tag:blogger.com,1999:blog-10451295690686275382024-03-12T16:47:58.238-07:00சிந்திக்கிறேன்சில எண்ணங்கள் தமிழில் சிந்தித்து, தமிழில் எழுதினால்தான் நிறைவு பெறுகிறது. அத்தகைய சிந்தனைகளின் வடிகால்தான் இந்த வலைப்பூ.
தமிழில் ஆங்கிலேயரின் கணினியில் எழுதுவதில் ஒரு அலாதி பூரிப்புKapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.comBlogger102125tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-44419609892062824972023-12-03T21:44:00.000-08:002023-12-03T21:44:25.157-08:00மழைக்கால ஞானம் <p> வெளியே மழை பின்னிக் கொண்டிருக்கிறது . அநேகமாக காற்று பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் - அதைக் கண்டவுடன் மழை சோவென்று இரைச்சலுடன் அதிகமாக ஒரு கொட்டு கொட்டுகிறது. முன்பெல்லாம் மழை வந்தால் குஷியாக இருக்கும். புயலென்றால் பரம சந்தோஷம் . இத்தனைக்கும் வீட்டிலுள்ள பாத்திரங்களெல்லாம் சொல்ப வாடகை வீட்டிற்குள் வந்து எல்லா அறைகளிலும் தங்கி வருணனின் கொடையை தாங்கிக் கொண்டிருக்கும். அப்படியும் ஒரு சந்தோஷம் . முக்கியமாக பள்ளி கிடையாது. இருக்கும் சின்ன அறையில் அண்ணன் தம்பி அக்கா தங்கை அனைவரும் தஞ்சம். என் காலேஜ் வாத்தியார் அண்ணா கற்பனை சிறகடிக்க வீட்டிலுள்ள போர்வைகளை திரையாக வைத்து உடனே ஒரு நாடகத்தை அரங்கேற்றி விடுவான். கதை வசனம் எல்லாம் அவனே . கடைக்குட்டியான எனக்கு எப்பொழுதும் ஒரு பராக் பராக் சொல்லும் வசனமே .</p><p>எனக்கு நினனவு தெரிந்த முதல் புயல் , 1967 என்று நினைக்கிறேன் நாங்கள் மயிலை கீழ மாட வீதியில் வசிக்கும் பொழுது தான் . வெளியே போய் மழை பார்த்தால் என்ன ஆகும் என்று அப்பாவிடம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே , அருகிலுள்ள தேரின் கூரையிலிருந்து வந்த ஒரு தகரம் சர்ரென்று ராக்கெட் போல் கடந்ததும் அலறி அடித்துக் கொண்டு உள் அறைக்கு ஒடினது இன்னும் தெளிவாக நினைவுக்கு வருகிறது. </p><p>பிறகு வந்த சில புயல் மழையில் சென்னையின் முக்கிய பகுதியில் வசிக்கும் பொழுதும் மின்சாரம், தொலைபேசி இல்லாமல் ஒரு வாரம் தள்ளியது ஒரு புதிய அனுபவம். </p><p>இன்றைய மிஃஜாம் புயல் ஒரு புதிய விழிப்புணர்வைக் கொடுத்தது. வெளியூர்களில், மற்ற நாடுகளில் இருக்கும் உறவெல்லாம் வானிலை செய்தி பார்த்து 'எல்லோரும் பத்திரமாக இருக்கவும். தேவையானதெல்லாம் வாங்கி வைத்தாச்சா - பால், கறிகாய் , மருந்து, மெழுகுவர்த்தி, நொறுக்கு தீனி , இத்தியாதிகள் ' என்று கேட்க இரவில் மழை சத்தத்தை சுகமாக அனுபவித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று விழிப்பு . உய் உய் என்று சத்தத்துடன் ஓர் ஆம்புலன்ஸ் விரைந்தது. இங்கே சிலர் அமைதியாக அடை மழையில் உறங்கிக் கொண்டிருக்க யாரோ உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் . அதையும் விட உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இந்த மழை காற்றிலும் விரையும் அந்த ஆம்புலன்சில் ஓட்டுனர் !?. </p><p>இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போழுதே மின்சாரம் போனது. இரண்டு நிமிடங்களில் மீண்டும் விளக்கு துடித்து வந்தவுடன் மறுபடியும் நினைவுக்கு வந்தவர் கீழ் தளத்தில் உள்ள காவலாளர்- உடனே ஜனரேட்ட்ரை உயிர்ப்பித்து ஒளி கொடுத்தவர் .</p><p>காலை எழுந்தவுடன் முதல் வேலையாக அவரைப் பார்த்து காபிக்கு காசு கொடுத்து , பகல் சாப்பாட்டிற்கும் ஏற்பாடுகள் முடிந்தது என்று தெரிந்ததும் தான் சிறிது நிம்மதி வந்ததது.</p><p> மின்சாரமும், ஒழுகாத கூரையும், சூடான காபியும் நமக்கு மட்டும் இருந்தால் போதாது. நம்மைச் சுற்றி உள்ள காவலாளியும், ஆம்புலன்ஸ் ஓட்டுனரும், தெரு முனையில் உள்ள ஆட்டோக்காரரும் , அயன் பண்ணுபவரும், நாம் தினமும் சந்திக்கும் நம் வீட்டு வேலைக்காரியும் சுகமாக இருந்தால் தான் நாம் நிம்மதி அடைய முடியும் என்பது பளிச்சென்று விளங்கியது. </p><p>இந்த மாதிரி நேரங்களில் நம்மால் முடிந்ததை நாம் செய்தே ஆக வேண்டும் என்ற முடிவுடன் மாடிப்படி ஏறும் பொழுது திரும்பிப் பார்த்தால் வாசல் அருகில் இருந்த காவலாளிக் கூ ண்டு போதி மரம் போல் தெரிந்தது, என் பிரமை தானோ !! </p><p><br /></p><p><br /></p>Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-47062330450293072482023-11-06T07:47:00.000-08:002023-11-06T07:47:36.046-08:00ஓடாத காவேரியில், ஒரு பிடிவாத துலா ஸ்நானம் <p> என் அம்மா ஐப்பசி மாதம் வந்த உடனேயே மிகவும் உணர்ச்சிகரமாக துலா ஸ்நானத்தைப் பற்றி பேச ஆரம்பித்து விடுவாள் . எப்படி ஓடும் ஆற்றில் , முக்கியமாக காவேரியில், ஸ்நானம் செய்வது புண்ணியம் சேர்க்கும் என்று. ஆனால் அந்நாட்களில் இருந்த பல தடைகளினால் முக்கியமாக பொருளாதார தடைக் கற்களால் அவளின் ஆசை ஓரிரு முறையே நிறைவேறியது. மற்ற பணிகளை முடித்து நானும் இதன் பக்கம் திரும்ப ஆரம்பித்து ஐந்து ஆறு வருடங்களாக முயற்சி செய்து மூன்று நான்கு வருஷங்களாக துலா ஸ்நானம் செய்து கொண்டு இருக்கிறேன் .</p><p>'எங்கேயாவது துலா ஸ்நானம்' என்றஆசை நிறைவேறியவுடன் இந்த வருஷம் கடமுகத்துக்கே சிறப்பான மாயூரத்திலேயே (இந்நாளைய மயிலாடுதுறை) ஸ்நானம் செய்ய அவா வந்தது. அதற்கான ஏற்பாடுகளும் செய்து கொண்டிருக்கையில் அங்கிருந்து வரும் செய்திகள் உற்சாகப் படுத்துவதாக இல்லை. ஏற்கனவே அங்கு ஓடும் சிறிய காவேரியில் இம்முறை மிகவும் குறைவாக தண்ணீர் இருப்பதாகவும், அதையும் மீறி ஸ்நானம் செய்ய வருபவர்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் பீச்சீ அடிப்பதாகவும் வந்த செய்திகளினால் இந்த வருட மாயூர முயற்சி கை விடப்பட்டது.</p><p>அந்நாட்களில் சென்னை பஸ்களில் கூட்டமாக இருந்தால் முந்தைய ஸ்டாப்பிலேயே ஏறிக் கொள்வார்கள். அது போல் மாயூரத்தில் இல்லா விட்டால் திருச்சி அகண்ட காவேரியில் தண்ணீர் கொஞ்சமாவது ஓடும் என்று நினைத்து அங்கே போனேன். போகும் பொழுதே என் வண்டி ஓட்டுநர் என்னை ஒரு மாதிரி பார்த்து , 'திருச்சியில் எந்தக் காவேரிப் பக்கம்' என்றார் . நானும் 'ஸ்ரீரங்கம் கீதாபுரம்' என்றேன். அங்கு சென்றதும் ஒரு பத்து பேர்கள் அங்குமிங்குமாக தண்ணீரில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் - விசாரித்ததும் தெரிந்தது கணுக்கால் அளவே தண்ணீர் இருப்பதாகவும் தண்ணீரை விட பாசி அதிகமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு பெண்மணி தொபுக்கென்று வழுக்கி உட்கார்ந்து அதிர்வதைக் காண முடிந்தது.</p><table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto;"><tbody><tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOjig-MOpYvg9AKR6puo-lSeNlpX4ZUONKgzE_0bBqGWTzALqMD7Q8wXo7-Pau3SzeTqVwfK7p1AHDXCX1Db4HO9ySXAkPKTqogW8qh5jPWn9AhGG4PykRYgaRGfC1uiNRxR-y4mghzmZfEbOFEIuzvcrVjBncxj6LWFn29OM-TYc6RDq0-Z8S7XtIoSs/s4032/Sitting.JPG" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="2268" data-original-width="4032" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOjig-MOpYvg9AKR6puo-lSeNlpX4ZUONKgzE_0bBqGWTzALqMD7Q8wXo7-Pau3SzeTqVwfK7p1AHDXCX1Db4HO9ySXAkPKTqogW8qh5jPWn9AhGG4PykRYgaRGfC1uiNRxR-y4mghzmZfEbOFEIuzvcrVjBncxj6LWFn29OM-TYc6RDq0-Z8S7XtIoSs/w640-h360/Sitting.JPG" title="கணுக்கால் அளவே ஆழத்தில் உட்கார்ந்து ஸ்நானம்" width="640" /></a></td></tr><tr><td class="tr-caption" style="text-align: center;">கணுக்கால் அளவே ஆழத்தில் உட்கார்ந்து . . . </td></tr></tbody></table><p> சம்பிரதாயப்படி மூழ்கிக் குளிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றவுடன் , அப்பொழுது தான் ஸ்நானத்தை முடித்துக் கொண்டு கிளம்பிய ஒரு தம்பதி நான் கேட்காமலேயே ஒரு எவர்சில்வர் சொம்பை என்னிடம் நீட்டி இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி நகர்ந்தார்கள். </p><p>மிகக் கவனமாக அடிப்ரதக்ஷணம் செய்வது போல் நகர்ந்து , ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு மனைவியுடன் சந்திரனில் ஆர்ம்ஸ்ட்ராங் போல் நிதானமாக நகர்ந்தேன். கிழக்குப் பார்த்து உட்கார்ந்து ஸ்னானத்தை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் பொழுது அங்கு வந்த ஒரு முதியவர் (எண்பது தாண்டியவராம் - ஸ்ரீரங்கம் கோவிலில் வேத கோஷ்ட்டியில் ஒரு முக்கிய நபர்- கூட வந்த மாமி சொன்னாள் ) சங்கல்ப மந்திரங்கள் சொல்ல, 'கங்கேச யமுனேசைவ கோதாவரி சரஸ்வதீ நர்மதே சிந்து காவேரீ . . . . .' முணுமுணுப்புடன் , இருந்த சொல்ப நீரிலும் ஒரு நிறைந்த துலா ஸ்நானம் நிறைவேறியது . </p><table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left;"><tbody><tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP73Kq4z_v3OAKt9_Muje-NMhRpF-5lZHTIamdVmZBdX8nhH65ZO29PrHc3_K2thU30QhWZOfgaf6KvteUustXNIfyAx3C7KFCLc4ywR-Q8giwNzK0xF93uVMycNnZvfVSFgotDB0AGUOOrHE5YFv09apmb5V3IdUCCJ47PCu8pZqeaB_DpT8wBRA9W3A/s4032/After%20Bath.JPG" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="2268" data-original-width="4032" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP73Kq4z_v3OAKt9_Muje-NMhRpF-5lZHTIamdVmZBdX8nhH65ZO29PrHc3_K2thU30QhWZOfgaf6KvteUustXNIfyAx3C7KFCLc4ywR-Q8giwNzK0xF93uVMycNnZvfVSFgotDB0AGUOOrHE5YFv09apmb5V3IdUCCJ47PCu8pZqeaB_DpT8wBRA9W3A/s320/After%20Bath.JPG" width="320" /></a></td></tr><tr><td class="tr-caption" style="text-align: center;">துலா ஸ்நானம் முடிந்த நிறைவு <br /><br /></td></tr></tbody></table><p>ஸ்நானம் முடிந்தவுடன் அந்த வயது முதிர்ந்த மாமி என் மனைவிக்கு மஞ்சள் குங்கும தாம்பூலம் கொடுத்து, 'ஆற்றின் நடுவே தாம்பூலம் குடுப்பததற்கும் வாங்கிக் கொள்வதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்றவுடன் எங்கள் சிலிர்ப்பு அடங்க வெகு நேரமாயிற்று. </p><p>எங்கிருந்து வந்தார் எனக்கு மொண்டு குளிக்க சொம்பு கொடுத்தவர்?</p><p> எனக்கு சங்கல்பம் செய்து வைத்தது - யார் அந்தப் பெரியவர்?</p><p>தாம்பூலம் கொடுத்த அந்த மூதாட்டி எப்படித் தோன்றினாள் ?</p><p>எல்லாமே கனவு போல் நடந்தது !!</p><p>மனதார சிரத்தையுடன் ஏங்கினால் நினத்ததை அவன் நடத்தி வைப்பான் என்பது இதுதானோ - யாமறியேன் பராபரமே !</p><p><br /></p><p><br /></p>Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-57963008895072443442020-03-23T18:39:00.000-07:002020-03-23T18:39:08.518-07:00அநித்யம் அளிக்கும் அறிவுரைகள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
"என்னால அடுத்த வாரம் வர முடியாது - நான் ஒரே பிஸி"<br />
<br />
"அடுத்த மாசம் ரயில்ல மூணு மிடில் பெர்த்து தான் இருந்துது- புக் பண்ணிட்டேன் . நல்ல வேளை அப்பர் பெர்த்துல எனக்கு மூச்சு திணறும்"<br />
<br />
"ஏப்ரல் கடைசில தான் முந்நூறு ரூபாய் தர்சன் டிக்கட் இருக்கு - இப்பவே முன்பதிவு பண்ணிட்டேன்"<br />
<br />
"அடுத்த வாரம் சனிப் பிரதோஷம் - அப்ப பார்க்கலாம்"<br />
<br />
எத்தனை நம்பிக்கை , எவ்வளவு ஏற்பாடுகள், எவ்வளவு முன் யோசனைகள் - அத்தனையையும் நொடியில் நசுக்கியது - சின்ன கிருமி !<br />
<br />
வெளியூரா போகப் போகிறாய் மூச்சு விட முடியுமா என்று முதலில் பார் என்று ஏளனம் செய்தது எள்ளி நகைத்தது , மனித மூளையினால் கண்டு பிடித்த கருவியில் பெரிதாகத் தெரிந்த அந்தக் கிருமி<br />
<br />
அன்று படித்த "இந்த சின்ன நூல்கண்டா நம்மை சிறைப் படுத்துவது" என்ற புத்தகம் ஞாபகத்துக்கு வருகிறது.<br />
<br />
நம் வாழ்க்கையின் நிரந்தமற்ற தன்மையை நிரூபிக்க இதை விட வேறு எந்த உதாரணம் தேவை ?<br />
<br />
ஆழிப் பேரலை அறிவுறுத்தியது - அலட்சியப் படுத்தினோம் , நாம் தான் கடற்கரைப் பக்கத்தில் இல்லையே என்று.<br />
<br />
பூமி, தன் அதிருப்தியைக் காட்டுவது போல், பலமாக நடுங்கியது - கண்டு கொள்ளவில்லை .<br />
<br />
மற்றவர்களின் நலனைத் துச்சமென மதித்து நான் , என் மக்கள் , என் பணம், என் சொத்து என்னை யார் என்ன செய்ய முடியுமென்று கொக்கரித்த பொழுது -<br />
<br />
என் பண, பதவி பலத்திற்கு முன் யார் என்ன செய்ய முடியும் என்று எண்ணும் பொழுது-<br />
<br />
வலியவர்களின் கொடுமை தாங்காமல் எளியவர்கள் இதற்க்கெல்லாம் ஒரு விடிவே இல்லையா என்று எண்ணிய பொழுது-<br />
<br />
தீயவர் வாழவும் நல்லவர் தாழவும் ... இது தர்மம் தானோ என்று ஒன்றும் செய்ய முடியாமல் நல்லவர்கள் கலங்கிய போது<br />
<br />
நான் இருக்கிறேன் என்று கிளம்பியது ஒரு சின்னக் கிருமி<br />
<br />
என் சக்தி எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள் என்று சவால் விடுவது போல் உலகின் வலியதொரு நாட்டை முதலில் உலுக்கியது<br />
<br />
என்று வேண்டுமானாலும் எதுவும் நடக்கும் என்று சொல்வது போல் உலகின் மிகப் பெரிய சுவற்றை அலட்சியமாகத் தாவி கடல் கடந்து கதி கலங்க வைத்தது<br />
<br />
எத்தனை பணமும் படையும் இருந்தாலும் என் முன்னே வாய் மூடி, நான்கு சுவற்றுக்குள் தான் உன் ராஜ்ஜியம் என்று உலக ராஜா ராணிக்களையும் ஒதுக்குப்ப்புறம் தேட வைத்தது<br />
<br />
கடவுளோ இயற்கையோ , அவரவர் நம்பிக்கையைப் பொறுத்து , நமக்கு மேல் எதோ ஒன்று, நாம் கட்டுப்படுத்த முடியாமல், நம்மையும் நம் ஆசைகளையும் நம் ஆணவத்தையும் நம் அகங்காரங்களையும் நொடிப் பொழுதில் மண்ணில் புதைக்கக் கூடிய சக்தி எதோ ஒன்று இருக்கிறது என்பதை உணர வேண்டிய நேரமா இது ... சிந்திப்போம்<br />
<br />
விஞ்ஞானமும் அறிவியலும் கொடுத்த திமிரில் ஆடுவதை நிறுத்த வேண்டிய நேரமா இது....சிந்திப்போம் <br />
<br />
நான் எனது எனக்கு என்பதைப் புறந்தள்ளி நல்லது, நல்லவை என்பதை உணரும் நேரமா இது .... சிந்திப்போம்<br />
<br />
ஆயிரக்கணக்கான கோடிகளும் இடுப்புத் துணியுடன் அவிழ்த்து விடப்படும் என்பதை அறிவுறுத்தும் நேரமா இது .... சிந்திப்போம்<br />
<br />
நான் எல்லாவற்றிற்கும் மேற்பட்டவன், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது போனற மமதைகளைக் களையும் நேரமா இது ..... சிந்திப்போம்<br />
<br />
என்னை, என் செயல்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை விடுத்து, உன் மனசாட்சியே உன்னை செலுத்துபவன் என்பதை உணரும் நேரமா இது ..... சிந்திப்போம் <br />
<br />
எப்படியோ வாழ்வதை விட என் மனம் அனுமதி அளித்த மற்றவர்களைத் தள்ளி விட்டு , அவர்கள் மேல் ஓடி சம்பாதிக்காமல் என் உழைப்பில் எனக்கு எது கிடைக்குமோ, கிடைத்தது சந்தோசம் என்று உணர்ந்து செல்லும் நேரமா இது ..... சிந்திப்போம் .<br />
<br />
மற்றவர்களின் உணர்வுகளை புண் படுத்தாமல் நான் என் நம்பிக்கையைப் பற்றி வாழ வேண்டிய நேரமா இது .... சிந்திப்போம்<br />
<br />
நாளைப்பொழுதை புறந்தள்ளி இன்று, இந்த நொடிக்காக வாழ வேண்டிய நேரமா இது.... சிந்திப்போம்<br />
<br />
இயற்கை கொடுக்கும் கடைசி வாய்ப்பு ... நழுவ விட வேண்டாம் ... உணர்ந்து, திருந்தி , சிரம் தாழ்த்தி கை கூப்பி நன்றியுடன் நகர்வோம் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன்<br />
<br />
இதுவும் கடந்து போம் !!<br />
<br />
<span style="color: blue;"><span style="font-size: x-small;"><i>குளிர்ந்த இயற்கைக் காற்றை அனுபவிக்க முடியாத , நண்பர்களையும் உறவினர்களையும் அன்பாகக் கட்டித் தழுவ முடியாத, விருப்பத்திற்கு வெளியே செல்ல முடியாத , தடை இன்றி சுவாசிக்க முடியாத, வீட்டுக்குள்ளிருந்தே மற்ற நல்லவர்களுக்கு கை தட்ட வேண்டிய கட்டத்திற்குத் தள்ளப்பட்ட பொழுது வந்த அந்த 2020இன் மார்ச்சு மாதக் காலைச் </i></span><i style="font-size: small;"> </i><i><span style="font-size: x-small;">சிந்தனைகள் </span></i></span><br />
<br /></div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com31tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-55874777347505752392019-07-24T07:36:00.005-07:002019-07-24T07:40:26.338-07:00அத்தி வரதர் அனுபவம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7GazLY4AKKVyNHZQItsCWdTU9qW2pEAQ7MdTgEpM7qXYtJ6HnhlHf_UZbNq_YH-E5fBh4Bh1FtjnmFZh5QTfMJT9b84K90IXOt-4gn7KZmjNEMxmp8l8PkKc00cCkuCE65YYA108Qhic/s1600/Athi_23July2019.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="774" data-original-width="1032" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7GazLY4AKKVyNHZQItsCWdTU9qW2pEAQ7MdTgEpM7qXYtJ6HnhlHf_UZbNq_YH-E5fBh4Bh1FtjnmFZh5QTfMJT9b84K90IXOt-4gn7KZmjNEMxmp8l8PkKc00cCkuCE65YYA108Qhic/s640/Athi_23July2019.jpg" width="640" /></a></div>
<br />
<br />
மாயூரம் காவேரி புஷ்கர், நெல்லை தாமிரபரணி புஷ்கர் என்ற வரிசையில் சமீபத்திய பக்தி மார்க்கத்தின் மற்றுமொரு வழி அத்தி வரதர் தரிசனம். போன வருடமே சில செய்திகள் இதனைப் பற்றி கசிந்தபோதும் நான் இதற்க்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல் இதுவும் ஒரு காலத்துக் கேற்ற திணிக்கப் பட்ட ஒன்று போல என்று சற்றே அலட்சியமாகத்தான் இருந்தேன். ஆனால் ஜூன் மாத முடிவில் இதற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும் இதனால் கவர பட்டவர்களின் அழுத்தங்களும் என்னை மேலும் கூர்ந்து நோக்க வைத்தது. சில பல காரணங்களால் குளத்திலேயே மூழ்கிக் கிடக்கும் அத்தி மரத்தினால் செய்யப் பட்ட இந்தப் பெருமாள் வடிவை நாற்பது வருடங்களுக்கொரு முறை குளத்திலிருந்து எடுத்து சயனித்த கோலத்திலேயே சில நாட்களும் பின் நின்ற கோலத்தில் சில நாட்களும் மக்களுக்கு அருள் பாலிக்கச் செய்து மீண்டும் இந்த சிலை வடிவப் பெருமாளை குளத்திலேயே சேர்த்து விடுவது ஐதீகம் என்று நம்பப் படுகிறது.<br />
