பத்மா விருதுகளோ தேவையில்லை . கூட்டத்திலுருந்து  சற்றே  ஒதுங்கி மற்றவர்களுடன் பட்டும் படாமலும் அமர்ந்து ஒரு கடமைக்காக கை தட்டும் பொழுதே தெரிந்தது அவர்கள் இந்த இல்லத்திற்கு சமீபத்தில் வந்தவர்கள் என்று .

ஏக்கம் எதற்கு -
-  குடும்பத்துடன் கொண்டாடிய போன வருட பொங்கலை  பற்றியா?,
-   தன் மகன் சிறு வயதில் பொங்கலன்று செய்த லூட்டி நினைவுகளாலா?
 - நகரின் அந்தக் கோடியில் புது வீட்டுக்கு குடி போயிருக்கும் மகன் என்ன செய்து கொண்டிருப்பானோ என்ற நினைவினாலா ....

சொல்ல முடியவில்லை  ! அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் எண்ணங்கள்.

இப்படிப் பதைக்கும் முதிய உள்ளங்களை தனியே தவிக்க விட்டு தான் மட்டும் தன் இளம் மனைவியுடன்  தனிக்குடித்தனம்  சென்றிருக்கும் மகனின் மன நிலை என்னவாயிருக்கும் -  இருதலைக்கொள்ளி எறும்பா இல்லை விட்டது தொல்லையா ?

இப்படிப்பட்ட  மகனைப் படிக்க வைக்க அப்பா அலுவலகத்திலிருந்து  பின்னிரவில் சைக்கிள் மிதித்ததற்க்கும், அம்மா தையல் மிஷினுடன் ஒன்றிப் போனதற்க்கும் ஒரு அர்த்தமே இல்லையா ?

மாதம் அனுப்பும் முதியோர் இல்லக் கட்டணம் தான் எல்லாவற்றுக்கும் பதிலா , கைமாறா ?

தீபாவளியன்று பட்டாசு பொறி பட்டவுடன் துடித்துப் போய் நான் பற்றிக் கொண்ட , கன்றிப் போன அந்த கை விரல்கள் என் வலிக்கும் முழங்காலுக்கு தைலம் தடவ வராதா ?

படிக்கும் பொழுது இரவில் தூக்கம் வராமலிருக்க டீ போட்டுக் கொடுத்த அம்மாவுக்கு அதே போன்ற ஒரு நள்ளிரவில் மூச்சிரைத்தால் அடுத்த வீட்டுக்காரரோ அல்லது 108ஓ தான் ஆபத்பாந்தவனோ ?

நிற்க முடியாமல் ஒரு பக்கம் கைத்தடியும் அந்தப் பக்கம் மற்றோரு முதியவரும் தாங்கிப் பிடிக்க நின்று கை தட்டிக் கொண்டிருந்த அந்தப்           பெரியவரின் நமுட்டுச் சிரிப்பை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை .

இந்தப் புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கும் போழுது தொலைக்காட்சியில் தோன்றிய தினமும் ஒரு குறள்  - "மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனும் சொல் "  என்பதன் பொருள்  "மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு, `இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.. " என்று விளக்கி வணக்கம் சொல்லுமுன் சிரித்தது என்னைப் பார்த்தோ என்று நான் நினைத்தது ஒரு பிரமையோ ?

11 comments:

  1. "Very good write up Kapali.Bitter truth " - Nirmala Gopalan

    ReplyDelete
  2. "The write up has made my heart heavy."- Venkatesh Jagadessan

    ReplyDelete
  3. "Distressing truth. Not only in old age homes, but even in many homes, elders living a lonely life, between one Skype call to another"- Ms. Manjula

    ReplyDelete
  4. I do agree Mr.kabali. Recently i have seen my first manager in an old age home. I know how he was affectionate with his son. When his son got employment in North East area as a he was reluctant to send him to that far off place. But the same son left him in a old age home not maintained properly and staying nearby area.
    Manoharan c n

    ReplyDelete
  5. அருமையிலும் அருமையான பதிவு.
    ஆனால் என் இதயம் மிகவும் வலிக்கிறது நண்பரே." - Thangam Suresh

    ReplyDelete
  6. "Your thoughts are well intended.
    Consider the flip side on your thoughts.
    At a time when may senior citizens are rudderless these senior care homes provide the much needed solace. Timely food , Medicare entertainment, get together etc.
    Yes they still miss the love of their siblings; but what cannot be helped has to be endured!!" - Mr Venkataraman

    ReplyDelete
  7. Bitter truth about senior citizens living by themselves. Thoughts well articulated Kapalee.
    Hema

    ReplyDelete
  8. "Nice Sir.....awesome" - Mr KSP.Pasupathy

    ReplyDelete