வணக்கம் !
என்னோட முதல் தமிழ்ப் பக்கத்துக்கு வருகை தந்ததற்கு நன்றி.
இந்த முயற்ச்சி ஒரு அரசியல்வாதி போல் செம்மொழியில் எழுதுவதற்க்கல்ல.
என்னுடய செந்தமிழ் இத்துடன் முடிவடைகிறது. என் ஆசையெல்லாம், மனசில் தோன்றும் எண்ணங்களை அப்படியே கொட்டிப் பகிர்ந்து கொள்வதுதான்.
எனக்கு ஏற்கனவே ஒரு ப்ளாக் இருக்கும் போது இன்னொன்று எதற்க்கு ? சில விஷயங்களை உடனே தமிழில்தான் நினைக்கத் தோன்றுகிறது. அப்படியே எண்ணங்களுக்கு வடிவமைக்கலாம் என்றுதான், தமிழ் ப்ளாக் ஒன்று தொடங்கியுள்ளேன்.
எண்ணங்கள் சிறகடிக்கும் போது இந்த வலை இன்னும் விரியும்
நட்புடன் கபாலீஸ்வரன்
23-ஜூன்-2012