<br />
1979ஆம் வருடம் நன்கு புரியக் கூடிய, பக்தியால் உ ந்தப் பட்ட ஒரு இளைஞனாக நான் இருந்தாலும் இந்த நிகழ்வைப் பற்றி எதுவும் கேள்விப் பட்ட ஞாபகமே இல்லை. இன்று போல் தொழில் நுட்பமும் தொலைக் காட்சிகளும் வளர்ந்திராத காலமாக இருந்தாலும் பிரதான செய்திகளைச் சுமக்கும் வாயிலான தினசரிகளும் வானொலியும் இதைப் பற்றி விவரித்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அன்றைய முன்னணிக் கவிஞரான கண்ணதாசன் அத்தி வரதரைப் பற்றிப் பாடிய பாடலாக ஒரு செய்தியும் இன்று உலவிக்கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் இந்த அளவு நிகழ்ச்சி நிரல்களோ , ஊடகங்களின் கவனமோ இல்லாத நிலையில் ஒரு வேளை வெகுவான பக்தியுடைய குறிப்பிட்ட சில பகுதி மக்களும் அன்றும் தரிசித்திருக்கக் கூடும். தொலைக்காட்சி, முகநூல், குறுஞ்செய்திகளின் அபரிமித வளர்ச்சி, உபயோகங்கள், மக்களை சென்றடையக் கூடிய சாத்தியங்கள், பெருகி வரும் வியாதிகள், தொல்லைகள், மன உளைச்சல்கள், அதிகமாகப் புழங்கும் காசு இப்படிப் பல விதங்களில் உந்தப் பட்டு, மக்கள் இன்று காஞ்சிபுரத்தை நோக்கி அத்தி வரதரைக் காண விரைவது கொஞ்சம் புரிய வைக்கிறது.நிற்க.<br />
<br />
கூடி இருந்த சுற்றத்தின் அழுத்தத்தினாலும், உடம்பில் உள்ள தெம்பினாலும் நிறைய இருந்த நேரத்தினாலும், உள்ளே ஊறிக் கொண்டிருக்கும் பக்தியினாலும் (இதே வரிசையில்தான் என்று அடிக்கோடிட ஆசைப் படுகிறேன்), எந்த விதத்திலும் சராசரி மனிதனுக்கு குறையாதவன் என்ற வகையிலும் நானும் நகரேஷு காஞ்சி நோக்கிப் பயணப் பட்டேன்.<br />
<br />
கூட வந்த நண்பர்கள் குடும்பமும், சற்றே மேகங்களுக்குள் ஒதுங்கி ஓய்வெடுக்க முடிவு செய்த சூரியனாரும், இந்த மாதத்திலேயே எட்டாவது முறையாக காஞ்சிக்கு வரும் ஓட்டுனரும் ஒத்துழைக்க அதிகாலையில் சென்னையிலிருந்து கிளம்பிய இன்னோவா காஞ்சிபுரத்துக்கு வெளியே உள்ள ஹோட்டலில் தான் நின்றது. நம்மவர்களுக்கு வாயில் உள்ள வீச்சு வேலையில் இல்லை. முப்பது பேர் பசியுடன் வர சாவகாசமாக எட்டு மணிக்குத் திறந்த உணவகத்தில் சாப்பிட ஒன்றுமே இல்லை. உக்கிராண அறைக்கு உள்ளே போய் தேவைப் பட்டதை எடுத்துக் கொண்டு சாப்பிட்ட வகைகளுக்கும் நாமே கணக்குப் பண்ணிக் கொடுத்த காசை சமர்த்தாக வாங்கி உள்ளே போட்டார், என்னமோ வங்கியில் வேலை செய்யும் கேஷியர் போல பெருமிதத்துடன் லேட்டாக வந்து கல்லாவில் அமர்ந்தவர். இதே அண்டை மாநிலத்து அயராது உழைக்கும் மக்களாக இருந்திருந்தால் 'இடாலி' செய்யத் தெரியா விட்டாலும் தெருவுக்கு தெரு கடைகள் திறந்து அதிகாலை நான்கு மணிக்கே சாயா கொடுத்து அசந்து (அசத்தி) இருப்பார்கள்.ஆங்காங்கே நிறைய போலீஸ் தலைகள் தடுக்கப் பட்ட சந்துகளுக்குள் நுழைய பார்க்கும் ஆட்டோக்களுடன் போராட, சிலர் மும்முரமாக ரோட்டோரத்தில் முளைத்திருந்த கையேந்தி பவன் சாம்பாருக்குள் இட்லியைத் தேடிக் கொண்டிருந்தனர் ("என்ன சார் பண்ண காலீல மூணு மணிக்கே லைன்ல வந்துட்றாங்க"- பாவம் போலீஸ்!)<br />
<br />
நவம்பர் தோறும் வங்கி பென்ஷனர்கள் அசட்டுத்தனமாக 'நான் உயிரோடுதான் உள்ளேன் ஐயா ' என்று உறுதிப் படுத்துவது போல இங்கும் குறிப்பிட்ட இடத்தில், சொன்ன நேரத்திற்குப் போய் நானும் 'வெகு முக்கியமான ஆசாமி ' தான் என்று சொல்லி அதற்க்காக 'வாங்கி' இருந்த ஆதாரத்தை வந்தவர் காண்பிக்க ஒரு முக்கியதாரர்கள் வரிசையில் செலுத்தப் பட்டோம் ('அவசரப் படாம போங்க. சி எம் வர்றதுனால கூ ட்டமே இல்ல - போலீஸ்காரி) . இலவச வரிசையில், சூப்பர் ஸ்டாரைப் பார்த்த ரசிகர்கள் போல் உணர்ச்சி வசப்பட்டு, பக்திப் பரவசத்தில் மக்கள் கோவிந்தா நாமங்களை எழுப்ப, இந்த வரிசையில் இருந்த குறைந்த தள்ளு முள்ளால் கொஞ்சம் நிதானமாக அத்தி வரதரை தரிசனம் செய்ய முடிந்தது. கண்ண மூடி அயர்ந்து கிடைக்கும் பெருமாளுடன் செல்ஃபீ எடுத்துக் கொள்வதில் என்ன அவ்வளவு பெருமை என்று தெரியவில்லை-இத்தனைக்கும் படம் எடுத்தால் செல் போன் பறித்துக் கொள்ளப்படும் என்று மூலைக்கு மூலை ஒட்டப்பட்டிருக்கும் அறிவிப்பையும் தாண்டி இவைகள் நடந்து கொண்டிருக்கின்றன.<br />
<br />
தரிசனத்தின் பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் வெளியே வந்த பொழுது பெருமாள் பள்ளி கொண்டிருந்த இடத்திற்கு சில அடி தூரத்திலேயே காவலர்கள் சிலர் கோவிலுக்குள் காலணியுடன் உலவியது அதிர்ச்சியையும் கோபத்தையும் பெருக்கியது.<br />
<br />
தரிசனம் முடிந்து வெளியே வந்த உடனேயே மீண்டும் ஒரு கும்பல் உருவாக்கிக் கொண்டிருந்தது.இங்கு ஏதும் சன்னதி இல்லையே என்று எட்டிப் பார்த்தால் பிரசாதம் விற்றுக்(!) கொண்டிருந்தார்கள்-நெரிசலைச் சமாளிக்காமல் ஊதிப் பெருசாக்கும் முயற்சி ஏமாற்றத்தை அளித்தது.<br />
<br />
சிறிது தூரத்தில் மற்றுமொரு நீண்ட வரிசை அங்கு இருந்த நான்கு பொதுக் கழிப்படத்திற்கு அடிவயிற்று கனத்துடன் காத்திருந்தது. உள்ளே சென்று வந்தவரின் கணிப்புப்படி 'போகாமல் இருப்பதே நல்லது. சென்று திரும்புவது வியாதியை வரவழிக்கக் கூடும்'. <br />
<br />
'ஆறிலிருந்து ஒன்பது மணி வரை ஆகும் என்று பயமுறுத்தப் பட்டது எப்படி பதினைந்து நிமிடங்களில் சாத்தியமானது' ??? - உள்ளே ஒரு நம்பகமில்லா உணர்வும் எழுந்தது.<br />
<br />
நம்ப முடியாத புளகாங்கிதம், அதிர்ச்சி, கோபம், ஏமாற்றம் போன்ற உணர்ச்சிப் பிழம்பாக நான் வந்த வாகனத்தை நோக்கி நகர்ந்த பொழுது மோதிய எண்ண அலைகள் வெகுவாகச் சிந்திக்க வைத்தது. உணர்வுகளை அமைதிப் படுத்தியதும் எழுந்த சில எண்ணங்கள்:<br />
<ol style="text-align: left;">
<li>முப்பத்தொன்பது வருடங்களில் இந்த அளவு ஏற்பாடு தான் செய்ய முடிந்ததா? </li>
<li>இதைவிடப் பன்மடங்கு கூட்டத்தை சமீபத்திய மஹாமகத்தில் சமாளித்த அனுபங்கள் எங்கே போயிற்று? </li>
<li>இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை என்பது ஏற்புடையதா?</li>
<li>இப்படிப்பட்ட ஜனத்திரளில் முதலில் தரம் குறைவது சுகாதாரம் தான் - இதைக் கருத்தில் கொண்டிருந்தால் இவ்வளவு குப்பைகளும் தெருவோர அசிங்கங்களும் தவிர்க்கப் பட்டிருக்கலாமே - திருப்பதி போன்ற இடங்களிலிருந்து சுத்தமான கழிவறைகளை மக்களுக்குக் கொடுப்பது எப்படி என்று அறிந்திருக்கலாமே! </li>
<li>சராசரியாக மூன்று மணி நேரத்திற்கு மேல் எவருக்கும் எழும் இயற்க்கை உபாதையை ஏன் கருத்தில் கொண்டு வசதிகள் செய்யப் படவில்லை? </li>
<li>எனக்குத் தெரிந்து காவல் துறையை குறை சொல்வதில் எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. மிகவும் அலைக்கழிக்கட்ட அவர்கள், நான் பார்த்த வரையில், இருக்கும் அதிகாரத்திற்குள் பல குறுக்கீடுகள் இடையே முடிந்தவரை செய்கிறார்கள் என்றே சொல்வேன்</li>
<li>நேற்று வரை முப்பது லக்ஷம் பேர் வந்த இந்த இடத்தில், எந்த விதமான சோதனைகளும் நடத்தப் படாதது ஏன் என்று புரியவில்லை - இதே அளவு கூட்டம் வரும் பல கோவில்களிலும் கருவிகள் கொண்டு உடல் முழுவதும் வருடி ஆயுதங்களுக்கான பரிசோதனை நான் சென்ற வரிசையில் நடை பெறாதது ஆச்சரியமாக இருக்கிறது!!</li>
<li>பணமும் செல்வாக்கும் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றி முக்கிய புள்ளிகளுக்கு அளிக்கும் சலுகைகளை ஏன் ரத்து செய்யக் கூடாது. இல்லையென்றால் குறைக்கவாவது செய்யலாம். இவைகள் இருந்தால், இருக்கப் பட்டவர்கள் உபயோகப் படுத்தத்தான் செய்வார்கள் - அவர்களைக் குறை சொல்ல முடியாது. ஆனால் திருப்பதி போன்ற இடங்களிலேயே இதைச் செய்ய முடியாத போது 48 நாட்கள் கூத்தில் எவ்வளவு செய்ய முடியும்?! </li>
</ol>
<div>
வரதனைக் கண்டு திருப்திப் பட்ட மனம் ஏனோ அமைதி இல்லாமல் இவ்வளவு சங்கடங்களையும் அசை போட்டுக் கொண்டிருக்கிறது . </div>
<div>
<br /></div>
<div>
குறை கூறுவது நோக்கமல்ல - அதனால் சாதிக்கப் போவது எதுவும் அல்ல. </div>
<div>
<br /></div>
<div>
ஆனால், முக்கியமாக, இப்படிப்பட்ட அனுபவங்களை அடுத்து வரும் நிகழ்வுகளுக்குக் கொண்டு சென்றாலே, மாற்றங்களும் முன்னேற்றங்களும் வரும் - நடக்கும் என்று நம்புவோம் !!</div>
</div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-25338673590720895682019-07-22T04:08:00.000-07:002019-07-22T04:08:59.081-07:00சிரிக்க சிந்திக்க -2019<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
நகைச்சுவை மன்றத்தில் சிரிக்கத்தான் முடியும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி !!</div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
சபை ஒழுக்கம், நேரம் தவறாமை, சபை நாகரிகம் அனைத்திற்கும் கட்டியம் கூறி, மேற்கோள் காட்டியது ஹியூமர் கிளப்பின் திருவல்லிக்கேணி கிளையின் 36ம் ஆண்டு விழா - இதற்க்கு மேல் சிரிக்கவும் வைத்து திறமை வாய்ந்த சாதனையாளர்களை அழைத்துப் பேசச் சொல்லி சிந்திக்கவும் வைத்தது. </div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
இளம் வைஷ்ணவி சாந்தியை நிலவ விட்டவுடன் வழக்கமான கலகலப்புடன் 'No one wants to displease anyone by saying what is wrong' , 'I is' , Pristine போன்ற உதாரணங்களால் ராமச்சந்திரன் ஐயா சபைக்கு தன் பல வருட பேராசிரியரின் அனுபவங்களை அடிக்கோடிட்டுக் காட்டினார் - 'Serial Killer' மூலம் சிரிக்கவும் வைத்தார் .</div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
ஏற்புரை நிகழ்த்திய பலரும் தான் எப்படி இந்த அங்கீகாரத்திற்கு தகுதியானவர்தான் என்பதை இரத்தன சுருக்கமாக சொன்னார்கள் </div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
கண் மருத்துவர் விஜய் ஷங்கர் பெரிய குரலில் எப்படி பல்லாயிரம் பேர்களுக்கு தன் தந்தையின் விருப்பப் படி பார்வை கொடுத்தார் என்பதைக் கேட்க கேட்க அரங்கில் மேலும் பல கண்கள் சொட்டு மருந்து போடாமலே விரிந்தன .</div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
வழக்கறிஞராகவே பார்த்துப் பழக்கப்பட்ட சுமதியின் எழுத்துத் திறன் 'கல் மண்டபம் ' என்ற புத்தகம் எழுதும் அளவுக்கு விரிந்தது என்பது பார்வையாளர்களுக்கு மற்றுமோர் ஆச்சரியம் . <span style="font-family: "arial" , "helvetica" , sans-serif;">அன்னாரின் பல குரல் </span><span style="font-family: "arial" , "helvetica" , sans-serif;">பேச்சுத் திறமையைக்</span><span style="font-family: "arial" , "helvetica" , sans-serif;"> கேட்டுக் கொண்டே '</span><span style="font-family: "arial" , "helvetica" , sans-serif;">மனோரமாவின் கடைசி உரையை' </span><span style="font-family: "arial" , "helvetica" , sans-serif;">யூ டியூபில் தேட வேண்டும் என்று </span><span style="font-family: "arial" , "helvetica" , sans-serif;">பலரும் குறித்துக் கொண்டனர்.</span></div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
<span style="font-family: "arial" , "helvetica" , sans-serif;"><br /></span></div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
நித்யஸ்ரீ பாடுவதைப் போலவே இனிமையாகப் பேசினாலும் அவரும் மேடையில் இருந்த உன்னி கிருஷ்ணனும் ஓரிரண்டு வரிகளில் அவர்களின் குரல் வளமையைக் காட்டாதது இசை ரசிகர்களுக்கு ஏமாற்றமே </div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
பின் கர்ஜித்த பர்வின் சுல்தானா என்ற பெண் சிங்கம் வழக்கம் போல் தன் பரந்த அறிவினால் அனைவரையும் பிரமிக்க வைத்தார் . மருந்துக்கடை ஊழியர் எப்படி விபத்தில் சிக்கிய தன் மகனுக்கே காசில்லாமல் மருந்து கொடுக்க மறுத்ததை எண்ணி கதறிய கதையைச் சொல்லி அனைவரையும் அதிர வைத்து Contactக்கும் Connectக்கும் உள்ள வித்தியாசத்தை அருமையாகப் படம் பிடித்துக் காட்டினார். "உன் காரணங்களால் இறைவன் உன்னைத் தோற்கடிக்கும் பொழுது காரணங்கள் மேல் ஏன் கோபம் வருவதில்லை" என்று சிந்திக்க வைத்து , முடியவில்லை என்றால் 'வீட்டுக்குப் போய் யோசியுங்கள்' என்று கூறி வீட்டுப் பாடமும் கொடுத்து அசத்தினார் </div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
கடைசியில், குறைந்த நேரத்துடன் பேச வந்த புலவர் இராமலிங்கம் ஸ்லாக் ஓவரில் வரும் பேட்ஸ்மன் போல் கொடுத்த நேரத்தில் விளாசியதில், வீட்டுக்குப் போக எழுந்தவர்களும் மீண்டும் அமர்ந்தனர். அதிருஷ்டம் செய்தவர்கள்தான் - இல்லையென்றால் ஒரு அருமையான சர வெடிச் சிரிப்புச் சொற்பொழிவை தவற விட்டிருப்பார்கள் . 'தண்ணீரில் அவர் மூழ்கினாலும் தமிழைக் கரை சேர்த்தவர்' என்று ஒற்றை வரியில் கண்ணதாசனுக்குப் புகழாரம் சூட்டி விட்டு சிந்திக்கவும் வைத்தார் . இதைக் கேட்டபின் மறுபடியும் பேராசிரியர் ராமச்சந்திரனின் 'சென்னையில் தண்ணி தாராளமாகத்தான் கிடைக்கிறது, தண்ணீர் தான் பஞ்சம்' என்ற வார்த்தைகளை எண்ணி மீண்டும் புன்னகைக்க முடிந்தது </div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
சொன்னபடி சரியாக நான்கு மணிக்கு ஆரம்பித்து நாங்கள் கொடுத்த நொறுக்கு தீனி வகையறாக்களை மென்று கொண்டே நகைச்சுவையையும் ரசிக்க இதுவே சரியான நேரம் என்று சொல்லாமலேயே ஒரு புரிதலின்படி எட்டு மணிக்கு முடித்த ஒரு ஒழுங்கைப் பாராட்டியே ஆக வேண்டும் . இருந்தாலும் முன்னே பேசியவர்களின் நிதானப் பேச்சை கொஞ்சம் கட்டுப் படுத்தி பின்னவர்களுக்குப் பகிர்ந்தளித்திருந்தால், மற்றவர்கள் நேரமில்லாமல் அவதி பட்டிருக்கவும் வேண்டாம், உறுப்பினர்களின் ஏமாற்றத்தையும் குறைக்க ஏதுவாக இருந்திருக்கும் . முன்னே பரிமாறிய பாயசத்தை அளவில்லாமல் கொடுத்ததில் பின் வரும் பதார்த்தங்களை சாப்பிட கி வா ஜ சொன்னது போல் இன்னொரு வயிறு தான் தேவை !!</div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
ஆயிரம் நிறைகளிருந்தும் கையளவே குறைகள் தென்பட்டாலும் சீதாராமன் , சேகரன், கண்ணன் மூவரணியின் கடுமையான உழைப்பினால் பரிமாறிய விருந்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். </div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
<br /></div>
<span style="font-size: x-small;">அதே போல் வந்த உறுப்பினர்களும் மிகுந்த பொறுமையுடன் வரிசையில் ஒழுக்கம் காட்டி நின்று நாம் நினைத்தால் எப்படி கட்டுப்பாட்டுடன் இருக்கலாம் என்று காண்பித்தார்கள். உன்னி கிருஷ்ணனின் 'நியாயமா இது நியாயமா , ஆண்டுக்கு ஒருமுறைதான் தெரிவது நியாயமா'<span class="gmail_default" style="font-family: "arial" , "helvetica" , sans-serif;"> </span>என்று <span class="gmail_default" style="font-family: "arial" , "helvetica" , sans-serif;">ஐ</span>யப்பனை நோக்கி கேட்கும் கேள்வி<span class="gmail_default" style="font-family: "arial" , "helvetica" , sans-serif;">,</span> ஹியூமர் கிளப்புக்கும் சரியாகப் பொருந்தும்.</span><br />
<br />
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
<span style="font-family: "arial" , "helvetica" , sans-serif;">இவர்களின் பிரமிக்க வைக்கும் அறிவிப்</span><span style="font-family: "arial" , "helvetica" , sans-serif;">பா</span><span style="font-family: "arial" , "helvetica" , sans-serif;">கக் காட்டிய அடுத்த ஆண்டு </span><span style="font-family: "arial" , "helvetica" , sans-serif;">வருடாந்திர</span><span style="font-family: "arial" , "helvetica" , sans-serif;"> நிகழ்ச்சியாக அறிவித்த ஜூலை 19ம் தேதிக்கு இப்போழுதே மனம் </span><span style="font-family: "arial" , "helvetica" , sans-serif;">ஏங்க</span><span style="font-family: "arial" , "helvetica" , sans-serif;"> ஆரம்பித்து விட்டது</span> </div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
<br /></div>
<div class="gmail_default">
<span style="font-family: "arial" , "helvetica" , sans-serif; font-size: x-small;">இவர்கள் நகைச்சுவைத் தரத்தை சீராகத்தான் வழங்குகிறார்கள் என்பதற்கான சாட்சி இவர்களின் 2016ம் ஆண்டின் விழாவைப் பற்றிய என் கருத்துக்களை இதைச் சொடுக்கி</span><span style="font-family: arial, helvetica, sans-serif; font-size: x-small;">ப்</span><span style="font-family: arial, helvetica, sans-serif; font-size: x-small;"> படித்துத் தெரிந்து கொள்ளலாம் : </span><a href="https://chinthikkiren.blogspot.com/2016/07/blog-post_18.html" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">சிரிக்க சிந்திக்க -2016</a><span style="font-family: arial, helvetica, sans-serif; font-size: x-small;"> </span></div>
<div class="gmail_default" style="font-family: arial, helvetica, sans-serif; font-size: small;">
<br style="background-color: white; color: #222222;" /></div>
</div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-32470171310093716332018-12-27T13:58:00.001-08:002018-12-28T07:07:46.625-08:00அங்கும் இங்கும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மதியம் மணி மூன்றாகினும் ஒரு அரை இருட்டு, பிசு பிசு தூறல், வெற்று உடம்புக்குத் தாங்காத குளிர் , ஜன்னல் கண்ணாடியின் மேல் பாசத்தோடு படர்ந்து <span style="background-color: white;">பிரிய</span> மறுக்கும் பனித்துளிகள். படிக்கப் புத்தகம், பக்க வாட்டில் சில கரகர மொறுமொறு வகையறா, துணைக்கு இளையராஜா குழு நவீனின் புல்லாங்குழல் மெல்லிசை, அருகில் ஆவி பறக்கத் தன் நேரத்துக்கு காத்துக் கிடந்த பில்டர் காபி , பல வருடங்களுக்கு முன் போன மூணார் விஜயம் நினைவில் வந்து போனது .<br />
<br />
இப்படிப் பட்ட சூழ்நிலைக்குத் தானே இவ்வளவு நாட்கள் சென்னையில் ஏங்கியதுண்டு, பின் என்ன குழப்பம் என்று உள் மனம் வினவியது. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் என்று மனதில் தோன்றிய 'ஞான ஒளி', இதுவே சென்னையாய் இருந்தால் எப்படி இருக்கும் என்றும் அசை போடத் துவங்கியது .<br />
<br />
அருகில் வசிக்கும் நண்பர்களின் அரைத் தூக்கத்தைக் கெடுத்து எங்கே போகலாம் என்று குழம்பி முடிவுறாத நிலையில் சந்தித்து கமல் முதல் கிரிக்கெட் வரை டீக் கடைகளில் அலசி சீனு மோகன் மறைவினால் ஞாபகப் படுத்திய கிரேசி குழுவினர்களிடையே ஒரு உலா வந்து வீடு திரும்புவதற்குள் மாலை முடிந்திருக்கும்!<br />
<br />
என்ன செய்வது , கனவு காண்பதோ தொலை தூரத்திலுள்ள டிசம்பரிலும் நல்ல சீதோஷ்ண நிலை என்று பெயர் பெற்ற டெக்சாஸ் மாநிலத்திலிருந்து . ஆனால் இந்தக் குளிரே கொஞ்சம் சோதித்துதான் பார்க்கிறது. அருகிலுள்ள சுற்றத்தாரின் கேள்விக் கணைகளுக்கும், நக்கல் பார்வைக்கும் எண்பதுகளில் நடு இரவில் மலைப் பிரதேசங்களில் நண்பர்களுடன் உலாவிய கதையைச் சொல்லி மாளவில்லை ; இருந்தும் கடந்து போன முப்பத்துச் சொச்ச வருடங்களை கணக்கில் கொள்ள மறுக்கிறார்கள்.<br />
<br />
சரி சட்டையை மாட்டிக் கொண்டு பொடி நடையாகப் போய் டீ குடித்து அப்படியே மத்தள நாராயணன் தெரு கடை வெங்காய பக்கோடா வாங்கலாம் என்பதற்காவது வழி இருக்கா... . ஹுஹும் முடியவே முடியாது ! துணை இல்லாமல், பாக்கெட்டில் பேப்பர்கள் இல்லாமல் நகரவே முடியாது.<br />
<br />
வாநிலை பார்த்து, உடை பல அணிந்து, நைக்கியை மாட்டி, காதுகளை மறைத்து வெளி இறங்கினால் சட்டென்று மாறிய மேகங்கள் இடியுடன் கண்ணடித்து மிரட்டும். அதையும் மீறி நடுங்கிக் கொண்டே சில நேரம் நடந்து, பாக்கெட்டில் விட்ட கைகளை பிடிவாதமாக வெளியே எடுக்காமல், எப்பொழுதும் புன்னகைக்கும் எதிரே வரும் பாதசாரிகளையும், வேலை முடிந்து வீட்டுக்கு மென்று கொண்டே காரில் போகும் பெண் மணிகளையும் ( ஆமாம் இந்த ஊரில் என்ன பெண்கள் மட்டும் தான் கார் ஒட்டுகிறார்களா ?நான் பார்த்ததில் அநேகம் அவர்களே! இல்லை, என் குறும்புக்கார நண்பன் சொன்னது போல் அவர்கள்தான் டாண் என்று ஐந்து மணிக்கு கிளம்பி விடுகிறார்களா??!! ) கடந்து வீடு திரும்பி முக நூலில் ஸ்டேட்டஸ் போட்டவுடன் வருமே ஒரு திருப்தி - மேரி கோம் கூட அவ்வளவு பெருமை பட்டிருக்க மாட்டார் !!<br />
<br />
என்ன செய்வது இங்கிருப்பது அங்கில்லை , அங்கிருந்தால் இதற்க்கு ஏங்கும் மனத்தின் தொல்லை. 'உள்ளதைக் கொண்டு திருப்திப் படுடா பேப்பட்டி மகனே' என்று சொல்லும் அம்மாவின் குரல் கேட்கிறது. </div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-8129101610463807462018-04-23T07:10:00.001-07:002018-04-23T07:10:19.040-07:00கூழும் மீசையும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சில வருஷங்களுக்கு முன் என் நண்பன் இன்றைய வழக்கமான வருடாந்திர உடல் பரிசோதனைக்காக ஒரு பெரிய ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தான். எல்லா டெஸ்ட்டுகளும் முடிந்த பின், நிறைய ரூபாய்க்கு சிறிய ப்ளாஸ்டிக் அட்டையைத் தேய்த்ததும், ஒரு வயதான டாக்டர் வந்தார். எல்லா ரிபோர்ட்டுக்கக்ளையும் கூர்ந்து கவனித்து விட்டு, அவனைப் படுக்கவைத்து அடி வயிற்றை கொஞ்சம் அமுக்கிய பிறகு, சினிமா டாக்டர் போல் ஒரு தடவை மூக்குக் கண்ணாடியை கழற்றி மாட்டியபின், சிரிக்காமல் சொன்னார் "எல்லாம் சரியாயிருக்கு- இரண்டு வருஷம் கழிச்சு மறுபடியும் வாங்க" . விடை கொடுத்த போது, அவனுக்குக் கொஞ்சம் ப்ரஷர் எகிறி, மீண்டும் சீரானது. இப்படியும் தப்பிக்கலாம்.<br />
<br />
இன்னொரு உறவினருக்கு Tread mill லில் ஏறியவுடன் இரத்த அழுத்தம் ஏதோ பன்சரான லாரி போல் தாறுமாறாக அலைந்தது. பின்னர் எடுத்த மார்பு எக்ஸ்ரேயில் ஏதோ ஒரு புகை மண்டலத்தைப் பார்த்த டாக்டர் " நிறைய வாயு (கேஸ்) " என்று சொல்லி " நீங்கள் விருப்பப் பட்டால் அதற்க்கான வாயு நிபுணரைப் பார்க்கலாம்" என்று சொல்லி முடிவை நோயாளியின் கையில் கொடுத்து அனுப்பினார்.<br />
<br />
இந்த மாதிரி டெஸ்ட்டுக்கள் எடுத்தாலே அடுத்த சில ஆயிரங்களுக்கு டாக்டர்கள் ரூட்டு போடுவார்கள் என்று சொல்லி, பாட்டி சொன்ன பெருங்காயம், மோருடன் சும்மா இருந்து விட்டார்கள். சில மாதங்களுக்குப் பின் நிறைய இருமலுடன் மறுபடியும் சோதித்துப் பார்த்த போது தெரிந்தது அது கேஸ் இல்லை- நீர் என்று. மூன்றாம் நிலை புற்று நோய் எனக் கண்டு பிடித்து, சில காலம் வெறுமையாகப் போராடி அடங்கிப் போனார்.<br />
<br />
வாயில் வரும் புண், வெறும் சூட்டினாலும் இருக்கலாம். கொஞ்சம் உப்புப் தண்ணீரும், மணத்தக்காளியுடனும் போய் விடலாம். இல்லை அது வேறு ஏதாவது நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.<br />
<br />
மலத்துடன் ரத்தப்போக்கு, வெயில்காலத்துக்கே உரிய சூடாகவும் இருக்கலாம், அல்லது மூலமாகவும் இருக்கலாம்.<br />
<br />
விடா இருமல் சீதோஷ்ணத்தினாலும் இருக்கலாம், வேறு ஏதாவதுக்கு அறிகுறியாகவும் இருக்கலாம்.<br />
<br />
ஆனால் இதில் முக்கியம், இதை யார் தீர்மானிப்பது என்பதுதான்.<br />
<br />
வருடாந்திர சோதனை என்பது நம்முள் மறைந்திருக்கும், நமக்கும் தெரியாத நோய்களை அறியத்தான். அறிந்தால் மட்டும் போதாது, அதற்க்கான தொடர் நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.<br />
<br />
சில டாக்டர்கள் நன்றாகச் சோதித்து, பயப்படாமல் இருக்கச் சொல்லித் தட்டிக் கொடுத்து அனுப்புகிறார்கள்.<br />
<br />
சிலர் அவரின் நர்சிங் ஹோமுக்கு போர்ட்டிகோ கட்டவும் மேஸ்த்ரிக்குச் சொல்லி அனுப்புகிறார்கள்.<br />
<br />
எல்லாத் தொழில்களிலும், ஒரு சில கருப்பு ஆடுகள் இருக்கத் தான் செய்கின்றன. அதற்க்காக எல்லா மருத்துவர்களையும் சந்தேகத்துடன் பார்ப்பதும் சரியல்ல.<br />
<br />
மற்றமொரு கொடுமை வைத்தியரின் எண்ணம் காசு பிடுங்குவது இல்லை என்றாலும் சொல்ல வந்ததை சரியாக நோயாளிக்கு புரியுமாறு சொல்லாதது - இது அன்னாரின் கையாலாகாததனமாக இருந்தாலும் நோயாளியின் விதி என்றே சொல்ல வேண்டும். வாயுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உத்தேசமாக கணிப்பதை தவிர்த்து விளையாடுவது மனித உயிருடன் என்ற நினைப்பில் எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு நிபுணரிடம் மேலும் ஆராய அனுப்பும் வைத்தியர் கிடைத்தால் விதியை வைத்தியரின் மதியால் வெல்லலாம் .<br />
<br />
நமக்கு வாய்க்கும் டாக்டருக்காகப் பிரார்த்திப்பதோடு, கொஞ்சம் கவனமாகத் தேர்ந்தெடுக்கவும் வேண்டும். என்ன இருந்தாலும் இது நம் உடம்பல்லவா?<br />
<br />
இன்னும் சிலருக்கு என்ன சொல்லி விடுவார்களோ என்றும் பயம். அதற்க்காகச் சோதனையே செய்யாமலிருப்பதும் நல்லதல்ல.<br />
<br />
குளத்தோட கோவித்துக் கொண்டு, கால் அலம்பாமல் இருக்க முடியுமா? காலில் உள்ள சேறு நமக்குத்தானே அருவறுப்பு.<br />
<br />
ஆனால் கொஞ்சம் சமயோசிதத்தால் "கூழுக்கும் ஆசைப்படலாம், மீசைக்கும் ஆசைப் படலாம்".<br />
<br />
கொஞ்சம் ட்ரிம் செய்தால் போதும்- மீசையை அல்ல, மூளையை !!</div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-87786525345111889582018-01-16T02:04:00.001-08:002018-01-16T02:14:19.259-08:00மகன் தந்தைக்கு ஆற்றும் . . . . <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு பிரபல முதியோர் இல்லத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்டங்களை சில புகைப்படங்கள் மூலம் முகநூலில் பார்க்க நேர்ந்தது .<br />
<br />
சில இளம் முதியோர்கள் அரிதாரம் பூசி கண்ணன் வேடமிட்டு குழலூதிக் கொண்டிருந்தனர்<br />
<br />
ஒரு பெண்மணி ஏதோ வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார்<br />
<br />
நடக்க முடியாத சிலர் முன்வரிசையில் அமர்ந்து கை தட்டிக் கொண்டிருந்தனர்<br />
<br />
இன்னும் சிலரின் முகத்தில் இருந்த ஏக்கம்- நன்றாகத் தெரிந்தது.<br />
<br />
ஆனால் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு ஒரு சின்ன சம்பிரதாயத் சிரிப்புடன் இருந்த முகங்கள் மனதை பிசைந்தது . கண்டிப்பாக அந்த துக்கத்தின் காரணத்தைக் கண்டு பிடிக்க நோபல் பரிசோ இல்லை பத்மா விருதுகளோ தேவையில்லை . கூட்டத்திலுருந்து சற்றே ஒதுங்கி மற்றவர்களுடன் பட்டும் படாமலும் அமர்ந்து ஒரு கடமைக்காக கை தட்டும் பொழுதே தெரிந்தது அவர்கள் இந்த இல்லத்திற்கு சமீபத்தில் வந்தவர்கள் என்று .<br />
<br />
ஏக்கம் எதற்கு -<br />
- குடும்பத்துடன் கொண்டாடிய போன வருட பொங்கலை பற்றியா?,<br />
- தன் மகன் சிறு வயதில் பொங்கலன்று செய்த லூட்டி நினைவுகளாலா?<br />
- நகரின் அந்தக் கோடியில் புது வீட்டுக்கு குடி போயிருக்கும் மகன் என்ன செய்து கொண்டிருப்பானோ என்ற நினைவினாலா ....<br />
<br />
சொல்ல முடியவில்லை ! அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் எண்ணங்கள்.<br />
<br />
இப்படிப் பதைக்கும் முதிய உள்ளங்களை தனியே தவிக்க விட்டு தான் மட்டும் தன் இளம் மனைவியுடன் தனிக்குடித்தனம் சென்றிருக்கும் மகனின் மன நிலை என்னவாயிருக்கும் - இருதலைக்கொள்ளி எறும்பா இல்லை விட்டது தொல்லையா ?<br />
<br />
இப்படிப்பட்ட மகனைப் படிக்க வைக்க அப்பா அலுவலகத்திலிருந்து பின்னிரவில் சைக்கிள் <span style="font-family: "verdana" , "latha";">மிதித்தத</span><span style="font-family: "verdana" , "latha";">ற்க்கும்</span><span style="font-family: "verdana" , "latha";">,</span> அம்மா தையல் மிஷினுடன் ஒன்றிப் போனதற்க்கும் ஒரு அர்த்தமே இல்லையா ?<br />
<br />
மாதம் அனுப்பும் முதியோர் இல்லக் கட்டணம் தான் எல்லாவற்றுக்கும் பதிலா , கைமாறா ?<br />
<br />
தீபாவளியன்று பட்டாசு பொறி பட்டவுடன் துடித்துப் போய் நான் பற்றிக் கொண்ட , கன்றிப் போன அந்த கை விரல்கள் என் வலிக்கும் முழங்காலுக்கு தைலம் தடவ வராதா ?<br />
<br />
படிக்கும் பொழுது இரவில் தூக்கம் வராமலிருக்க டீ போட்டுக் கொடுத்த அம்மாவுக்கு அதே போன்ற ஒரு நள்ளிரவில் மூச்சிரைத்தால் அடுத்த வீட்டுக்காரரோ அல்லது 108ஓ தான் ஆபத்பாந்தவனோ ?<br />
<br />
நிற்க முடியாமல் ஒரு பக்கம் கைத்தடியும் அந்தப் பக்கம் மற்றோரு முதியவரும் தாங்கிப் பிடிக்க நின்று கை தட்டிக் கொண்டிருந்த அந்தப் பெரியவரின் நமுட்டுச் சிரிப்பை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை .<br />
<br />
இந்தப் புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கும் போழுது தொலைக்காட்சியில் தோன்றிய தினமும் ஒரு குறள் - "<span style="background-color: #f5fafa; color: #f76541; font-family: "latha" , "verdana";">மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை </span><span style="background-color: #f5fafa; color: #f76541; font-family: "latha" , "verdana";">என்னோற்றான் கொல்எனும் சொல் " </span><span style="font-family: "latha" , "verdana";">என்பதன் பொருள் </span><span style="background-color: #f5fafa; color: #f76541; font-family: "latha" , "verdana";"> "</span><span style="font-family: "verdana" , "latha";"><i>மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு, `இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்..</i></span><span style="background-color: #f5fafa; font-family: "verdana" , "latha";"> " </span><span style="font-family: "verdana" , "latha";">என்று விளக்கி</span><span style="font-family: "verdana" , "latha";"> வணக்கம் சொல்லுமுன் சிரித்தது என்னைப் பார்த்தோ என்று நான் நினைத்தது ஒரு பிரமையோ ?</span></div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-358841021918451352018-01-11T19:48:00.000-08:002018-01-11T19:49:27.068-08:00மானசீக திவ்ய தேச தரிசனம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பல வருடங்களுக்கு முன்னமேயே மயிலாப்பூரை ஒரு '<i>happening place'</i> என்று சொல்வர் என் நண்பர்கள் சிலர். மயிலையில் தான் சில சபாக்களில் நாடகங்கள் மேடையேறிக் கொண்டிருக்க, நடனங்கள் ஒரு புறம் அரங்கேற, அள்ளித் தெளித்தாற் போல் மயிலை முழுதும் பரவிக் கிடைக்கும் கோவில்களில் உபன்யாசங்களும் பிரதோஷம் போன்ற நிகழ்ச்சிகளும் களை கட்டி ரசிகர்களை எங்கு போவது என்று முடிவு செய்ய முடியாமல் திணறும் காட்சிகளை வெகு சாதாரணமாக பார்க்க முடியும்.<br />
<br />
இருபது வருடங்களுக்கு முன் நிலவிய அந்த நிலை இன்றும் - தொலைக்காட்சி, உள்ளங்கையில் திரைப்படம், வலைத்தளங்கள் போன்ற கவர்ச்சிகளூடும் தொடர்ந்து இருப்பது வியக்க வைக்கும் சமாச்சாரமே. ஆனால் லஸ் கார்னரில் இருந்து கொண்டு பல நாட்கள் பிரயத்தனப்பட்டு பார்க்க வேண்டிய திவ்ய தேசங்களை மாதம் நான்காக இக்காலத்துக்கு ஏற்ப சுலப தவணைகளில் கொடுப்பது என்பதை நம்புவது கொஞ்சம் கடினமே . இதைத்தான் திருவல்லிக்கேணி கல்ச்சுரல் அகேடமி கஸ்தூரி ஸ்ரீநிவாசன் நூலகத்துடன் இணைந்து சில காலமாக செய்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் நாகேஸ்வர ராவ் பூங்கா அருகிலுள்ள ஒரு சிறிய, ஆனால் அழகிய அரங்கில் பொது மக்களை வரவேற்று விடா ப்பிடியாக கையில் சுடச்சுட ஒரு கோப்பை தேநீரையும் கொடுத்து, இலவசமாக மூன்றோ அல்லது நான்கு திவ்ய தேசங்களுக்கோ ஞான திருஷ்டியிலேயே அழைத்து செல்கிறார்கள்.<br />
<br />
இந்த திவ்ய தேச விருந்துக்கு நடுவே இங்கு நடக்கும் மற்றுமொரு போட்டியிலும் மக்கள் திணறுகிறார்கள். ஆம் , ஒவ்வொரு திவ்ய தேசத்தின் கதையையும் சிறப்புகளையும் தகுந்த ஆதாரங்களோடு முனைவர் சுதா சேஷய்யன் விளக்க அந்தந்த திவ்ய தேசங்களின் பெருமை சொல்லும் பாடல்களையும் சுத்தமான கர்நாடக இசையாக பக்க (கா) வாத்தியங்களுடன் கொடுக்கும் திருமதி வசுந்தரா ராஜகோபால் அவர்களின் குரல் வளம் 'சபாஷ் சரியான போட்டி' என்று கண் மூடி அனுபவிக்க வைக்கிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmUXrz2Pdb6kLxIpn8vwMTe3pK_AxPWDFaehb2aoqidWoGb_GXhjjO-fpZUYfC6m2EpkfAfK-H_TZmC-QmjVq81AWVDoZ6Ny74jDsMfS7nABD-Qhn8jNasn8vDTVa2maz1d8ZBivn-DJg/s1600/sudha+sehsaiyyan.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmUXrz2Pdb6kLxIpn8vwMTe3pK_AxPWDFaehb2aoqidWoGb_GXhjjO-fpZUYfC6m2EpkfAfK-H_TZmC-QmjVq81AWVDoZ6Ny74jDsMfS7nABD-Qhn8jNasn8vDTVa2maz1d8ZBivn-DJg/s400/sudha+sehsaiyyan.JPG" width="400" /></a></div>
<br />
இன்று நடந்த சொற்பொழிவில் எப்படி :<br />
<br />
<ul style="text-align: left;">
<li>அரிமேய விண்ணகரம் என்ற திவ்ய தேசத்தில் கண்ணன் கோவர்த்தன கிரியை தூக்கும் பொழுது தன் சுண்டு விரலில் அம்மா போட்ட ராக்ஷா ரஸம் (இக்கால நகப்பூச்சு) அழிந்து போய்விட்டதா என்று அடிக்கடி பார்த்துக் கொண்டது ; </li>
<li>திருவண் புருடோத்தமன் மக்களுக்கு நன்மை அளிக்க, தான் பழியைச் சுமந்தது, மற்றும் அழும் குழந்தைக்கு அன்னை பராசக்தியே நேரில் வந்து பாற்கடலையே பாலாகக் கொடுத்து பசியை தீர்த்தது ; </li>
<li>திருத்தெற்றியம்பலம் என்னும் திவ்ய தேச விஜயத்தால் உலகையே ஆளும் வாய்ப்பும் கிட்டும் (இன்னும் நம்ம உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு இது தெரியாது போல! ) ; </li>
<li>திரு அனந்த புரம் என்ற திருவனந்தபுர பெருமாள் 12000 சாளக்கிராமத்தை மேல் சயனித்திருப்பது </li>
</ul>
போன்ற அருமையான செய்திகளை எளியவர்களுக்கும் புரியும் படியான சொற்களில் உரைத்த மருத்துவருக்கு எவ்வளவு ஷொட்டு கொடுத்தாலும் மிகையாகாது . இருந்தாலும் அவருக்கு ஈடு கொடுத்து தேனாய் இசைத்த வசுந்தரா அவர்கள் மிக அருகிலே அதே உயரத்திலேயே இருப்பது நமக்கு இரட்டை விருந்து .<br />
<br />
கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக நான் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த உபன்யாச உரையை அனைவருக்கும் பகிர வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், இதுவரை பூமியில் உள்ள 106 திவ்ய தேசங்களைக் பார்த்து விட்டதாகவும் இன்னும் மீதமிருக்கும் விண்ணுலகில் உள்ள இரண்டு திவ்ய தேசத்துடன் இந்நிகழ்ச்சி முடிவடையும் என்று அறிவித்தது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.<br />
<br />
ஆனால் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் இது போன்ற சிறந்த சொற்பொழிவுகளை மக்களுக்கு இலவசமாக வழங்கும் திருவல்லிக்கேணி கல்ச்சுரல் அகேடமியால் சும்மா இருக்க முடியாது என்றே தோன்றும் எனக்கு . கூடிய விரைவில் மற்றுமொரு விருந்தை படைக்க அந்த பெருமாளே அவர்களுக்கு அருள வேண்டும் என்று பிரார்த்தித்து அந்த நல்ல உள்ளங்களை வாழ்த்துவதில் எந்த தயக்கமுமில்லை !<br />
<br /></div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-42875090496540578672018-01-07T09:41:00.001-08:002023-03-28T19:09:37.706-07:00இடது பதம் தூக்கி ....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwbXx_OoUSSzwrBgxKOc2PrAOTIA1Msru1YEe4l4HWMGeSjVFe8G-cQ3TW8G0a8o3oMNPjbCX2XqYJ8p3HBtCGFgW3GUo9cL2BvNeldno5rlnzCnPKHX6ZlhLd7b8BqlGdNGovt6zqcCA/s1600/sunrise.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwbXx_OoUSSzwrBgxKOc2PrAOTIA1Msru1YEe4l4HWMGeSjVFe8G-cQ3TW8G0a8o3oMNPjbCX2XqYJ8p3HBtCGFgW3GUo9cL2BvNeldno5rlnzCnPKHX6ZlhLd7b8BqlGdNGovt6zqcCA/s400/sunrise.jpg" width="400" /></a></div>
<br />
<br />
போன வருடம் , 2017ம் ஆண்டு, நவ கைலாயத்தில் தொடங்கி , நவ திருப்பதிகளையும் வலம் வந்து பின் வாரணாசி , மஹாகாலேஷ்வர் , ஓம்காரேஷ்வர் ஆகிய ஜோதிர்லிங்க ஸ்தல விஜயங்களிலிருந்து இன்னும் மீளாத நினைவுகளூடே , புதிய 2018 ஆண்டை ஆருத்ரா தரிசன சிறப்பு சுற்றுலாவுடன் கிளம்பியது வரப்போகும் பொங்கலை முன்கூட்டியே வரவழைத்து கரும்பைச் சுவைத்தது போல் இனிக்க, புத்தாண்டு தினத்திலேயே பயணப்பட்டு மறுநாள் அதிகாலையில் <b>இராமேஸ்வரத்தில்</b> வந்திறங்கியது ஒரு சிறிய குழு.<br />
<br />
<b><u>நாள்-2 (02-Jan-2018)</u></b><br />
<br />
புதிய ஆண்டின் முதலிலேயே கிடைக்கவிருக்கும் தரிசனங்களை நினைத்து மனம் குதூகலித்தாலும் நடந்த விஷயங்களோ கொஞ்சம் தயங்க, கலங்க வைத்தது. வழக்கமாக கிடைக்கும் பிரத்யேக அறை கிடைப்பதில் இருந்த சிரமம், கிடைத்த இடத்திலும் சரியாக வெந்நீர் கிடைக்காமல் , கொடுக்கப்பட்ட அறையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட , கொஞ்சம் தொண்டை தண்ணீரை செலவிட்டபின் சோழிகள் சரியான கட்டங்களில் விழ - ஒரு புதிய அனுபவமாகத் தான் தொடங்கியது ஆண்டின் முதல் சுற்றுலா .<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRjO3hZ1g-QEB2kasGXEyzYjC6jXjU9WsjOmPmXgFtFs2A_Eew_sOnHpXVbHcDCNyF7kf2Pg7v8ceoMvewTmBVr865uDT2qP6x9FH81Rsb0c83T4mA0TJjsmug79hbSiS9nyMPTLwOJIk/s1600/Rameswaram+Agni+Theertham.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRjO3hZ1g-QEB2kasGXEyzYjC6jXjU9WsjOmPmXgFtFs2A_Eew_sOnHpXVbHcDCNyF7kf2Pg7v8ceoMvewTmBVr865uDT2qP6x9FH81Rsb0c83T4mA0TJjsmug79hbSiS9nyMPTLwOJIk/s640/Rameswaram+Agni+Theertham.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Rameswaram Agni Theertham</td></tr>
</tbody></table>
இருந்தும் பயணங்களில் இதெல்லாம் சகஜம் - ஓஹோ இதுதான் பயணத்தால் கிடைக்கும் அனுபவங்களோ என்று மனதை தேற்றிக் கொண்டு சிறிது அதிகமான பரபரப்புடன் காணப்பட்ட இராமேஸ்வரத்தின் கடலில் அக்னி தீர்த்த குளியலுடன் தொடங்கிய நிகழ்ச்சிகள் விறுவிறென்று திரும்பி பார்ப்பதற்குள் 22 தீர்த்த ஸ்நானங்களுடன் முடிவடைந்திருந்தது !<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0BNt5OxwSVjl-skMGJh3uB1w6K-OpyJo3dTUdo_wqcTBzEg1NrR8yD80Nj62sW_a4HWg-yCGc6SvgVDv5s5IH9TGoVTr5aIi4_4t6NCccYqXlfmFUhbliNC2KHUKjEmuuLmPIRkdK2vU/s1600/A.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0BNt5OxwSVjl-skMGJh3uB1w6K-OpyJo3dTUdo_wqcTBzEg1NrR8yD80Nj62sW_a4HWg-yCGc6SvgVDv5s5IH9TGoVTr5aIi4_4t6NCccYqXlfmFUhbliNC2KHUKjEmuuLmPIRkdK2vU/s640/A.jpg" width="480" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Rameswaram</td></tr>
</tbody></table>
எவ்வளவு கூட்டமிருந்தாலும் தேர்ந்தெடுத்த சரியான வழிகாட்டிகளால் துரித வழிகள் காட்டப்பட்டு, பூட்டப்பட்ட கதவுகள் திறக்கப்பட, ஸ்நானங்கள் முடிந்த குறைந்த நேரத்திலேயே ஒரு திருப்திகரமான <b>இராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்மன்</b> தரிசனம் முடிந்தபின் , தங்கி இருந்த ஹோட்டலின் அருமையான பொங்கல் வடை காலை உணவு பதைத்திருந்த மனதை அமைதிப் படுத்த , குளித்த சுகமும் சேர்ந்து கண்ணை அழுத்த ஒரு சுகமான பயணத்திற்குப் பின் சென்றடைந்தது <b>உத்திரகோச மங்கை, </b> இந்தப் பயணத்தின் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட நடராஜரின் மரகத மேனி தரிசனம்<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW94a-h36NILaQikcFo-iGmMhb8yLGbAT5XjQGWKPc9t0pmfDWKL25Q0iggZb_xCHruRCE-j_jU3WBVZoG8wkH4ZkMDr4ANCV6TJxbetrffrSXNwmdzgN-ZBMQ8dMY18dZea8P2V8ydNg/s1600/UtharaKosaMangai_7.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="720" data-original-width="960" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW94a-h36NILaQikcFo-iGmMhb8yLGbAT5XjQGWKPc9t0pmfDWKL25Q0iggZb_xCHruRCE-j_jU3WBVZoG8wkH4ZkMDr4ANCV6TJxbetrffrSXNwmdzgN-ZBMQ8dMY18dZea8P2V8ydNg/s640/UtharaKosaMangai_7.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Utharakosa Mangai Natarajar </td></tr>
</tbody></table>
இதன் சிறப்பு இங்குள்ள மரகத நடராஜர் வருடம் முழுவதும் சந்தனம் பூசப்பட்டு இருக்க, வருடத்தில் திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தின் முதல் நாள் மட்டும் சந்தனம் களையப்பட்டு , நள்ளிரவு அபிஷேகத்திற்குப்பின் மறுபடியும் சந்தனம் கொண்டு மூடப்படுவது தான். ஆகையால் இந்த சந்தன காப்பு இல்லாத மரகத தேகத்துடன் உள்ள தில்லை அம்பலத்தானைக் காண பல லட்சங்கள் பேர் கொண்ட கூட்டம் இங்கு சேர்வது வழக்கம். நாங்களும் அந்த ஆசையுடன் தான் இந்தச் சுற்றுலாவில் சேர, ஒரு புரிதல் குழப்பத்தினால் எங்களின் கணக்கு பிசகி நடராஜர் மீண்டும் சந்தன அங்கி பூசிக் கொண்ட பிறகு தான் பார்க்க முடிந்தது , பலரும் ஜீரணிக்க, விழுங்க சிரமப்பட்ட ஏமாற்றமே.<br />
<br />
இந்த ஒரு நாளில் மட்டும் பல லட்ச பக்தர்கள் கூடும் இந்நாளுக்கு இந்த கோவில் நிர்வாகத்தின் தயார் நிலை ஏமாற்றத்தை கூட்டியது. நாங்கள் சென்ற நண்பகல் நேரத்தில் அநேகமாக எல்லா கூட்டங்களும் குறைந்திருந்தது நூற்றுக்கும் குறைவான பக்தர்களே வந்தாலும் , இந்த புகழ் பெற்ற நடராஜரைக் காண பல நூறு மைல்களுக்கு அப்பாலிருந்த்தும் வந்த பக்தர்களுக்கு அங்குள்ள பந்தோபஸ்துக்கு வந்திருந்த காவலர்கள் , தத்தம் சீருடைலேயே இருந்தாலும் விபூதி பிரசாதங்களைக் கொடுத்தது கோவில் நிர்வாகத்தின் மெத்தனமா , அங்கு இருக்கும் குருக்கள்களின் போதுமென்ற மனத்தால் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுத்தப் பட்ட அலட்சியமா என்று புரியாமல் குழம்பினாலும் , பக்தி சிரத்தையுடன் குளித்து வெறும் வயிற்றுடன் நடராஜரைக் காண வந்த பக்தர்களை இதை விட அவமானப் படுத்த முடியுமா என்ற கேள்விதான் பிரதானமாக தலைதூக்கிக் காணப்பட்டது. கோவிலுக்கு ஒரு நாளில் வரும் சில லட்ச மக்களை எப்படி சமாளித்து திருப்தியாக அனுப்ப முடிவது என்று தெரியாமல் இருந்தால் பல நாட்களிலும் பல லட்சம் பக்தர்களை சமாளிக்கும் திருப்பதி போன்ற நிர்வாகங்களிலுருந்து கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாமே. கடவுளுக்கு மிக அருகாமையில் பணி புரியும் ஒருவர் பிரகாரத்திற்கு வெளியிலேயே நின்று கொண்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் நடராஜருக்கு சாற்றப்பட்ட சந்தனம் வைத்திருந்த கையை 'மற்ற கையையும் கவனிக்கப்படாமல்' நீட்ட மாட்டேன் என்று சொன்னதிலேயே புரிந்தது இவர்களின் சிரத்தையும் பக்தர்கள் மேல் கொண்ட அக்கறையும். ஆண்டவன் அருகாமையிலேயே இப்படி பணம் பத்தும் செய்யும் பொழுது ஓட்டுக்காக வறுமையை தற்காலிகமாக சமாளிக்க , நியாய படுத்த முடியாத செயல்களை செய்யும் மக்களை மட்டும் கண்டு ஏன் கேள்வி கணைகள் பாய்கின்றன என்று நினைக்க வைத்தது.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhocY9feQZA3G_gZsw7bu6RyVfOVtCqzxI7_2hnxOGXsS65k-DKvRsq-SxK6O6G5RneS9ZywX4yurn0paH5DxXuk3sPYK38Kt44Sm5Jgn_5CVuPCgR9_VmXStWW5it_soVnWxDPtZgptBM/s1600/UtharaKosaMangai_5.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="720" data-original-width="960" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhocY9feQZA3G_gZsw7bu6RyVfOVtCqzxI7_2hnxOGXsS65k-DKvRsq-SxK6O6G5RneS9ZywX4yurn0paH5DxXuk3sPYK38Kt44Sm5Jgn_5CVuPCgR9_VmXStWW5it_soVnWxDPtZgptBM/s640/UtharaKosaMangai_5.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">UtharakosaMangai Temple</td></tr>
</tbody></table>
தெய்வாதீனமாக பாரத மக்களின் இயற்கையிலேயே சமாதானப் படுத்திக் கொள்ளும் சாத்வீக குணத்தினாலும் , கொடுப்பினையின் பால் கொண்ட அதீத நம்பிக்கையினாலும், மேலும் சீக்கிரமே விக்கெட்டுகளை இழந்தே பார்த்து பழக்கப்பட்ட கிரிக்கெட் மாட்ச் அனுபவத்தாலும் சுதாரித்துக் கொண்ட குழு அருகில் எழும்பிக் கொண்டிருக்கும் புதிய <b>வராஹி அம்மன்</b> கோவிலைக் கண்டு, பதைத்திருந்த மனதை திடப்படுத்திக் கொண்டு எதுவுமே நடக்காதது போல் விரைந்தது ஏற்கனவே தாமதிக்கப் பட்ட மதிய உணவை நோக்கி !<br />
<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZ91c_S5aHv7nOPFso4e8240-IHJ6N5dDAlH_yUUb7c8gebCHSD36vZK1lThFmA9SDjIS-wMrfohuzaI4HwpS1KjDzifi8WLhXv8nlGDUHbx2fXj7DJC0cOncK-wWLssMJQ7qXfpcjxmY/s1600/IMG_1636.JPG" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZ91c_S5aHv7nOPFso4e8240-IHJ6N5dDAlH_yUUb7c8gebCHSD36vZK1lThFmA9SDjIS-wMrfohuzaI4HwpS1KjDzifi8WLhXv8nlGDUHbx2fXj7DJC0cOncK-wWLssMJQ7qXfpcjxmY/s640/IMG_1636.JPG" width="480" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">RameswaramVaarahi Amman</td></tr>
</tbody></table>
மதிய உணவில் ஆசுவாசப்பட்ட மனதை மேலும் சாந்த படுத்தியது <b>சேதுக்கரையில் </b>நிலவிய அமைதியான சூழ்நிலை. இலங்கைக்கே பாலம் அமைத்து கடக்க முடியாதென்று நினைத்த தடைகளையும் உடைத்தெறிந்த இந்த இடத்தின் மகத்துவவமும், அதை செய்து காட்டிய ஸ்ரீ ராமரின் அனுக்கிரகமும் இந்தக் குழுவிற்கு இனிமேலும் சோதனைகள்வர விடாது செய்யும் என்ற நம்பிக்கையுடன் முன்னேறியது பக்தர்கள் குழு .<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto;"><tbody><tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihNbkQhuqYlfp3gWnsRb-qfuGmehjGGoZ4yFt58O9b8mOzuwMDDWcL3zkL_gg_6IaPtHV43uGEpG8M2OKQlbaMP1tZ3m8_jbOU12rsa20zZ0gZTcscds3vScBbm5TSo2T0F-Xl_ybAOdc/s1600/Sethukkarai_VKS.jpeg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1152" data-original-width="864" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihNbkQhuqYlfp3gWnsRb-qfuGmehjGGoZ4yFt58O9b8mOzuwMDDWcL3zkL_gg_6IaPtHV43uGEpG8M2OKQlbaMP1tZ3m8_jbOU12rsa20zZ0gZTcscds3vScBbm5TSo2T0F-Xl_ybAOdc/s640/Sethukkarai_VKS.jpeg" width="480" /></a></td></tr><tr><td class="tr-caption" style="text-align: center;">Sethukkarai</td></tr></tbody></table>
அடுத்துச் சென்ற <b>திருப்புல்லானி </b>திவ்ய தேசத்தில் லட்சுமண சுவாமியின் மடியில் தலை வைத்து லேசாக கண் அயர்ந்த ஸ்ரீஇராமரையும் அருகே வாய் பொத்தி நிற்கும் அனுமனையும் , சரணாகதி அடைந்த சமுத்திர ராஜனையும் கண்டதும் இவர்களை விடவா நமக்கு சோதனை வந்து விடப் போகிறது என்று அமைதி அடைந்தது மனது. இன்று நடந்த சம்பவங்களுக்கும் சோதனைகளுக்கும் எனக்கு இவ்வளவும் தேவையாகத்தான் இருந்தது.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCgnwyrytJ4RfHV86w4TH0AWL7B4ERGgvoVgqXggH5esJcYtxq63O7IMqjqoNNc1_qro7EfwmhH2APXScMuxIK8BEwuECI2GUvI8x0MBykaz4KU5ZKNdSgL07FZ3UNtCosrWy76V-hhrY/s1600/Tirupullani_1.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="960" data-original-width="720" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCgnwyrytJ4RfHV86w4TH0AWL7B4ERGgvoVgqXggH5esJcYtxq63O7IMqjqoNNc1_qro7EfwmhH2APXScMuxIK8BEwuECI2GUvI8x0MBykaz4KU5ZKNdSgL07FZ3UNtCosrWy76V-hhrY/s640/Tirupullani_1.jpg" width="480" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Thiruppullaani</td></tr>
</tbody></table>
ஒவ்வொரு முறையும் தீர்த்த ஸ்நான ஸ்ரார்த்தங்களுக்குப் பிறகு விரைந்து கிளம்பியதால் ராமேஸ்வரத்தில் உள்ள சில அரிய இடங்களை காணாமல் கோட்டை விட்டது இம்முறைதான் தெரிய வந்தது . <b>நாகநாதர் கோவிலு</b>க்குப் பிறகு போன <b>துளசி பாபா மடம்</b> என்ற இடத்தில் சில மிதக்கும் கற்களைக் காட்டி கோவில் கட்ட தகுந்த நன்கொடை கொடுத்தால் ஸ்ரீ இராமர் கையால் தடவிக் கொடுத்த ஓர் கல் இனாம் என்று சொன்னவுடன் 'தோ பார்றா' என்று நடையைக் கட்டினோம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTAGqAX8VIh97YYODjI9zssp7YIqzjwSejCGvadn25lkZ_zTH_HLu7lBaDuUWezzYkY6SgjoKpw3dyWL6UmnTubGGg6jp5rTdZZGbqmPxftmX6JesRfWGunbuWDAt2y1AVleSodybNFBw/s1600/IMG_1639.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTAGqAX8VIh97YYODjI9zssp7YIqzjwSejCGvadn25lkZ_zTH_HLu7lBaDuUWezzYkY6SgjoKpw3dyWL6UmnTubGGg6jp5rTdZZGbqmPxftmX6JesRfWGunbuWDAt2y1AVleSodybNFBw/s400/IMG_1639.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
அருகிலேயே உள்ள <b>ஸ்ரீ கிருஷ்ண ப்ரணாமி மங்கள் மந்திர்</b>என்ற பளபளப்பான கோவிலின் மாடியில் உள்ள மற்றமொரு பார்க்க வேண்டிய இடம் ஒரு அருங்காட்சியகம் . பின் நிறைந்த மனத்துடனும் காலியான வயிற்றுடனும் ஆர்ய பவன் என்று பெயரைப் பார்த்து ஏமாந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்களை எப்படி அதிருப்தி படுத்துவது என்பதை விளக்கமாகக் கற்றுக் கொடுத்தார்கள்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh47lkoHzWMEbV-ZBhLRS_CJWfsIgy_2Zwste57l86_BjP17c44t3AiYBZlXi5cxjHA3V8Jinsga-DW4CE61WZiKRNkO9wY4ckiNUr7PUOnp2_vt-ou0Dj-JKHxs7d8gT5ybfA3oRxtT4Y/s1600/Sri+Krishnan+Parnami+Mangal+Mandir+Museum.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh47lkoHzWMEbV-ZBhLRS_CJWfsIgy_2Zwste57l86_BjP17c44t3AiYBZlXi5cxjHA3V8Jinsga-DW4CE61WZiKRNkO9wY4ckiNUr7PUOnp2_vt-ou0Dj-JKHxs7d8gT5ybfA3oRxtT4Y/s640/Sri+Krishnan+Parnami+Mangal+Mandir+Museum.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Sri Krishnan Parnami Mangal Mandir Museum</td></tr>
</tbody></table>
<b><u>நாள்-3 (03-Jan-2018)</u></b><br />
<br />
ஒரு சுக உறக்கத்திற்குப்பின் அதிகாலையில் கிளம்பி இயற்க்கைச் சீற்றத்தின் பிடியில் சிக்கி சின்னாபின்னமான தனுஷ்கோடியைக் காண விரைந்து அதற்க்கு முன் தரிசித்தது அழகிய <b>கோதண்டராம சுவாமி கோவிலை</b>. விபீஷணருக்கு ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் செய்ததாக நம்பப் படும் இது ஓரு சிறிய ஆனால் அழகான பார்க்க வேண்டிய இடம்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeuHzg_WEscYrV9eIt64D3AACog_z20cRJZc5vNeiXAtDzvrBvmF7QofeQgwplpM6JMiHSuuLiMuEKKzyJf2KO5Xl09jUQDjYNGWh23tL5l2EzkyF9h9KBmKcb3_DGlixozvqJHueCqB0/s1600/IMG_1672.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeuHzg_WEscYrV9eIt64D3AACog_z20cRJZc5vNeiXAtDzvrBvmF7QofeQgwplpM6JMiHSuuLiMuEKKzyJf2KO5Xl09jUQDjYNGWh23tL5l2EzkyF9h9KBmKcb3_DGlixozvqJHueCqB0/s640/IMG_1672.jpg" width="480" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Dhanushkodi, Kodhanda Rama Swamy temple</td></tr>
</tbody></table>
போன வருட மார்ச் மாதத்தில் சென்ற போது சாலை போட்டு முடித்தும் எந்த 'மாண்புமிகு' விற்கோ காத்திருந்த சாலை நல்ல வேளையாக திறக்கப் பட்டிருந்ததால் ஒரு முதுகை வளைக்கும் பயணம் தவிர்க்கப்பட்டு <b>தனுஷ்கோடி கடற்கரை</b>யை அடைந்து சில போட்டோக்களை எடுத்துக் கொண்டு திரும்பிய சில நேரத்தில் ராமேஸ்வரத்தை விட்டு கிளம்பியது அந்த ஜாலியான குழு.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUYBtxsB9fVJQIu3vt07CG-Q0ALUXuaparwy6fmwagZ9dPPUHo6gWtwMIwumv_hllohWFdrJ9USAOxRmXOe_HQ4l0JktmPWPiiXO19IkTu6G_ff_ou9b4A8U2wB1ZxNVKIXpOeQEVAqMc/s1600/IMG_1701.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUYBtxsB9fVJQIu3vt07CG-Q0ALUXuaparwy6fmwagZ9dPPUHo6gWtwMIwumv_hllohWFdrJ9USAOxRmXOe_HQ4l0JktmPWPiiXO19IkTu6G_ff_ou9b4A8U2wB1ZxNVKIXpOeQEVAqMc/s640/IMG_1701.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Dhanushkodi Beach</td></tr>
</tbody></table>
முன்னதாக ஹோட்டலில் காலை உணவுக்காக சென்ற பொழுது நடந்த சம்பவம் <i><b>ஹோட்டல் </b></i>என்ற நாவலை நினைவுப் படுத்தியதில் கதாசிரியர் ஆர்தர் ஹெய்லியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.<br />
<br />
இரண்டு நாள் பயணத்தில் அநேகமாக எல்லோரும் ஒருவரை ஒருவர் பரிச்சய படுத்திக் கொள்ள சில நட்பு வட்டங்கள் உருவாகின.<br />
<br />
அடுத்து சென்ற <b>இராமர் பாதம்</b> என்ற சிறிய மலையிலுருந்து தெரியும் அருமையான காட்சிகள் புகைப்பட பிரியர்களுக்கு ஒரு விருந்து .<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgurHRcQH3ibTecAjmAwcMT9gpnJ7iED5fgTQ7VRHn6DvycAyhpHgOYRnIqfGJr4Yvy99hjLMx3jFI3bKo3BIPAIGVfoFWqJoTgLWEAoKyoaUjAU2_XUYfOp7ViMyg8rB5VqzeiPQ-HOoM/s1600/IMG_1720.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="581" data-original-width="1600" height="232" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgurHRcQH3ibTecAjmAwcMT9gpnJ7iED5fgTQ7VRHn6DvycAyhpHgOYRnIqfGJr4Yvy99hjLMx3jFI3bKo3BIPAIGVfoFWqJoTgLWEAoKyoaUjAU2_XUYfOp7ViMyg8rB5VqzeiPQ-HOoM/s640/IMG_1720.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Panoramic view from Ramar Padham</td></tr>
</tbody></table>
இராமேஸ்வரத்தில் புதிய சுற்றுலா மையமாக உருவெடுத்து வரும், அநேகமாக அனைவரும் மதிக்கும் முன்னாள் ராஷ்டிரபதியும் விஞ்ஞானியுமான <b>அப்துல் கலாம் </b>என்ற மாமனிதரின் நினைவிடத்திற்குத்தான், அடுத்து விரைந்தது. மிக எளிமையாக அதே நேரத்தில் நேர்த்தியாகவும் இருந்த நினைவிடம் வருங்காலத்தில் இன்னும் மிகப் பெரிய கூட்டங்களைக் காண விருப்பது என்னவோ உண்மை .<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjckbIWGcLv6dz_UfYg-B6I6V5BClEuA8P82bjv9JmB4eRzpGfIOFRv55Hhblbm63vVghcQt7mtY66TWYiGE5gxd6XLXSONAzEbw_h9ZgKoSKxfGGzdo12v0fP-tMeiZhzG2fbLdiUW_2c/s1600/IMG_1734.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjckbIWGcLv6dz_UfYg-B6I6V5BClEuA8P82bjv9JmB4eRzpGfIOFRv55Hhblbm63vVghcQt7mtY66TWYiGE5gxd6XLXSONAzEbw_h9ZgKoSKxfGGzdo12v0fP-tMeiZhzG2fbLdiUW_2c/s400/IMG_1734.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEho6yiB_3C_2T615dIQI5Uch8WbiujUbU_FVYgLrmi9s345-juZ1TQIwOQhZikpY25NpIsAcu6AHk1BADBGQqe7yQzs10E6u0-p9MtIBUmjbhHspAr7s9EJUzBvimEz5zRHdrUnRh3dOQQ/s1600/Kalaam+Memorail_1.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="960" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEho6yiB_3C_2T615dIQI5Uch8WbiujUbU_FVYgLrmi9s345-juZ1TQIwOQhZikpY25NpIsAcu6AHk1BADBGQqe7yQzs10E6u0-p9MtIBUmjbhHspAr7s9EJUzBvimEz5zRHdrUnRh3dOQQ/s400/Kalaam+Memorail_1.jpg" width="400" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
அடுத்து விரைந்த <b>தேவிபட்டினம்</b> என்ற தலத்தில் நாங்கள் அநேகமாக நண்பகலில் சென்றதால் ஐந்து நவபாஷாண விக்ரகங்கள் மட்டுமே தெரிந்தன மற்றவைகளெல்லாம் ஏறி வரும் நீர் வரத்தால் மறைந்தே இருந்தது<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdw9laWD4g6SNlk7FYNYCbbA3gK-M5NWeGIAz0OKxCBNUuyO9TfmUvETyL4sm_9ooD5S-KAj5p4PsxWQF0lro9XeUDcvSc1RheJ5-tpKGwXq6ALXNfbsPQgRKKkCIs49E8LiVbkCROcY0/s1600/IMG_1789.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdw9laWD4g6SNlk7FYNYCbbA3gK-M5NWeGIAz0OKxCBNUuyO9TfmUvETyL4sm_9ooD5S-KAj5p4PsxWQF0lro9XeUDcvSc1RheJ5-tpKGwXq6ALXNfbsPQgRKKkCIs49E8LiVbkCROcY0/s640/IMG_1789.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Devipattinam</td></tr>
</tbody></table>
அநேகமாக எல்லோரும் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்திருந்து , மக்கள் விநியோகித்த இனிப்பு மற்றும் காரங்களை முடித்தபின்னும் போய்க்கொண்டே இருந்த வாகனம் ஓட்டுனரின் ஒரு புத்திசாலித்தனமான ஐடியாவினால் கிடைத்த போனஸ் <b>காளையார் கோவில்</b>. ஐந்து பிரதான சந்நிதிகளைக் கொண்ட இந்த பிரம்மாண்டமான கோவிலில் இருந்த குருக்களின் மனதும் அதே அளவில் பறந்து இருந்ததால் நிதானமாக எல்லா சன்னதிகளிலும் தரிசன ஆரத்தி மிகுந்த திருப்தி அளித்தது.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3iuChZmC0ipQ-tvFg5rIV7u2cfTRCDHkJvdDAhHxVeIUiba5To9AEKoII7QIdCNmNipeM2AizA4aO3lpRK8-1s0HCPhLhQ_WJbkMlPYUrnorZO5kfxMI20N_Fmk39d0SCO68XtbOrrek/s1600/Kalaiyar+Koil.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3iuChZmC0ipQ-tvFg5rIV7u2cfTRCDHkJvdDAhHxVeIUiba5To9AEKoII7QIdCNmNipeM2AizA4aO3lpRK8-1s0HCPhLhQ_WJbkMlPYUrnorZO5kfxMI20N_Fmk39d0SCO68XtbOrrek/s640/Kalaiyar+Koil.jpg" width="480" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Kalaiyar Koil</td></tr>
</tbody></table>
மாற்றிய பாதையில் கிடைத்த மற்றோரு போனஸ்தான் <b>நாட்டரசன் கோட்டை</b>. இந்த ஊருக்கும் எனக்கும் ஒரு ஐம்பது வ்ருடங்கள் தாண்டிய நினவுத் தொடர்பு இருந்ததால் இந்த மாற்று ஏற்பாடு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. இந்த ஊரின் <b>கண்ணாத்தாள் கோவில்</b> கண் நோய்களை தீர்ப்பதில் மிகுந்த சக்தி வாய்ந்ததாக கருதப்பட்டது மட்டுமல்லாது இக்கோவிலின் எதிரில் உள்ள குளத்தை குடிநீருக்கு மட்டும் உபயோகப்படுத்தும் இந்த ஊர்க்காரர்களின் கட்டுப்பாடும் வியக்க வைக்கும் ஒரு செயல் .<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhN6LoFRLplnIhXuPPZ0mGNFoiUj6_kcv5y75pMVG_G9YaChLx5ueHHrIxLPe9Qtst2-6pj9lSaNNfH7sDykfUYg5Y_lEAZqU7HjHoQl_jKE9MoU_H87wTSyP_E28U6bfHEGtsDGrlqgLs/s1600/Nattarasankottai.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhN6LoFRLplnIhXuPPZ0mGNFoiUj6_kcv5y75pMVG_G9YaChLx5ueHHrIxLPe9Qtst2-6pj9lSaNNfH7sDykfUYg5Y_lEAZqU7HjHoQl_jKE9MoU_H87wTSyP_E28U6bfHEGtsDGrlqgLs/s640/Nattarasankottai.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="font-size: 12.8px;">Nattarasankottai</span></td></tr>
</tbody></table>
நம் நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் உலகிலேயே மிகச் சிறந்தவற்றுள் ஒன்றாக இருந்தாலும் சுற்றுலாத் துறையில் நாம் இன்னும் மக்களின் நம்பிக்கையைப் பெறாததற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று போதிய தகவல்கள் வேண்டிய நேரத்தில் இல்லாதது . ஒரு பிரசித்தி பெற்ற இடத்துக்குப் போவதற்கு முன் அநேக பயணிகள் அந்த இடத்தின் பெருமை, அது திறந்து இருக்கும் நேரம், அந்த இடத்துக்கே உரித்தான சம்பிரதாயங்கள், அங்கு அனுமதிக்கப் படும் - முக்கியமாக அனுமதிக்கப்படாத- உடைகள், உடைமைகள் இப்படிப்பட்ட சில தகவல்கள் தான். ஆனால் நான் சமீபத்தில் சென்ற கேரள திவ்ய தேசங்கள் சிலவற்றிலும் திருக்கோஷ்டியூர் போன்ற இடங்களிலும் இப்படிப்பட்ட முக்கிய தகவல்கள் இல்லாத காரணங்களால் பயணிகள் படும் பாடு சொல்லி மாளா . இத்தனை தடைக் கற்களையும் மீறி மக்கள் வருகிறார்களென்றால் அது அவர்களின் பக்தியால் ஏற்பட்ட வைராக்கியமே தவிர சுற்றுலாத் துறைக்கோ கோவில் நிர்வாகங்களுக்கோ இதில் கொஞ்சமும் பங்கில்லை .<br />
<br />
<b> திருக்கோஷ்டியூர்</b> என்ற திவ்யமான தேசத்தை நாங்கள் சென்றடைந்த பொழுது அநேகமாக ஆறு மணி. சுவாமி புறப்பாடு நடக்க எல்லா ஏற்பாடுகளும் தெரிந்தும் அதற்க்கு ஏற்ப மக்களை உள்ளே போக விடாமல் தடுத்து நிறுத்தினாலும் எப்பொழுது தரிசிக்கலாம் என்று சொல்ல யாருமில்லை. சிப்பந்தி ஒருவர் கொஞ்சமும் தயங்காமல் 'இன்று போய் தரிசனத்திற்கு நாளை வா என்றார். நகர மறுத்து ஒரு சின்ன வேலை நிறுத்தம் போல அடம் பிடித்தபின்தான் ஒருவர் வந்து - சீருடை ஒன்றும் அணியாததால் அவர் கோவில் சிப்பந்தியா இல்லையா என்று சரியாக கணிக்க முடியவில்லை- 'கொஞ்சம் பொறுமையாக இருந்தால் எல்லோருக்கும் தரிசனம் செய்து வைப்பதாகச்' சொன்னார் . ரங்கநாதரைப் போல் நீண்டு பள்ளி கொண்டிருந்த பெருமாளை தரிசனம் செய்து வைத்து அதன் பின் ஒரு மிகக் குறுகிய பாதை வழியே - ஒருவர் தான் செல்லலாம் - சில படிகள் ஏறி , அதன் பின் தவழ்ந்து சென்று மீண்டும் ஏறி , கோபுர உச்சிக்கு கூட்டிச் சென்று அங்குள்ள இராமானுஜரின் புராணத்தை விளக்கியத்தைக் கேட்க பக்தியால் சில ரோமங்கள் சிலிர்த்து நின்றன.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhrwi0BVY8LXvB6XlHNay3woweU_LFFB8-4YzgquZGN0X7RYt2j8ctH1zKnFnOg6AIoouhRi15t0WTHJ31Fu3JlUS3OfHhDO-y2RwyimjqjaoFVLxYJsvrOPhRIOU_lFyHOSOW3pKHWW8/s1600/Thirukoshtiyur_2.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhrwi0BVY8LXvB6XlHNay3woweU_LFFB8-4YzgquZGN0X7RYt2j8ctH1zKnFnOg6AIoouhRi15t0WTHJ31Fu3JlUS3OfHhDO-y2RwyimjqjaoFVLxYJsvrOPhRIOU_lFyHOSOW3pKHWW8/s640/Thirukoshtiyur_2.jpg" width="480" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Narrow passage at Thirukoshtiyur</td></tr>
</tbody></table>
அந்த உச்சியில் நின்று இராமானுஜரின் பார்வையிலுருந்தே தெரிந்த அந்த வெள்ளை நிற வீட்டைப் பார்க்க இப்படிப்பட்ட தரிசனத்திற்கு எவ்வளவு சிரமப்பட்டாலும் தகும் என்று தோன்றியதும் உடையவருடன் எடுத்துக் கொண்ட ஒரு செல்ஃபீ மறக்க முடியாத அனுபவம் . இங்கு 'அந்த யாரோ' மட்டும் வந்திராவிட்டால் நாங்கள் வீணாகத் திரும்பி இருப்போம் .<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCm6VrygyCDx-99Rrq9hL7YdSEfac08o_cjJZv-TQ0dd6HheAF6Pln8H2nL8ohjW0JG-VH2DaIDuEBXPJEZHPxIB46mvaXontedZsUh12o8gMe6Ih_VkIVfl4igmLDnC7VxhtyivcKJKY/s1600/Thirukoshtiyur_1.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCm6VrygyCDx-99Rrq9hL7YdSEfac08o_cjJZv-TQ0dd6HheAF6Pln8H2nL8ohjW0JG-VH2DaIDuEBXPJEZHPxIB46mvaXontedZsUh12o8gMe6Ih_VkIVfl4igmLDnC7VxhtyivcKJKY/s320/Thirukoshtiyur_1.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Selfie with the Saint</td></tr>
</tbody></table>
ஒரு சூடான காபிக்குப் பிறகு நாளின் கடைசி விஜயமாக <b>திருப்பத்தூர் சிவன் கோவில்</b> தரிசனம். கால பைரவருக்கு விசேஷமான இந்த பெரிய கோவில் ஆட்கள் இல்லாமல் அமைதி தரிசனமளித்தது நாள் முழுவதும் சுற்றிய கால்களுக்கு கொஞ்சம் சுகமாத்தான் இருந்தது .<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicNrMwz4haNYctdElW_tkKGGerJiFEVtxOyWM6c6i8W4qxgLEfAkEAxEjOfp6AZ7608wH1GpqAzmUYO5aK5vdvo0PjX4NgkFYkKVemqyQ9iPh6MHpaYvx4Iz1Ybf0kDrCzo5DXHMfscWQ/s1600/Thirupathur.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicNrMwz4haNYctdElW_tkKGGerJiFEVtxOyWM6c6i8W4qxgLEfAkEAxEjOfp6AZ7608wH1GpqAzmUYO5aK5vdvo0PjX4NgkFYkKVemqyQ9iPh6MHpaYvx4Iz1Ybf0kDrCzo5DXHMfscWQ/s640/Thirupathur.jpg" width="480" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Thiruppathur</td></tr>
</tbody></table>
சுற்றுலாவின் கடைசி இரவிலும் ஹோட்டல் கொஞ்சம் தன் பங்குக்காக பாடாய்ப் படுத்தி ஏ சி இல்லாமல் இரவு பத்து மணிக்கு மீண்டும் அறையை மாற்றி ..... நம்ம ஊருக்கும் வாடிக்கியாளர்கள் சேவைக்கும் ரொம்ப தூரம் !!<br />
<br />
<b><u>நாள்-4 (04-Jan-2018) </u></b><br />
<br />
அநேகமாக எல்லா இடங்களையும் பார்த்த கடைசி நாள் வழித்து வார்த்த தோசை போல் இருந்த சொச்ச மிச்சங்களைத்தான் பார்ப்பதாக இருந்ததால் எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாக எழுப்பப் பட்டோம். எல்லா இடங்களிலும் சிறிது சத்தமும் நிறைய பணமும் தான் வேலையை முடிக்க உதவுகிறது என்ற ஞானோதயத்துடன் கிளம்பினோம்.<br />
<br />
முதலில் சென்ற <b>கோவிலூர் சிவன் கோவில் </b>அழகிய குளத்தினூடே உள்ள ஆழி மண்டபம், ராமேஸ்வரத்தை நினைவுப்படுத்தும் நீண்ட பாதைகள் என்றும் சிற்பங்களாலும் திகைக்க வைத்தது .<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOYXgAa0hVWtgXChUq5EaJS14wUkbRBG3a2FJ2SXqRKCZ7chYfRCqPnDT7qLxcltWL9vDZDY-ClPA2tQU9gyB7brAAS1GGQ-cUqrKD9mOzRfNIWr6smotE6EWsqBFHE7b4fpBcnuNVNLE/s1600/Koviloor_1.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="720" data-original-width="960" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOYXgAa0hVWtgXChUq5EaJS14wUkbRBG3a2FJ2SXqRKCZ7chYfRCqPnDT7qLxcltWL9vDZDY-ClPA2tQU9gyB7brAAS1GGQ-cUqrKD9mOzRfNIWr6smotE6EWsqBFHE7b4fpBcnuNVNLE/s640/Koviloor_1.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Koviloor</td></tr>
</tbody></table>
அருகிலேயே இருந்த <b>குன்றக்குடி</b> என்ற சிறிய மலை ஏறுவதற்குள் அனைவருக்கும் பௌண்டரிக்கு பந்தை துரத்தியது போல் மூச்சு வாங்கியது இப்படிப்பட்ட பயணங்களை வயது ஏறுவதற்குள் முடிக்க வேண்டும் என்று மீண்டும் நினவுப் படுத்தியது! பத்து ரூபாய் கொடுத்து ( பணம் கொடுத்து கிடைக்கும் ஸ்பெஷல் தரிசனங்களை கோர்ட் தடைப்படுத்தியதாக ஒரு நினைவு - என் நினைவு சரிதானா?) முருகனுக்கு கிட்ட போய் அதே கோரிக்கைகளை சொல்லிவிட்டு பஸ் ஊழியர்கள் போல காத்திருக்க முடிவு செய்து திரும்பினோம்<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhehwsBgMpmzekicQlZ8yDMHuoTX-rQRuROdqLi5eDFQApYdNSlf9vmja8gxhwJnBZeE3oR1tIBk13vQOUdMV8GfsAeZxc3A3L1PFlsZJaESxla3MwCM7gbDEgof1xA7wusMkkxfDL2QBE/s1600/Kunrakudi.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhehwsBgMpmzekicQlZ8yDMHuoTX-rQRuROdqLi5eDFQApYdNSlf9vmja8gxhwJnBZeE3oR1tIBk13vQOUdMV8GfsAeZxc3A3L1PFlsZJaESxla3MwCM7gbDEgof1xA7wusMkkxfDL2QBE/s640/Kunrakudi.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Kunrakudi</td></tr>
</tbody></table>
<b>பிள்ளையார்பட்டி</b> அருகாமையில் நிறுத்தப் பட்டிருந்த பேருந்துகளின் எண்ணிக்கைகள் கொஞ்சம் பயமுறுத்தினாலும் கற்பக விநாயகர் ஏகாந்தமாய் உட்கார்ந்து கொண்டு திருப்தியாக காட்சி அளித்தது ஒரு எதிர்பாராத நிதான தரிசனம் .<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKwSm09jshVpsMXdCUeYY-rPh6Z90msFUcFXAE5buWx0vnirRmxX8mapwiencsouVKHmgwWEUmEyTJWy2TcVu1-T-aqjrX8nIbkKga3_tR705pRs5pDYNUET2OLj_GSOq_2NNor2DZC8Q/s1600/Pillayarpatti_VKs.jpeg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1152" data-original-width="864" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKwSm09jshVpsMXdCUeYY-rPh6Z90msFUcFXAE5buWx0vnirRmxX8mapwiencsouVKHmgwWEUmEyTJWy2TcVu1-T-aqjrX8nIbkKga3_tR705pRs5pDYNUET2OLj_GSOq_2NNor2DZC8Q/s640/Pillayarpatti_VKs.jpeg" width="480" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Pillaiyarpatti</td></tr>
</tbody></table>
அப்புறம் தான் தெரிய வந்தது அங்கு வந்த வண்ண உடை அணிந்த பல பக்தர்கள் அருகாமையிலுள்ள இடங்களுக்கு கால் நடையாகவே சென்றிருப்பது. இந்த இடத்தில் சில பக்தர்கள் (அனைவரும் அல்ல) செய்யும் ஒப்புக்கொள்ள முடியாத , நான் பார்த்த , செயல்களை குறிப்பிட வேண்டும். அநேகமாக எல்லோருமே தங்களை ஒரு தனிப் பிறவியாகவும் மற்றவர்களை அற்ப பதர்கள் போலவும் நினைக்கிறார்களோ என்றெண்ணத் தோன்றும் அவர்களின் நடவடிக்கைகள்- ரயிலில் அனைவரும் தூங்கினாலும் இவர்களின் கைபேசிலிருந்து உரக்க ஒலிக்கும் பக்திப் பாடல்கள் , ராமேஸ்வரம் போன்ற புனித தலங்களிலும் எங்கு பார்த்தாலும் எச்சில் துப்பும் வழக்கும் - ஏன் என்று கேட்டதற்கு ஒரு முறை சுட்டெரிக்கப் பார்த்து விட்டு நகர்ந்தார், பல பேர் வரிசையில் நின்றாலும் இவர்களுக்கென்னவோ க்ரீன் சானலில் ஆண்டவன் விசா கொடுத்ததுபோல் மற்றவர்களைப் பற்றிக் கவலையே படாமல் முந்தியடித்துக் கொண்டு முன்னேறுவர் !! பக்திக்கு முன் சிறிது பணிவும் தேவை என்பதை உணர்ந்தால் சரி<br />
<br />
<b>வயிரவன் கோயில் </b>என்ற நகரத்தாரால் பராமரிக்கப்படும் கோவில் இங்குள்ள குரங்குகள் செய்யும் அட்டகாசங்களுக்கிடையே அமைதியாக பல அற்புத சிற்பங்களுடன் காட்சி அளித்தது.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAWixTyqmqg7zXEgQieMjOgmvE1zWCxZkdcB14Zvgz1jVM3TNt59SrFIzIWaQK6XCFdTIjo_i2EC13N8MFaNFPp_Tkq5Z0ZNjZ3WH_SczPNmwut-3eak0EaJOlN1Q7wVUfyK6ov9xEBd8/s1600/Vayiravan+Temple.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAWixTyqmqg7zXEgQieMjOgmvE1zWCxZkdcB14Zvgz1jVM3TNt59SrFIzIWaQK6XCFdTIjo_i2EC13N8MFaNFPp_Tkq5Z0ZNjZ3WH_SczPNmwut-3eak0EaJOlN1Q7wVUfyK6ov9xEBd8/s640/Vayiravan+Temple.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Vayiravan Temple</td></tr>
</tbody></table>
காரைக்குடிக்கே பிரசித்தமான <b>கொப்புடையம்மன் கோவிலில்</b> மார்கழி சிறப்பு நிகழ்ச்சியாக சிறுவர் சிறுமிகளூடே திருப்பாவை போட்டி நடந்து கொண்டிருக்க உச்சி கால தீபாராதனையுடன் அம்மனை தரிசித்தது ஒரு திருப்திகரமான அனுபவம்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi88m2Mp1suWXXDhJgwkaOYurU0s2OXHHKXYR2uMTnpzq9EMxCUD1-0H2T8flUZ2q6qdPn3KAGv-e-eNuplgCCXt6wXTdd7hbnXhAngnrYcBHXlksBxPe2QaFbpgl9Dkgg_fMW45OSRjnw/s1600/Koppudaiamman_1.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="960" data-original-width="720" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi88m2Mp1suWXXDhJgwkaOYurU0s2OXHHKXYR2uMTnpzq9EMxCUD1-0H2T8flUZ2q6qdPn3KAGv-e-eNuplgCCXt6wXTdd7hbnXhAngnrYcBHXlksBxPe2QaFbpgl9Dkgg_fMW45OSRjnw/s640/Koppudaiamman_1.jpg" width="480" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Koppudaiyamman temple</td></tr>
</tbody></table>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
அன்னலட்சுமியின் மதிய உணவு தந்த தூக்கத்திற்குப் பிறகு சென்ற <b>மாத்தூர் சிவன் கோவிலில்</b> உயர்வு தரும் நந்தி சற்று உயரே சிம்ம பீடத்தில் இருந்தது முதன் முறையாக காணும் காட்சி .<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLFiSk1G51xYd3UQ4nC03Kv2tHMdA9GfDJjuWzEBSzZ2wdduEwZ3ro-eSoOHq-RWBtj2fHYT0KjS5Ofv51xbLY9BTxS9UcCUbB0k1iw4CkY107GyQbOvr-5Jm4h8dcWMJGaL17_OxH3lQ/s1600/Maathur_1.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="720" data-original-width="960" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLFiSk1G51xYd3UQ4nC03Kv2tHMdA9GfDJjuWzEBSzZ2wdduEwZ3ro-eSoOHq-RWBtj2fHYT0KjS5Ofv51xbLY9BTxS9UcCUbB0k1iw4CkY107GyQbOvr-5Jm4h8dcWMJGaL17_OxH3lQ/s640/Maathur_1.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Maathoor</td></tr>
</tbody></table>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgumaNXnEKLaebLv8SxCfk4qKA-Gca4t4lZqRNoBvPG5Ku8rtFUvdIfRdh9YoH0QaCzCe8YI1hkAQp9IbtzKU5g_hDw3k3nNbO2F1_YHfZOhf2apto_n_XAtIMdDjfXNF2fVVbQMAEPufw/s1600/Mathur+Nandhi.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgumaNXnEKLaebLv8SxCfk4qKA-Gca4t4lZqRNoBvPG5Ku8rtFUvdIfRdh9YoH0QaCzCe8YI1hkAQp9IbtzKU5g_hDw3k3nNbO2F1_YHfZOhf2apto_n_XAtIMdDjfXNF2fVVbQMAEPufw/s320/Mathur+Nandhi.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Nandhi </td></tr>
</tbody></table>
<b>இலுப்பைக்குடி</b> மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சிற்பங்களை ரசித்தபின் சென்ற நகரத்தார் கோவிலின் பராமரிப்பு பிரமிக்க வைத்தது.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrOvulISb8a_pv5kmJWBihe0aKXHbbTBDnQg1jD7Fd-hh-5QJu5IGYdqKDo_cPPEtpr046OfwVwjP657rcQoOQ87F29cwvsNF2xrlIrjkK3s6SR4x8Xq95s7YiF_mFouVNUwc0Du4vxKA/s1600/Iluppakkudi.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrOvulISb8a_pv5kmJWBihe0aKXHbbTBDnQg1jD7Fd-hh-5QJu5IGYdqKDo_cPPEtpr046OfwVwjP657rcQoOQ87F29cwvsNF2xrlIrjkK3s6SR4x8Xq95s7YiF_mFouVNUwc0Du4vxKA/s640/Iluppakkudi.jpg" width="480" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Iluppakkudi</td></tr>
</tbody></table>
அருகிலேயே உள்ள <b>யோக சனீஸ்வரர் ஆலயம்</b> மிக சக்தி வாய்ந்ததாம்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJe-HESBGYyrUQZqzegVF4xrG5VUoRctRu4vrYOTOYzPGTKN3UMMglfxjoytCzg4PVZu5A68RV5GbDxikSG0zuZbmxTD3rRP7VUP_Umt6TpC9nKuHE-nJMBDkyorQe-Qf7sTTHlNP39P8/s1600/Yoga+Saneeswarar+Koil.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJe-HESBGYyrUQZqzegVF4xrG5VUoRctRu4vrYOTOYzPGTKN3UMMglfxjoytCzg4PVZu5A68RV5GbDxikSG0zuZbmxTD3rRP7VUP_Umt6TpC9nKuHE-nJMBDkyorQe-Qf7sTTHlNP39P8/s640/Yoga+Saneeswarar+Koil.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Yoga Saneeswarar Koil</td></tr>
</tbody></table>
ஒட்டி இருந்த <b>108 பிள்ளையார் கோவிலின் </b>விசேஷம் மேல் வரிசை 54 பிள்ளையாரும் வலஞ்சுழியாக இருக்க கீழ் வரிசை அனைத்தும் இடஞ்சுழி விநாயகர்கள்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmt0pEyr8E_K2ILf5B0fBSBArtxKol5wAjZx1GMi0-1aLWt9iz1kJZhPkw8Es0RVz27xkanfLHLKbZ-h9T_kyHULHYkZ_EtbvnxBh9uRJuY9a3Siv3F15U-9MaSrIIl3u6anGKWy8rx1s/s1600/108_Pillaiyars_2.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="960" data-original-width="720" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmt0pEyr8E_K2ILf5B0fBSBArtxKol5wAjZx1GMi0-1aLWt9iz1kJZhPkw8Es0RVz27xkanfLHLKbZ-h9T_kyHULHYkZ_EtbvnxBh9uRJuY9a3Siv3F15U-9MaSrIIl3u6anGKWy8rx1s/s640/108_Pillaiyars_2.jpg" width="480" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">108 Pillayars</td></tr>
</tbody></table>
<b>அரியக்குடி சிவன் கோவிலில்</b> யாருமே இல்லாமலிருக்க அரியக்குடி <b>பெருமாள் கோவில் </b>புனரமைக்கப் படுவதால் பாலாலயத்தில் உள்ள பெருமாளின் தல வரலாற்றைச் சொன்ன பட்டரின் குரல் கேட்காத அளவுக்கு அருகிலிருந்த சில கும்பாபிஷேகக் கமிட்டி அங்கத்தினர்கள் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlxFy-OdG0AQ35MmEr9rRVF127tMYlfkJA5lBuv8b-Cp557dZJeOz20XinkO35gXI_7gDePMifTpUofIyKiaOjA1qkf3ViuVsG6Uy_FTB_dqB921ru-9aHaBlp_Jl6M5v0XnEqdJtja70/s1600/Ariyakudi_1.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="960" data-original-width="720" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlxFy-OdG0AQ35MmEr9rRVF127tMYlfkJA5lBuv8b-Cp557dZJeOz20XinkO35gXI_7gDePMifTpUofIyKiaOjA1qkf3ViuVsG6Uy_FTB_dqB921ru-9aHaBlp_Jl6M5v0XnEqdJtja70/s640/Ariyakudi_1.jpg" width="480" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Ariyakudi</td></tr>
</tbody></table>
எதிரில் இருந்த அருமையான கோவிலில் பிரத்யேக <b>நரசிம்மரை </b>வணங்கி தலை நிமிர்ந்தால் பயண முடிவுக்கு ஆதரவளிப்பது போல நின்றிருந்த ஹனுமனை தரிசித்து காரைக்குடிக்கு கையசைத்து விடை கொடுத்தோம் !<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWiQM4n8LNuktPhBHF4vheS6J2BUiis0TmEKMXE4VSfPMjrQ6VByG3HAzsIWcTtM6Tfk_3Gbz2SfI2Ql_bb3R_22WOU8LDZF9TLXikzfm23jgv9h6UrcOjtjeK-VvsG5S5KQLzuE3trmc/s1600/Ariyakudi+Narasimhar.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWiQM4n8LNuktPhBHF4vheS6J2BUiis0TmEKMXE4VSfPMjrQ6VByG3HAzsIWcTtM6Tfk_3Gbz2SfI2Ql_bb3R_22WOU8LDZF9TLXikzfm23jgv9h6UrcOjtjeK-VvsG5S5KQLzuE3trmc/s640/Ariyakudi+Narasimhar.jpg" width="480" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="font-size: 12.8px;">Ariyakudi Narasimhar</span></td></tr>
</tbody></table>
மூன்று நாட்கள், இருபத்து மூன்று கோவில்கள், சில சுற்றுலா தலங்கள் - இப்பொழுது நினைத்தால் மூச்சு வாங்குகிறது .<br />
<br />
ஆனால் கண்ட காட்சிகள் தேனாய் இனிக்கிறது - என்றும் இனிக்கும் !<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_TouZPePfg65Z2WF8ys6J3IHlWBgYxFNH2LJTL2-1EtOrQ6laXt9xeHcry5A6MGjrmH2iD2d4Cjoc2rah0euNKOHTZbJIlhT7QOqD0VwkFC7NLgAAlDUyOkmkWqwUgeinry6tjrmHD5Y/s1600/Karaikudi+Hotel_2.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="960" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_TouZPePfg65Z2WF8ys6J3IHlWBgYxFNH2LJTL2-1EtOrQ6laXt9xeHcry5A6MGjrmH2iD2d4Cjoc2rah0euNKOHTZbJIlhT7QOqD0VwkFC7NLgAAlDUyOkmkWqwUgeinry6tjrmHD5Y/s640/Karaikudi+Hotel_2.jpg" width="640" /></a></div>
<br />
இடது பதம் தூக்கி ஆடுபவனைக் காண வந்தவர்களையும் தரிசினத்திற்கும் சௌகரியமான அறைக்கும் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்ய வைத்ததும் அவன் செயலோ ?<br />
<br />
இப்படிப்பட்ட திருத்தலங்களைக் காண எந்த சிரமமும் எவ்வளவு காசும் செலவழிக்கலாம் - இருக்கும்போதே தூற்றிக் கொள்பவன் புத்திசாலி !!<br />
<br />
எத்தனை சிரமங்கள் இருந்தாலும் பார்க்க வேண்டிய செட்டிநாட்டு திருத்தலங்களுக்காக ஒற்றைக்கால் தவமும் தகும்<br />
<br />
<br /></div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-61939389135916613872017-12-24T17:10:00.001-08:002017-12-25T07:49:44.292-08:00மலைக்க வைத்த மலை நாட்டு திவ்ய தேசங்கள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
போன டிசம்பர் (2016) மாதத்தின் 'ஐந்து நாட்களில் நாற்பது சோழ நாடு திவ்ய தேச தரிசனத்தின்' இனிய நினைவுகள் இன்னும் மறவாத நிலையில், ஸ்ரீ ஜானகி டூர்ஸ் அனைத்து கேரள மலை நாடு திவ்ய தேசங்களையும் நான்கு நாட்களில் பார்க்கப் போவதாக அறிவித்தவுடன் 'உள்ளேன் ஐயா' என்று கையைத் தூக்கி பந்திக்கு முந்திக் கொண்டவர்களில் நானும் ஒருவன் என்பதை இன்று , பயணம் முடிந்தவுடன் நினைவு கூர்ந்து பார்ப்பதில் பெருமையும் இனிமையும் மேலோங்கி நிற்கிறது .<br />
<br />
கேரள விஜயம் இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்க பயணம் போன்று அதற்க்கென்று நிறைய முன்னேற்பாடுகள் தேவை. அங்கு வழக்கமாக கிடைக்கும் கொட்டை அரிசியை சமாளிக்க வேண்டும் , கையில் விரலுடன் சேர்த்து எப்பொழுதும் குடையும் இருக்க வேண்டும். முக்கியமாக அதிகாலை எழுந்திருக்க பழக்க வேண்டும் ஏனென்றால் அங்குள்ள அநேக கோவில்களை நான்கு மணிக்குத் திறந்து சீக்கிரமே நடை சார்த்தி , உம்மாச்சியை தட்டி தாச்சி தூங்க வைத்து விடுவார்கள். அதிகாலை இயற்கை உபாதைகளுக்கு கூடுதலாக ஒன்றிரண்டு மலை வாழைப் பழங்களை உள்ளே தள்ள வேண்டும் ; ஜானகி டூர்சில் அந்த பயம் தேவையில்லை - ரமேஷ் அதிகாலை நான்கு மணிக்கு கூட சுடச் சுட பில்டர் காபி கொடுத்து விடுகிறார் !! இப்படி அவரவர்கள் தங்கள் உடல்கூற்றுக்கு ஏற்ப தயார் செய்து கொள்வது முக்கியம் . ஆனால் இருந்த கழுத்தளவு வேலைகள் நடுவே மேற்கூறிய எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் தைரியமாக திருவனந்தபுரம் மெயிலில் ஏறி உட்கார்ந்தவுடன் வரவேற்றது அருமையான இட்டிலிகளும் தயிர் சாதமும் !<br />
<br />
சரியாக ரயில் டிக்கெட் கூட வாங்காத சில கருப்பு உடை அணிந்த பக்தர்கள் ( ஒரே படுக்கையில் விளக்கு அணைத்தவுடன் இருவர் படுத்திருந்தனர்) , தாங்கள் என்னவோ ரயிலையே விலைக்கு வாங்கி விட்டதாக நினைத்து போட்ட ஆர்ப்பாட்டம் . . . . மசாலா நெடி எல்லோரையும் கைக்குட்டையை நோக்கி ஓட வைத்த தின் பண்டங்கள் , மூன்று பேர் உட்கார வேண்டிய இடத்தில் ஐந்து பேர், எல்லோரும் படுத்து விளக்கை அணைத்தவுடன் செல் போனில் உரத்த ஒலியில் பக்தி பாடல்கள் - இந்த எல்லா உபத்திரவங்களை மீறி எதோ தூங்கி காலை ஐந்து மணிக்கு திருச்சூரை அடைந்தவுடன் குளிர்ந்த காலையும் சிரித்த முகத்துடன் வரவேற்ற வேன் ஓட்டுனரும் நம்பிக்கையை கூட்டினர் .<br />
<br />
<b>நாள்-2 (20-Nov-2017) :</b><br />
<br />
அருமையான ஹோட்டலில் ஒரு நல்ல வெந்நீர் குளியலுக்குப் பின் துவங்கிய யாத்திரை <b>இரிஞ்சா</b><b>ள</b><b>க்குடா என்ற</b> நாலம்பலங்களில் ஒன்றான<b> </b> க்ஷேத்திர விஜயத்துடன்தொடங்கியது . நாலம்பலம் என்பது கேரளத்தில் ஸ்ரீ ராமர் சகோதரர்களுக்கான உள்ள நான்கு கோவில்கள். இதில் <b>இரிஞ்சா</b><b>ள</b><b>க்குடா </b>பரதன் கோவில்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigMWfp3iaPGvW1nwfFZ2JHEZyzr32XCJoSuCaSR5QHsNV-o1q1q_EfElEWggLm0XL6BT41K5p45rbdbubvPdwYYlqR7P33RLZSuFUKhgRTJx7nm7Mu-hbAa5J6t-BCr1xBqobriHjl7Fg/s1600/IRUNJALAKUDA.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigMWfp3iaPGvW1nwfFZ2JHEZyzr32XCJoSuCaSR5QHsNV-o1q1q_EfElEWggLm0XL6BT41K5p45rbdbubvPdwYYlqR7P33RLZSuFUKhgRTJx7nm7Mu-hbAa5J6t-BCr1xBqobriHjl7Fg/s640/IRUNJALAKUDA.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">IRUNJALAKUDA</td></tr>
</tbody></table>
அடுத்து போனது சத்ருக்ன சுவாமியின் <b> </b><b>பா</b><b>யாமல் </b>என்ற திருக்கோவில். அநேகமாக எல்லா கேரளக் கோவில்களை போல் இதுவும் படு சுத்தமாக , அமைதியுடன் ஒரு ரிசார்ட் போன்ற அமைப்பின் நடுவே அழகிய பெருமாள் அரையிருட்டில் பல கேரள விளக்குகளின் ஒளியூடே அற்புதக் காட்சி அளித்தார்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjONMN1cFNMBnv0gQAcDGr8ube_wYOXpj4R0vCHOFAb6Ah3uzW1Z_5taVWU-ww__BLoFx9zs48lebXGSOhyPl-iwdQIlgpPNQ8KlTDPdBIyMk_c1LybmASd92bo-ll3GG562ocKJbmZutw/s1600/PAAYAAMMAL.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjONMN1cFNMBnv0gQAcDGr8ube_wYOXpj4R0vCHOFAb6Ah3uzW1Z_5taVWU-ww__BLoFx9zs48lebXGSOhyPl-iwdQIlgpPNQ8KlTDPdBIyMk_c1LybmASd92bo-ll3GG562ocKJbmZutw/s640/PAAYAAMMAL.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">PAAYAAMMAL</td></tr>
</tbody></table>
பின் விரைந்த ஸ்ரீ ராமரின் <b>த்ரிபரையார் </b>என்ற கோவில் முகப்பே வெகு அழகாக நம்மை வரவேற்கும். ஒரு திரைப்பட செட் போன்ற வண்ணக் கூரையைத் தாண்டியவுடன் வெகு பவ்யமாக வணங்கும் ஹனுமனை ஸ்ரீ இராமரின் பார்வையிலேயே கருணையைப் பொழியும் ஒரு சித்திரம் பக்தியை பன்மடங்கு தூண்ட வல்லது. வெடி வெடித்து நேர்த்திக்கடனை செலுத்தும் இத்தலத்தின் பின்புறம் ஓடும் ஆறு ஒரு அருமையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கிறது. கோவிலுள் ஜொலித்த கேரள விளக்குகளும் , வண்ணக் குடையும் ஆற்றைச்சுற்றி நிற்கும் தென்னைகளும் , நீங்கள் கேரளத்தில் தான் இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்யும்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9tSsBkoTFAPz3Kmp-hLRVUmClaL70sfHhyphenhyphenoLMRPK_GRL17A0BfxhNEm8fOuBBnX-_-Q72GUlWlUGdfB3v2ry-zG18b4dm5eqnAHKD09msoI6euGQEUeLKJRztQrct9NSes3AeU4PfnWw/s1600/TRIPAAYAR.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9tSsBkoTFAPz3Kmp-hLRVUmClaL70sfHhyphenhyphenoLMRPK_GRL17A0BfxhNEm8fOuBBnX-_-Q72GUlWlUGdfB3v2ry-zG18b4dm5eqnAHKD09msoI6euGQEUeLKJRztQrct9NSes3AeU4PfnWw/s640/TRIPAAYAR.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">TRIPAAYAR</td></tr>
</tbody></table>
அதி வேகமாக வந்தும் வடக்குநாதன் கோவில் மூடி விட்டதால் அதன் எதிரே உள்ள 'படான்ஸ்' உணவகத்தின் மதிய உணவு கொடுத்த கோழி தூக்கத்திற்குப் பிறகு சென்றது '<b>திருநாவாயா</b>' (1) என்ற திவ்ய தேசம். பரதப்புழா என்ற ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் நவமுகுந்தனின் இந்தத் திருக்கோவிலின் அழகு இங்கு உங்களை புகைப்படம் எடுக்காமல் நகர விடாது .<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizOI3SF_iTjSkl922sqE6bh8q1o8AdMYAvFuNDfrPSo70mhbYEsIy3dxKXhhY9ih3ukikYDe_ziX7h6xE5KLJcKhN3NNqE_pmuLRbpgV-VB5b7_6vzHis7hXxFBGQfi_jagtmdm5RXOWE/s1600/THIRUNAVAYA.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="720" data-original-width="960" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizOI3SF_iTjSkl922sqE6bh8q1o8AdMYAvFuNDfrPSo70mhbYEsIy3dxKXhhY9ih3ukikYDe_ziX7h6xE5KLJcKhN3NNqE_pmuLRbpgV-VB5b7_6vzHis7hXxFBGQfi_jagtmdm5RXOWE/s640/THIRUNAVAYA.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">THIRUNAVAYA</td></tr>
</tbody></table>
கார்த்திகை இருள் அதி விரைவில் சாலைகளை கவர்ந்து கொள்ள பின் சென்ற ' <b>திருவித்வக்கோடு</b> ' (2) , ஒரு மிகப் பழமையான திவ்ய தேசம். இன்னும் சில நிமிடங்களே மூடுவதற்கு இருந்த நிலையில் துளி ஒளி கூட இல்லாத நிலையிலும் அநேகமான மூத்த குடிமக்களே இருந்த எங்கள் குழு அந்த முக்கால் இருட்டிலும் எந்தத் தயக்கமும் இல்லாமல் விரைந்ததற்கான ஒரே காரணம் இந்தச் சூழலில் அமர்ந்திருக்கும் பெருமாளை தரிசித்தே தீர வேண்டும் என்ற வைராக்யமாகத் தான் இருக்க வேண்டும். நகுல சஹாதேவனுக்கு சந்நிதிகள் உள்ள , முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஒரு உகந்த இடமாகக் கருதப்படும் இந்தத் திருத்தலத்தில் , நாம் அதி வேக வேனில் வந்தும் கஷ்டப்பட்டதாகப் புலம்பும் பொழுது அந்தக் காலத்தில் நடந்தே வந்து மங்களாசாசனம் பாடிய குலசேகராழ்வாரை நினைத்து கை கூப்பாமல் இருக்க முடியவில்லை .<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2zodS9Q8WBICSRcPV58d6p3Rxp8UnsvMFNxILc9-_gCfufvdLC8NnJOSk9dRMcvqJROfzAE7VHR7WFZA8MBN-qdAk_0cGo7kWZsehcrn1nBHHsAU4ZNsgbkeizDYYcHvU737PVmIRKdc/s1600/THIRUVITHVACODE.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2zodS9Q8WBICSRcPV58d6p3Rxp8UnsvMFNxILc9-_gCfufvdLC8NnJOSk9dRMcvqJROfzAE7VHR7WFZA8MBN-qdAk_0cGo7kWZsehcrn1nBHHsAU4ZNsgbkeizDYYcHvU737PVmIRKdc/s640/THIRUVITHVACODE.jpg" width="480" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">THIRUVITHVACODE</td></tr>
</tbody></table>
<b>நாள்-3 (21-Nov-2017) :</b><br />
<br />
நடந்த நடைக்கும் கவர்ந்த மைல்களுக்கும் தங்க வைத்த இடத்தின் ஏ.சி கொடுத்த சுகத்தில் தூக்கம் தானாக வந்து மட்டையாகிப் போக, நான்கு மணி அலாரம் தான் நித்திரையைக் கலைக்க உதவியது. அதிகாலை தரிசனமாக '<b>திருமூழிக்குளம்</b>' (3) என்ற லட்சுமண சுவாமி கோவில் திவ்ய தேசமட்டுமின்றி நாலம்பத்திலும் ஒன்றாகும். அதிகாலையிலேயே போனதால் கேரளக் கோவில்களுக்கே உரித்தான 'சீவேலி' என்ற பிரதக்ஷணங்களையும் காண முடிந்தது. பெரிய கோவிலின் சுற்றி உள்ள நூற்றுக் கணக்கான விளக்குகளை எப்பொழுது, எப்படி ஏற்றுவார்கள் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvULd4tOKuW9ZT5dkjwGPGQ9jj4Ohu7pM58Wc4OuC8We5i6qQUoFXF-uLL8ZHGYoycdgSbWWttwckXQUsEpeZ9qhFJ2qLD-82gCfqBw3j6f5blNlvajhtDO9g1eHQW71HXlm_tZJBHrao/s1600/THIRUMOOZHIKULAM.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="720" data-original-width="960" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvULd4tOKuW9ZT5dkjwGPGQ9jj4Ohu7pM58Wc4OuC8We5i6qQUoFXF-uLL8ZHGYoycdgSbWWttwckXQUsEpeZ9qhFJ2qLD-82gCfqBw3j6f5blNlvajhtDO9g1eHQW71HXlm_tZJBHrao/s640/THIRUMOOZHIKULAM.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">THIRUMOOZHIKULAM</td></tr>
</tbody></table>
அடுத்துச் சென்ற '<b>திருக்காக்கரை' </b>(4) என்ற மக க்ஷேத்திரம் இரண்டு கோவில்களை கொண்டது. முகப்பில் இருந்த வாமன அவதார சிலையும் கோவிலைச் சுற்றி போடப்பட்டிருந்த வண்ண மயமான தரையும் , காலை நடை பயிற்சி போக முடியவில்லையே என்று ஏங்குபவர்களின் தாபத்தைத் தணித்து அழகிய புகைப்படத்தையும் ஞாபகார்த்தமாக கொடுத்து அனுப்பி வைத்தது.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRgq1IDoRN7ns9Tl_ynF97-Rv_5YL3rMjfR3lATDxEJfOvpLHS9QyLwbFH3WciILXUsRrXuWki0xCy_0hAn6kJwQ_hDaFLAxtpmyrjhbsD3EN0f2HfWEg0H8AS3-np-oWS2iNfuGWq2Eg/s1600/THIRUKAAKARA.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="720" data-original-width="960" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRgq1IDoRN7ns9Tl_ynF97-Rv_5YL3rMjfR3lATDxEJfOvpLHS9QyLwbFH3WciILXUsRrXuWki0xCy_0hAn6kJwQ_hDaFLAxtpmyrjhbsD3EN0f2HfWEg0H8AS3-np-oWS2iNfuGWq2Eg/s640/THIRUKAAKARA.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">THIRUKAAKARA</td></tr>
</tbody></table>
பாஷை பரிச்சயமில்லாத தேசத்தில் வண்டி ஓட்டுனரின் 'இதோ இதோ' என்ற உறுதியை நம்பித்தான் பயணிக்க வேண்டி இருக்கிறது . ஓட்டுனரின் இந்த உறுதி மொழி இம்முறை சற்றே ஏமாற்றத்தை அளிக்க விரைவாக சிந்தித்த பயண மேலாளர் விடாமல் பிடிவாதமாக கூடவே ஓடி வரும் சிறிய ஓடையின் அழகில் மயங்கி வண்டியை நிறுத்தி <b>ஆலப்புழாவிற்க்கே </b>பிரபலமான ஒரு படகு சவாரிக்கு ஏற்பாடு செய்தது அன்னாரின் மாஸ்டர் ஸ்ட்ரோக் ! மிகக் குறைந்த செலவில் ஏறக்குறைய ஒரு மணி நேர படகு சவாரி அனைவரையும் பசி மறந்து ரசிக்க வைத்தது. கேரளத்துக்கே உரிய தென்னைகள் தலை குனிந்து ஓடும் தண்ணீரை முத்தமிட முயல , அமைதியாக நீந்திக் கொண்டிருந்த வெள்ளை நாரைகளும் சில கருப்பு வாத்துகளும் பயந்து சிறகடிக்க குழுவினர் பாய்ந்து பாய்ந்து கேரள அழகை கைப்பேசியின் சொல்ப மெகா பைட்டுகளில் முடக்க முயன்று வெற்றியும் பெற்றனர் .<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEig3hn-cTbB4zNLtZYHjx-ka7UgRlW-sNgCiCCfBt9y3ZwcXZdHzqkJTSymswzELne3761iEAhi4bVX_LW2VrZOI0H4j1F2PkCO28NPbjr7gYFwxWMaHISi2Mdbyvslgfglz-0a_SzrY3g/s1600/ALLEPPEY_BOATING.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="720" data-original-width="960" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEig3hn-cTbB4zNLtZYHjx-ka7UgRlW-sNgCiCCfBt9y3ZwcXZdHzqkJTSymswzELne3761iEAhi4bVX_LW2VrZOI0H4j1F2PkCO28NPbjr7gYFwxWMaHISi2Mdbyvslgfglz-0a_SzrY3g/s640/ALLEPPEY_BOATING.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">ALLEPPEY_BOATING</td></tr>
</tbody></table>
அற்புத படகு சவாரிக்குப் பின் விரைந்த <b>திருக்கொடிதானம் </b>(5)<b> </b>என்ற திவ்ய தேசம் ஒரு நல்ல சாப்பாட்டிற்கு பின் சிறிது கண் அசர முயன்றவர்களை ஒரு தீடீர் மழையால் எழுந்து அமர வைத்தது . பெருமாளே வந்தாலும் கேரளக் கோவில்கள் உரித்த நேரத்தில் தான் திறப்பார்கள்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_7shnzs7_NEDZpLJyAIM8OtfP3hWy91d8QAAvCHE2ou6SgXVhxKSGmhjeBW6GcRcDmXWQSCMICQRxaLAijBMvNU6gp7E6adFcc90BIKD98dKG34McVe4z7BtTKAe3fVE1oUgUHL8H36I/s1600/THIRUKADITHAANAM.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="720" data-original-width="960" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_7shnzs7_NEDZpLJyAIM8OtfP3hWy91d8QAAvCHE2ou6SgXVhxKSGmhjeBW6GcRcDmXWQSCMICQRxaLAijBMvNU6gp7E6adFcc90BIKD98dKG34McVe4z7BtTKAe3fVE1oUgUHL8H36I/s640/THIRUKADITHAANAM.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">THIRUKADITHAANAM</td></tr>
</tbody></table>
பொறுமையாக இருந்ததற்கு கிடைத்த அறிய பரிசான அருமையான சாயரக்ஷை தரிசனத்திற்குப் பிறகு கிடைத்த ரமேஷின் சுடச் சுட காபி மக்களை மட்டும் ஊக்குவிக்காமல் ஓட்டுநரையும் உசுப்பியதில் ஆக்சிலேட்டர் மேல் வைத்த காலை எடுக்க மறந்ததால் <b>ஆரண்முழா பார்த்தசாரதி</b> (6) கோவிலான அடுத்த திவ்ய தேசத்தை விரைவாகவே அடைய முடிந்தது.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7FpKGia5yHW5BzIRP_l5W-Quphlz4KEwzFiYFjikJX9_It1RZg0l9QpD0acLB4D7SViBcsCVNhy8AMIjMFazCmn_OC_aA67kpmOpcGObnx27CVviGsHutV1Yn05VKcZpLgYsSPKo9TM0/s1600/ARANMULA.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7FpKGia5yHW5BzIRP_l5W-Quphlz4KEwzFiYFjikJX9_It1RZg0l9QpD0acLB4D7SViBcsCVNhy8AMIjMFazCmn_OC_aA67kpmOpcGObnx27CVviGsHutV1Yn05VKcZpLgYsSPKo9TM0/s640/ARANMULA.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">ARANMULA</td></tr>
</tbody></table>
இந்த ஓட்டம் போதாது இன்னும் சில நிமிடங்களில் அடுத்த திவ்ய தேசமான <b>திருவள்ளா </b>(7) மூடி விடுவார்கள் என்று பயமுறுத்தியதால் எவ்வளவு விரைந்தாலும் ஒரு சிலரே சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது. சீவேலி தொடங்கியதால் அங்கு இருந்த பட்டர் அறிவுரையின் பேரில் பொறுமையாக காத்திருந்ததில் மீதமிருந்த சிலரும் தரிசனம் செய்து கொள்ள அனைவரும் திருப்தியாக வாசலில் இருந்த தங்க தூண் அருகே சில புகைப் படங்களுக்குப் பின் சந்தோஷமாக மசால் தோசை சாப்பிட ஹோட்டல் திரும்ப முடிந்தது .<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJWQFZSO1B80smIXNiAf2Pl3Q6gHUKx_oKvwEfkWHQ_lKaa5xG4EJnWQ2_LI6tOPlfoIyUu92hdnyY3q8my6o2sWydbATTSbewHsunrLTnFNVgTm6GMSzKzxIm6a-DkLv4g3nNQiFxdrg/s1600/THIRUVALLA.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJWQFZSO1B80smIXNiAf2Pl3Q6gHUKx_oKvwEfkWHQ_lKaa5xG4EJnWQ2_LI6tOPlfoIyUu92hdnyY3q8my6o2sWydbATTSbewHsunrLTnFNVgTm6GMSzKzxIm6a-DkLv4g3nNQiFxdrg/s640/THIRUVALLA.jpg" width="480" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">THIRUVALLA</td></tr>
</tbody></table>
<b>நாள்-4 (22-Nov-2017) :</b><br />
<b><br /></b>
திருவள்ளாவில் இருந்த ஹோட்டல் தங்குவதற்கு அருமையாக இருந்தாலும் அதிகாலையில் வெந்நீர் கொடுக்காமல் படுத்தி எடுக்க, சிலர் கிளம்ப வேண்டிய நேரத்திலும் துண்டைக் கட்டிக்க கொண்டு குளிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்க நேரம் பறந்தது. கொடுத்த காலை உணவு நன்றாக இருந்தாலும் வெந்நீர் கடுப்பில் ஆளாளுக்கு கவுண்டரில் இருந்த நேற்றுத்தான் வேலைக்கு சேர்ந்திருந்த பெண்ணை வறுத்து எடுத்த திருப்தியில் கிளம்பினார்கள் .<br />
<br />
அடுத்து சென்ற <b>திருவண்வண்டூர் </b>(8)<b> </b>என்ற நம்மாழ்வார் பாடிய இந்த திவ்ய தேசம் காலை நேரத்தில் அருமையாக இருந்தாலும் எந்த மஹாநுபாவனோ தரையை சரியாக பாவாமல் சிறிய கற்களை போட்டு நிரப்பி இருந்ததால் அனைவரும் கொஞ்சம் நொண்டி அடித்துக் கொண்டே விரைந்தார்கள் .<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhh0PjLXWOyc72MyjubBoXEL2-4a8SwLAGlxv4tTYQjE0qS0uNW44AflifXDlZgnQK2HaF1pKqJ6Y3aSYJAF-1_dQ1d6MTyZIcFTEnyuTBggd8YAkF336PFbSLBY6kIYN4I1kO-B_OVMso/s1600/THIRUVANVANDUR.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhh0PjLXWOyc72MyjubBoXEL2-4a8SwLAGlxv4tTYQjE0qS0uNW44AflifXDlZgnQK2HaF1pKqJ6Y3aSYJAF-1_dQ1d6MTyZIcFTEnyuTBggd8YAkF336PFbSLBY6kIYN4I1kO-B_OVMso/s640/THIRUVANVANDUR.jpg" width="480" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">THIRUVANVANDUR</td></tr>
</tbody></table>
அடுத்து விரைந்த <b>திருச்சிற்றாறு </b>(9) என்ற திவ்ய தேசம் ஒரு சிறிய , ஆனால் அழகிய கோவில். கூட்டமே இல்லாத அமைதியான காலையில் ஒரு மன நிறைவான தரிசனம் .<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEia637_zUNLosrhGHMe0ZT8t420GZfKByplThsNai6Zl6CEpH413NZqwho2sUMEykw0LKO0fLpwQkNNJDFXgRwKo3neVDun_Ii75WZGdFsC9RZth_UBcFfsLsm0OZgN3b50uBz_lsOLU9w/s1600/THIRUCHITTAARU.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEia637_zUNLosrhGHMe0ZT8t420GZfKByplThsNai6Zl6CEpH413NZqwho2sUMEykw0LKO0fLpwQkNNJDFXgRwKo3neVDun_Ii75WZGdFsC9RZth_UBcFfsLsm0OZgN3b50uBz_lsOLU9w/s640/THIRUCHITTAARU.jpg" width="480" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">THIRUCHITTAARU</td></tr>
</tbody></table>
பின் சென்ற <b>திருப்புலியூர் </b>(10) <b> </b>, ஒரு மிகப் பெரிய அழகான கோவில். கோடைகால விடுதி போல பராமரிக்கப் படும் இந்த இடத்தில் உள்ள பீமனின் பெரிய கதை சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பெரிய ஈர்ப்பு. இதனருகில் நின்று புகைப் படம் எடுக்காதவர்களே இருக்க மாட்டார்கள். இவ்வளவு பரபரப்புகளுக்கு நடுவே சில உள்ளூர் பக்தர்கள் அமைதியாக பாடிக்கொண்டிருந்தார்கள் !!<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXhtBGcX2ZR99UpUffLJhGEaRbGd3737jlxYeVva-Kn74Ecu-mKhFZWIEeuIfgD1vpM1Jr2vcEVqvzREmx9pYnKTNzrYXACW4_ZDTtBH1x7cxn_oOkINXegzAIM4BChtzu6NXS3GOev3w/s1600/THIRUPULIYUR.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXhtBGcX2ZR99UpUffLJhGEaRbGd3737jlxYeVva-Kn74Ecu-mKhFZWIEeuIfgD1vpM1Jr2vcEVqvzREmx9pYnKTNzrYXACW4_ZDTtBH1x7cxn_oOkINXegzAIM4BChtzu6NXS3GOev3w/s640/THIRUPULIYUR.jpg" width="480" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">THIRUPULIYUR</td></tr>
</tbody></table>
பக்கத்திலிருந்த <b>த்ரிப்போரூர்</b> முருகன் கோவில், திவ்ய தேசமாக இல்லா விட்டாலும் , இந்த சுற்றுலாவில் கிடைத்த ஒரு நல்ல போனஸ். இந்த எளிய கோவிலில் இருந்த சில அறிய சிற்பங்கள் அதிசயிக்க வைத்தது .<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1AH6xrbAYCT0MQ9z6lzcGbiyOYiWl7-4XYbwNHkaq3d5CWeD-bZenonKGVMRuyepysAc0PfKij-Tiap-r35Mo9GWQ5h6M2r7cmgOnz0Crn2DN9-AOt9WX6TY0zu2_9gxiS0Y-fxj-zv8/s1600/THRIPORUR.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1AH6xrbAYCT0MQ9z6lzcGbiyOYiWl7-4XYbwNHkaq3d5CWeD-bZenonKGVMRuyepysAc0PfKij-Tiap-r35Mo9GWQ5h6M2r7cmgOnz0Crn2DN9-AOt9WX6TY0zu2_9gxiS0Y-fxj-zv8/s640/THRIPORUR.jpg" width="480" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">THRIPORUR</td></tr>
</tbody></table>
பின் திருவனந்தபுரத்திற்கு வந்த நீண்ட பயணம் நல்ல வாநிலையாலும் , நடுவில் எல்லோரும் சுவைத்த ஐஸ்க்ரீமினாலும் சற்றும் சிரமம் தெரியாமல் அமைந்தது.<br />
<br />
திருவனந்தபுரம் <b>அனந்த பத்மநாப சுவாமி கோவில்</b> (11) தரிசனம் என்றுமே கொஞ்சம் பரபரப்பானது தான். ஏகப்பட்ட பாதுகாப்பு கெடுபிடிகள் , வேட்டியைத் தவிர எதற்குமே அனுமதி கிடையாது- போதாக் குறைக்கு மாலை வேளையில் உடனுக்குடன் கதவைச் சாத்தி விடுவார்கள். டிசம்பர் மாதத்தில் இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களின் கூட்டம் வேறு. இவை அனைத்தும் இருந்தும் இந்த முறை கிடைத்த தரிசனம் அருமை. எடுத்துச் சென்ற விஷ்ணு ஸஹஸ்ரநாம புத்தகத்தை திறப்பதற்குள் தரிசனம் நிறைவடைந்திருந்தது . வெளியே வந்ததும் மீண்டும் உள்ளே சென்று கிட்டிய தரிசனம் தான் கூடுதலான ஊக்க போனஸ் !<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEib4LbRgI94ctK3U-KAaTbcSDhN6aj79g1zJOaQJkV-KBFTECjV_8YP4Rbolb3vtZX1xAnHUGslmCzQtkf5nXkhM-Zrt5jbvnAKIlcQRzOcd8QloWiLYWR8tnOk7uyXYwIgu9kPI50oouw/s1600/ANANTHA+PADMANABHA+SWAMY.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="720" data-original-width="960" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEib4LbRgI94ctK3U-KAaTbcSDhN6aj79g1zJOaQJkV-KBFTECjV_8YP4Rbolb3vtZX1xAnHUGslmCzQtkf5nXkhM-Zrt5jbvnAKIlcQRzOcd8QloWiLYWR8tnOk7uyXYwIgu9kPI50oouw/s640/ANANTHA+PADMANABHA+SWAMY.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">ANANTHA PADMANABHA SWAMY</td></tr>
</tbody></table>
பெரிய கோவிலில் நிறைவான தரிசனம், ஸ்ரீ ஜானகி டூரின் சொன்ன எல்லா திவ்ய தேசங்களும் நிறைவடைந்திருந்த ஒரு நிம்மதி கலந்த பெருமூச்சு அனைவரிடமும் தெரிந்தது. அருகிலுள்ள சிப்ஸ் கடைக்கு சில ஆயிரங்களைக் கொடுத்து விட்டு எடுத்துச்சென்ற பெட்டியின் அளவைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படாமல் சிப்ஸ் பொட்டலங்களை அள்ளிக் கொண்டு நடந்தே வந்து அருகிலுள்ள இந்தப் பகுதியில் மிகப் பிரபலமான <b>மிலிட்டரி விநாயகரின்</b> கூட்டமிருந்தும் நிறைவான தரிசனம்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsyb3YEHoHGwfASTBJGbz5R2Ahg_gbPV0CWMsWP4qFsq0t0ubTgbQWeyB1KhgJj5Cwdi8v8G90WWKC2JVHFFwrir6BJVCgv4VA3f3cMAsnjufpgJ1Su7PQPxT-osNFw_32VmxtrtfTUHQ/s1600/MILITARY+VINAYAGAR.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsyb3YEHoHGwfASTBJGbz5R2Ahg_gbPV0CWMsWP4qFsq0t0ubTgbQWeyB1KhgJj5Cwdi8v8G90WWKC2JVHFFwrir6BJVCgv4VA3f3cMAsnjufpgJ1Su7PQPxT-osNFw_32VmxtrtfTUHQ/s640/MILITARY+VINAYAGAR.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">MILITARY VINAYAGAR</td></tr>
</tbody></table>
தினத்தின் , சுற்றுலாவின் கடைசி தரிசனமாகக் கிடைத்தது , சக்தி வாய்ந்த உலக சாதனைகளில் கூட்டத்திற்காக இடம் பிடித்திருந்த <b> ஆற்றுக்கால் பகவதி கோவில் </b>.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAHFGNw833r3mY-9oO_HmBI1W0Gc3984VXIzRkKtzvC7FukY94jOcpttZybr7TqkKNfPtQ9QDZPH_rMK4Qanr_V_sKSKzzt1roNPxdcAk4iNtarA-p9XiVay3yAsXnMPHdGsdSrR0wkhc/s1600/NOV_22_AATRUKAAL+BAGAWATHY_6.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="720" data-original-width="960" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAHFGNw833r3mY-9oO_HmBI1W0Gc3984VXIzRkKtzvC7FukY94jOcpttZybr7TqkKNfPtQ9QDZPH_rMK4Qanr_V_sKSKzzt1roNPxdcAk4iNtarA-p9XiVay3yAsXnMPHdGsdSrR0wkhc/s640/NOV_22_AATRUKAAL+BAGAWATHY_6.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">AATRUKAAL BAGAWATHY</td></tr>
</tbody></table>
<b>நாள்-5 (23-Nov-2017) :</b><br />
<br />
ஸ்ரீ ஜானகி டூர்சில் சொன்னது என்னவோ கேரளத்தில் உள்ள பதினொன்று திவ்ய தேசங்கள் தான் - சொன்னபடி அவைகளை திவ்யமாக தரிசிக்க வைத்து கடமையை முடித்து சொன்ன சொல்லைக் காப்பாற்றியும் விட்டார்கள் ஆனால் மலை நாடுகள் திவ்ய தேசம் மொத்தம் பதிமூன்று. மீதமிருந்த இரண்டு திவ்ய தேசங்கள் தமிழ் நாட்டில் இருந்ததாலோ என்னவோ அவைகள் இந்த பட்டியலில் சேர்க்கப் படவில்லை. ஆனால் மீண்டும் நாகர்கோவில் அருகிலுள்ள இந்த இரண்டு திவ்ய தேசங்களுக்கும் எடுத்து கூட்டிக் கொண்டு வருவது சிரமமென்பதால் திருவனந்தபுரத்தை சுற்றிப் பார்க்கக் கொடுத்திருந்த கடைசி நாளை நான் இந்த இரண்டு திவ்ய தேசங்களையும் பார்க்க செலழிப்பதாக முடிவு செய்திருந்தேன் .<br />
<br />
ஹோட்டல் உதவியுடன் ஏற்பாடு செய்திருந்த ஒரு பிரத்யேக காரில் கிளம்பிய நான்கு பேர் குழு எந்த சிரமத்தையும் பொருட்படுத்தாது பெருமாளை தரிசிப்பதிலேயே குறியாக இருந்தது அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து நான்கு மணிக்கு கிளம்பியதிலேயே தெரிந்தது.<br />
<br />
கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே டென்க்ஷன் இருந்தததற்குக் காரணம் யாருமே இந்த இரண்டு கோவில்களின் நடை திறப்பு விவரங்களை சரியாக சொல்லாததுதான். இருந்தும் அதிகாலையிலேயே கிளம்பியதால் கிட்டத்தட்ட ஆறேகால் மணிக்கே <b>திருவட்டாறு </b>(12)<b> </b>திவ்ய தேசத்தை அடைந்தது , நிம்மதியை அளித்தது. கோவிலில் பாலாலயம் நடந்து கொண்டிருந்தாலும் திடீரென்ற அங்கு வந்த ஒருவர் எங்களை கூட்டிச் சென்று புதிதாக வடிவமைக்கப் படும் சயனப் பெருமாளை, அவரது நீண்ட விரல்களை, ப்ரத்யேகமாகக் காண உதவியது சிலிர்க்க வைத்தது.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBLF1yQFGhaQlRHRAFdTzYsozEHVDs1xfY4Q-Bt3i7FWNdD3wvG9uDv8IfGLEGNg_-ptundxDvuW6PWPXGttfJBv5_X3NL1habf8HojuGZiIwTjy1dPbvnDeMv0L8ipFMbvNWosXMFY5k/s1600/THIRUVATTARU.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBLF1yQFGhaQlRHRAFdTzYsozEHVDs1xfY4Q-Bt3i7FWNdD3wvG9uDv8IfGLEGNg_-ptundxDvuW6PWPXGttfJBv5_X3NL1habf8HojuGZiIwTjy1dPbvnDeMv0L8ipFMbvNWosXMFY5k/s640/THIRUVATTARU.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">THIRUVATTARU</td></tr>
</tbody></table>
மிக அருகிலேயே இருந்த திருப்பதிசாரம் என்றழைக்கப்படும் <b>திரு வெண்பரிசாரம்</b> (13) என்ற திவ்ய தேசம் அமைந்திருந்தது ஒரு சிறிய கிராம சூழ் நிலையில். கோவிலைச் சுற்றி இருந்த அக்ரஹாரம் , அங்கு வசிக்கும் மக்களின் உபசரிப்பு அந்த ஊரை விட்டு புறப்படவே விடவில்லை . உள்ளே நுழைந்தவுடன் எங்களின் பரபரப்பை பார்த்த கோவில் சிப்பந்தி கோவில் மூட இன்னும் நிறைய நேரமிருப்பத்தைச் சொன்னது எங்கள் மூச்சைக் கொஞ்சம் சீராகியது . கூட்டமே இல்லாத அமைதியான அதிகாலையில் கிடைத்த தரிசனம் இந்த மலை நாட்டு திவ்ய தேச தரிசன முயற்சிக்கு கிடைத்த நிறைவுப் பரிசாகவே கருத முடிந்தது. கோவிலின் எதிரே அமைந்திருந்த அழகிய குளத்தைக் கண்ட பிறகு நகர்ந்த எங்கள் மன நிறைவு சொல்லி மாளாது.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjElarx7bCMq7SEyL_WoWcLTFulbyjeVeaG0IzTEd67TjzumP8iMWJCUfNYEz2XDpMATXYAUmDvZPf0Mm14gzc_6Bi24eKJlhqFZeHN2xOvJjZnqNpYrtpBaQxrVOR2XukxvrNDV5WfzzU/s1600/THIRUVEN+PARISAARAM.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjElarx7bCMq7SEyL_WoWcLTFulbyjeVeaG0IzTEd67TjzumP8iMWJCUfNYEz2XDpMATXYAUmDvZPf0Mm14gzc_6Bi24eKJlhqFZeHN2xOvJjZnqNpYrtpBaQxrVOR2XukxvrNDV5WfzzU/s640/THIRUVEN+PARISAARAM.jpg" width="480" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">THIRUVEN PARISAARAM</td></tr>
</tbody></table>
சென்ற காரும் இருந்த டென்க்ஷனில் ஒரு சக்கரத்தின் காற்றை இழந்தும் நாங்கள் திருவனந்தபுரத்தை சௌகரியமாக நண்பகலில் அடைய முடிந்தது.<br />
<br />
<u>அசர வைத்தது</u> : கேரளத்தின் பல மூலைகளில் பல கோலங்களில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் ; நாம் இந்தக் காலத்திலும் அதி நவீன வாகனங்களிலும் போக சிரப் படும் இடங்களில் நம்மாழ்வார் போன்றவர்கள் நடந்தே சென்று பாடல்கள் பாடி இருப்பது; இந்தக் கோவில்களில் இருக்கும் சுத்தம் ; எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் பாரம்பரியத்தைக் காக்கும் கோவில் நிர்வாகங்கள்; மலை நாட்டு திவ்ய தேசங்கள் இதே மேம்பட்ட நிலையில் இன்னும் பல காலங்கள் இருப்பதற்கான எல்லா அறிகுறிகளும் நன்றாகவே தெரிகிறது !<br />
<br />
<u>திரும்பிப் பார்க்க வைத்த தருணங்கள்: </u> இந்தப் பக்கத்துக்கு கோவில்களின் நேரங்களைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப் பட்ட தினசரி பயண ஏற்பாடு ; அநேகமாக எல்லா இடங்களிலுமே கிடைத்த, வயிற்றை பதம் பார்க்காத உணவு; இவர்களுக்கே உரித்தான அதிகாலை பில்டர் காபி; இப்படி எல்லாமே அமைந்தது பாக்கியமே. நான் ஐந்து வருடங்களுக்கு மேலாக இவர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருப்பதால், ஸ்ரீ ஜானகி டூர்சின் அணுகுமுறையில் ஒரு நல்ல முதிர்ச்சியைக் காண முடிகிறது !<br />
<br />
இது போன்ற தனி மனிதர்களால் அணுகுவதற்கே சிரமப்படும் இடங்களுக்கு அழைத்துச் செல்வதில் தான் ஸ்ரீ ஜானகி டூர்ஸ் போன்ற நிறுவனங்களின் சேவைகள் தனித்து நிற்க்கின்றன. வளர்ந்து வரும் போட்டிகளை உணர்ந்து தனித்துவமிக்க மேம்பட்ட சேவைகளை ஜனங்களுக்கு அளிக்கும் நிறுவனங்களுக்கு பரபரப்பான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதில் எந்த ஐயமுமில்லை !!</div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-77795330166175913432017-06-25T08:04:00.000-07:002017-06-25T08:12:22.688-07:00 மீண்டும் ஒரு 'கிரேசி' அனுபவம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOcq7v0R-cD1OTc3BSQwDUkcixVKHaqxj9bhWVxGXyxtY-PK-WUWU_-2vJHFw4pTinrsKDfQrRPRx_Bz1fNEnLwCO_TEw7QUNYd3vM_HnSjNalLRPrFllol6kx2c-N4IELxO8hK91o_cc/s1600/Drama.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOcq7v0R-cD1OTc3BSQwDUkcixVKHaqxj9bhWVxGXyxtY-PK-WUWU_-2vJHFw4pTinrsKDfQrRPRx_Bz1fNEnLwCO_TEw7QUNYd3vM_HnSjNalLRPrFllol6kx2c-N4IELxO8hK91o_cc/s400/Drama.JPG" width="400" /></a></div>
<br />
போன வருடம் அநேகமாக இதே நேரத்தில் தான் என்று நினைக்கிறேன் எஸ். வி சேகர் (மீண்டும்) மேடையேற்றிய 'கிரேசி தீவ்ஸ்' என்னும் நாடகத்தைக் காண நேர்ந்தது - அன்று கூட மோஹனைப் பற்றி சேகர் பேசியதாக நினைவு . ஏனோ தெரியவில்லை இப்பொழுது மோகன்-மாது குழுவினரே மீண்டும் அதே நாடகத்தை அரங்கேற்றினார்கள் - நானும் கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் உறுப்பினராக நாரத கான சபாவில் போன வாரம் பார்த்தேன்.<br />
<br />
அவ்வளவு பெரிய அரங்கிற்கு வந்த கூட்டமென்னாவோ வெகு குறைவு. ஆனால் சொன்ன நேரத்தில் டாண் என்று ஏழு மணிக்கு கற்பூர ஹாரத்தி காட்டி திரை தூக்கி விட்டார்கள். கதை அநேகமாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான் - அதிகம் விவரிக்கத் தேவை இல்லை. இதை எழுத தூண்டியது இதற்க்கு மெனக்கெட்ட முயற்சி.<br />
<br />
அறுபதுகளில் மூச்சிரைக்க ஓடி ஆர். ஆர். சபா வாசலில் இருப்பவரிடம் கெஞ்சி மாடிக்கு அனுப்பப்பட்டு உட்கார்ந்தவுடன் மணி அடித்துத் திரை தூக்க அநேகமாக நிறைந்த அரங்கிலிருந்து வந்த கரகோஷத்திற்கும் , இன்று வந்த சொல்ப கும்பலில் இருந்து தயக்கத்துடன் ஆனால் ஒரு விம்பிள்டன் பதவிசுடன் வந்த கைத்தட்டலுக்கும் நிறைய வித்தியாசமிருந்தது .<br />
<br />
இதில் என்னை வியக்க வைத்தது இந்தக் குழுவினரின் முயற்சி .<br />
<br />
நடிகர்கள் வெகு கவனமாக நான்கு உயர மைக்குகள் முன் நின்று வசனங்கள் பேச, யாரேனும் தள்ளி நின்றால் அவர்களை லாவகமாக மைக் முன் தள்ளும் உணர்வுடன் கூடிய முயற்சி .<br />
<br />
மேடையின் பின்புறம் இழுக்கப்படும் வெகு புதிதாக இருந்த திரை, இரண்டு காட்சிகளுக்கு நடுவில் எடுத்துக் கொள்ளும் மிக்க குறைந்த நேரம் - வியக்க வைத்தது .<br />
<br />
மாது அதே இளமையை தோற்றத்திலும் குரலிலும் காட்டினாலும் மோகனின் வயது அவரின் தளர்ந்த நடையில் தெரிந்த பொழுது குறையாகத் தெரியாமல் ஒரு மெல்லிய வருத்தம் தோன்றியது; இப்படிப் பட்ட நாடக முயற்சிகள் இன்னும் எவ்வளவு வருடங்களுக்குத் தாக்குப் பிடிக்கும் என்று. ஏற்கனவே சோ , மனோகர் ஆகியோரின் வெற்றிடங்கள் நம்மை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க வருங்கால மக்களுக்கு இப்படிப் பட்ட நாடகங்கள் பார்க்கும் அனுபவமே இல்லாமல் போய் விடுமே என்ற வருத்தம் மேலோங்கி இருந்தது .<br />
<br />
பின்னணி இசைக்கு ஒரு சபாஷ் போடலாம் அவ்வளவு விறுவிறுப்பு - ஒரு இடம் கூட பிசிறவில்லை - நல்ல முயற்சி.<br />
<br />
கொஞ்சம் அதிர்ச்சியாக நான் உணர்ந்த விஷயங்கள் இரண்டு:<br />
<br />
ஒன்று, அன்று ஆரவாரமாக ரசிக்கப் பட்டு பேசப்பட்ட பட்ட ஜோக்குகள் இன்றைக்கு ஒரு சிறிய புன்னகையே வரவழைத்தது. ஒரு வேளை ரிமோட் பட்டனைத் தட்டினால் எப்பொழுது வேண்டுமானலும் கிடைக்கக் கூடிய நகைச்சுவை காட்சிகளின் ஏராளம் தான் இதற்க்கு காரணமோ என்று கூட தோன்றியது .<br />
<br />
மற்றொன்று , நாடகம் நடை பெற்ற தொண்ணூறு நிமிடங்கள் கூட பொறுமையாக உட்கார முடியவில்லை . இதற்கு நாடகம் நடத்துபவர்கள் எந்த விதத்திலும் பொறுப்பல்ல. நமக்குத்தான் பொறுமை குறைந்து விட்டது என்று நினைக்கிறேன்.<br />
<br />
இந்த இரண்டிற்கும் காரணம் இன்று நிலவும் problem of plenty என்பது என் கருத்து .<br />
<br />
எப்படியோ கிரேசி மோகனின் நாடகம் என்றவுடன் பார்க்கத் தூண்டிய ஆர்வம், அதை நியாய படுத்தக்கூடிய அவர்களின் முயற்சி, நாடகம் முடிந்தவுடன் எழுந்து நின்று கை தட்டிய பார்வையாளர்கள் - இவையெல்லாம் தமிழ் நாட்டின் நாடகத் துறைக்கும் , தமிழர்களின் ரசிப்புத் தன்மைக்கும் கிடைத்த பெரிய சான்றிதழ்.<br />
<br />
நல்ல முயற்சிக்கு மோகன்-மாது குழுவினருக்குப் பாராட்டுகள்.<br />
<br />
நாடகத்துறை மேலும் நலிந்து, மறந்து போகாமலிருக்க கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் போன்றவர்களும் இப்படி நாடகங்களுக்கு வாய்ப்பளித்து, நாமும் அதை போய்ப் பார்த்துக் கை தட்டினாலே போதும் , இன்னும் சிறிது காலம் ஓடும் !</div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-78294524643509596842017-05-29T06:49:00.000-07:002017-05-29T08:52:17.844-07:00மீண்டும் காசி யாத்திரை . . . 2017 !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பாரதத்தின் தென் மூலையில் இருப்பவர்களுக்கு வட நாட்டு பிரயாணம் என்றுமே ஒரு சவால்தான் - மொழி, பயணம் , உணவு, பழக்க வழக்கங்கள் எல்லாமே சிறிது முயற்சி எடுத்து தெரியப் படுத்திக் கொண்டால் சமாளிக்கக் கூடியது தான். ஆகவே முக்கியம் அவரவர் முன்னோர்கள் காட்டிய பாதை மற்றும் பழக்க வழக்கங்களூடே ஒரு நல்ல முன்னேற்பாடு , கூடியவரை நுண்ணியமான பயண ஏற்பாடு, அங்கு ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பு இவைகளெல்லாம் ஒரு நல்ல வட நாட்டு யாத்திரைக்கு இன்றிமையாதது. ஏற்கனவே நான் 1996ஆம் ஆண்டு ஒரு முறை பயணப் பட்டிருந்தாலும் காலப் போக்கில் அன்றைய அனுபவங்கள் இன்றைய சூழ்நிலைக்கு எவ்வளவு உதவும் என்ற சந்தேகத்தால் எல்லாவற்றையுமே ஒரு முதல் முயற்சியாக செய்ததும் உதவியாகத் தான் இருந்தது.<br />
<br />
என் வீட்டு வழக்கப்படி இந்த யாத்திரையை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு முதலில் ராமேஸ்வரம் சென்றதிலிருந்து உள்ள நினைவலைகளை திரும்பிப் பார்க்கிறேன். நானே எதிர்பாராத அளவிற்கு எந்த முயற்சிக்கும் கட்டுப்படாத விரிந்துள்ள நினைவலைகளின் நீளம் படிப்பவர்களுக்கு உறுத்தினால் வருந்துகிறேன்.<br />
<b><u><br /></u></b>
<b><u>பாகம் ஒன்று - ராமேஸ்வரம் </u></b><br />
<br />
முதல் கட்டமாக தனுஷ்கோடி சமுத்திரக்கரையில் சங்கல்பம், பின் ஸ்நானம்.<br />
<br />
அறுபதுகளில் , நான் பள்ளி செல்லும் சிறுவனாக இருந்த காலத்தில் ஒரு மாதம் தங்கி இருந்த தனுஷ்கோடி என்னும் இந்த அழகிய ஊர் பின் வந்த ஓர் கோரப் புயலில் மூழ்கியதால் இது இத்தனை வருடங்களாக யாருமே போக முடியாமல் இருந்ததாம். சமீப காலமாகத்தான் இந்த இடத்தை சீர் செய்து போகும் பாதை அமைத்து வருகிறார்கள் , என்றார்கள்.<br />
<br />
ராமேஸ்வரத்திலிருந்து ஒரு ஜீப்பில் சுமார் இருபது கிலோமீட்டர் பயணப் பட வேண்டும். அருமையான தார் போட்ட சாலை எந்த தலைவரின் வருகைக்கோ பல மாதங்களாகக் காத்திருப்பதால் முதுகை முறிக்கும் ஒரு கடைசி ஒன்பது கிலோமீட்டர் சென்ற பிறகு சற்றே வெறிச்சோடிய சமுத்திரக் கரையில் முன்னோர்களைக் கும்பிட்டழைத்து வேண்டிய பிறகு கடலில் நாற்பத்தி ஐந்து முழுக்குப் போட வேண்டும். கடலில் அலைகளை எதிர்த்து உள்ளே போவது கடினமென்பதால், ஒரு குவளை கொண்டு செல்வது உசிதம் (அனுபவம் தந்த பிறருக்கு உதவக் கூடிய பாடம்). பிறகு கரையில் எடுக்க வேண்டியது இரண்டு கையளவு மண். இதைத் தான் நாம் பிரயாகை எனப்படும் அலஹாபாத் அருகிலுள்ள இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.<br />
<br />
திரும்பும் பொழுது வழியில் உள்ள விபீஷணருக்கு இராமர் பட்டாபிஷேகம் செய்து வைத்த ஒரு கோவில் மனத்தைக் கவர்ந்தது.<br />
<br />
பின் மீண்டும் ராமேஸ்வரம் திரும்பி , அங்கு உள்ள இருபத்து மூன்று புனித தீர்த்தங்களில் பக்கெட்டால் நீராட்டி வைக்கப் பட்டு வந்தால் அங்கு தீர்த்த ஸ்ரார்த்தம் செய்த பிறகு நாம் கடற்கரையிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணை மூன்று பகுதிகளாகப் பிரித்தார் - ஒன்று சேது மாதவர், மற்றொன்று பிந்து மாதவர், மூன்றாவது வேணி மாதவர் என்றார்கள். அதில் மற்ற இரண்டு பகுதிகளையும் அங்கேயே விட்டு விட்டு , வேணி மாதவரை மட்டும் பத்திரமாக எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள் (இனிமேல் இது வேணி மாதவர் , மண் என்று சொல்லக் கூடாது - சாஸ்திரிகள் ).<br />
<br />
<b><u>பாகம் இரண்டு - காசி</u></b><br />
<br />
பல வருடங்களுக்கு முன் , வாகனங்கள் இல்லாத காலங்களில், காசி யாத்திரை நடை வழியாகத் தான் செல்ல வேண்டிய கால கட்டத்தில் அநேகமாக இதை மேற்கொள்ளும் பல யாத்திரிகள் திரும்ப மாட்டார்கள் என்றே நினைத்து, கிளம்பு முன்னரே ஒரு வாழை மரத்தை வெட்டி எல்லா காரியங்களையும் தனக்காகவே செய்து முடித்துக் கொள்வார்கள் என்று என் தாய் சொல்லக் கேட்ட நாங்கள் இப்படி ஒரு கடினமான பயணத்தை இண்டிகோ உதவியுடன் ஏற்படுத்திக் கொண்டோம் .<br />
<br />
வெயில் உறைக்கத் தொடங்காத ஒரு மார்ச் மாதக் காலையில் கிளம்பி அழகிய ஐதராபாத் விமான நிலையத்தில் சிப்ஸ் சகிதம் சாம்பார் சாதம் சாப்பிட்டு, கண்ணயர்ந்து மிதமான குளிர்விக்கப்பட்ட விமானத்தில் ஐபேடில் கணேஷ்- வசந்த் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, வசந்த்தின் வில்லங்கமான ஜோக்கை ரசித்துக் கொண்டிருக்கும்போதே இறக்கி விட்டார்கள் கொஞ்சம் மங்கலான வாரணாசி விமான நிலையத்தில். நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்த விமான நிலையம் சரியான விளக்குகள் கூட இல்லாமல் மெல்லிய ஏமாற்றத்தை அளித்து ஆனால் அன்புடன் வரவேற்றது. வாரணாசியின் மைய பகுதிக்கு இருபத்தி இரண்டு கி.மீ போவதற்குள் இந்த வட்டார நடைமுறையில் மண் குவளையில் ஒரு அருமையான தேநீர் (aur Ek cup chaai please! ) - நன்றி கார் ஓட்டுநர் சோனு. இப்பயணத்தின் முதல் சவாலான ஹிந்தி மொழியை சமாளிக்க சென்னையிலிருந்தே ஆள் கொண்டு வந்திருந்ததால் சற்றே நிம்மதியாக சுவாசித்தேன்.<br />
<br />
<u>இரண்டாம் நாள்</u> அதிகாலை சுறுசுறுப்பாக எழுந்து தொடர்ந்த பயணம் முதலில் சென்றது '<b>சீதாமரி</b>' - இங்கு தான் சீதை பூமி பிளந்து உள்ளே சென்றதாக கதை. <br />
<br />
அதனைத் தொடர்ந்து மொத்தமாக இரண்டரை மணி நேரம் ஒரு அருமையான ரோட்டில் பயணித்தால் சென்று அடைந்தது <b>அலஹாபாத்</b>. அநேகமாக பலரும் நாடும் சிவ மடத்திற்கு இது என் இரண்டாம் விஜயம் - 1996 க்குப் பிறகு . மிகப் பழைய இந்த மடத்தில் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னமேயே அன்றைய இந்திய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் இங்கு வந்து சில சடங்குகள் செய்ததற்கான புகைப் படங்களை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே எங்களை அழைத்து இந்த க்ஷேத்ரத்துக்கு உண்டான விசேஷங்களுடன் சமாச்சாரங்களை ஆரம்பித்தவர் - அந்த கால எம். பீ. ஏ என்றார். ஆனால் அவர் சொன்ன மந்திரங்களின் உச்சரிப்பு , விளக்கங்கள் அவர் இன்றைய நடவடிக்கைகளிலும் முதுகலை பட்டம் வாங்கியிருப்பாரோ என்று எண்ண வைத்தது. <br />
<br />
பின் நாங்கள் ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த வேணி மாதவருடன் படகில் அதிக தண்ணீர் இல்லாத கங்கையில் ஒரு இருபது நிமிட பயணம். கங்கையும் யமுனையும் கலக்கும் <b>திரிவேணி சங்கமம் </b>என்றழைக்கப்படும் இடத்தில் சரஸ்வதி நதியும் பூமியினூடே வந்து கலந்தாலும் முழங்காலுக்கு மேல் ஆழம் கிடையாது. தண்ணீர் ஆழத்தின் பயத்தை விட குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் குமட்ட வைத்தது. கங்கையை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டனவா என்று வியக்க வைத்தது- அவ்வளவு குப்பை. இவைகளெல்லாம் மீறி இந்த இடத்தின் புனிதத்தைக் கருத்தில் கொண்டு சில முழுக்குகள் போட்டு வேணி மாதவரை திரிவேணி சங்கமத்தில் கரைத்து பின் அங்கிருந்தே கொஞ்சம் கங்கை ஜலத்தையும் எடுத்ததில், இவை எல்லாவற்றையும் மீறி , ஒரு மன நிறைவும் கிடைத்தது. திரும்பி வரும்பொழுது படகோட்டி இவர்களின் உடன் பிறவா சகோதரனான ஜர்தா பாக்கையும் அதே ஆற்றில் உமிழ்ந்து ஒரு அதிக பத்து ரூபாய்க்காக போராடியது ஆயாசத்தை கூட்டியது. மீண்டும் சிவ மடம் வந்து ஒரு தீர்த்த ஸ்ரார்த்தத்திற்குப் பின் அன்னத்தைக் கண்ணில் கண்ட பொழுது மணி இரண்டைத் தாண்டி இருந்தது.<br />
<br />
தொண்டனுக்கே உரித்தான உண்ட மயக்கத்தைத் துறந்து உடனே கிளம்பி முதலில் பார்த்தது அலகாபாத்தில் உள்ள <b> படே ஹனுமான்</b> என்று அழைக்கப்படும் பிரம்மாண்டமான சயனத்திக் கொண்டிருக்கும் செந்தூர் பூசிய ஆஞ்சநேயர் . அதற்குப் பின் சென்றது - <b>அட்சய வட</b> மரம் . இந்த மரம் காசி யாத்திரைக்குறித்தான பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் வேர் அலகாபாத்தில் தொடங்கி நடுப் பகுதி வாரணாசியில் தோன்றி உச்சி கயாவில் உள்ளது. மூடி வைத்திருந்த அட்சய வட மரத்தின் வேரை பத்து ருபாய் செலவில் பார்த்து விட்டு பின் <b>சங்கர மட கோவில்</b>, <b>வேணி மாதவர் கோவில்</b> ஆகிய உள்ளூர் முக்கியத் தலங்களுக்குப் பிறகு வண்டி விரைந்தது அயோத்தி நோக்கி.<br />
<br />
சுமாரான சாலை , சாலை விதி என்றால் என்ன என்றே தெரியாத ஓட்டுனர்கள் இவைகளூடே அவரவர் விதியை நொந்து கொண்டு செல்லும் வாகனங்கள் - இவற்றை ரசித்தவாறே <b>அயோத்தி</b>யை அடைந்த பொழுது இரவு மணி ஒன்பது. கொஞ்சம் தேடினாலும் கிடைத்த ஒரு நல்ல ஓட்டலின் பெயர் 'ஹனுமந்தா பேலஸ் ' !! <br />
<br />
<u>மூன்றாம் நாள்</u> காலை ஸ்ரீ இராமர் பயணம் செய்த <b>சரயு நதி</b> - கங்கையை விட கொஞ்சம் அதிக நீரோட்டத்துடன் குறைந்த குப்பையுடனும் பார்த்தது ஒரு பெரிய அதிசயம். போன ஒன்றிரண்டு ஹோட்டல்களில் காலை உணவு தயாராகாததால் அடுத்துச் சென்றது '<b>ஸ்ரீ ராம ஜென்ம பூமி பட்டறை</b> '. இங்கு எப்பொழுது கோவில் கட்டினாலும் தயாராகத் தேவையான கல் தூண்கள், செங்கல்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். செங்கல்களில் பல மொழிகளிலும் ஸ்ரீ ராம் என்று எழுதப் பட்டிருக்கிறது. சில கற்களில் எழுதப் பட்டிருந்த அமெரிக்கா , இலங்கை , லண்டன் போன்றவை கண்களை விரிய வைத்தது.<br />
<br />
பின் சென்ற 'சரயு ' என்ற ஹோட்டலில் சாப்பிட்ட காலை உணவு (??!!) சில பூரிகளும், சூடான சில பல ஜிலேபிகளும் - இப்படிப்பட்ட ஒரு காலை உணவு வாழ்க்கையில் நான் சாப்பிட்டதாக நினைவே இல்லை - அது ஒரு மறக்க முடியாத நினைவுகளை அன்றிரவே ஏற்படுத்தும் என்று கொஞ்சம் கூட அப்பொழுது நான் உணர வாய்ப்பில்லை ! <br />
<br />
அதன் பின் சென்ற '<b>ராமரின் தர்பார்</b>' என்ற இடத்தில் இராமர் அழகாக அலங்கரிக்கப் பட்டு இருந்தார். அருகிலேயே உள்ள ஒரு சிறிய அறையில் ஒரு சுவாமிஜி அமர்ந்திருக்க அருகிலிருந்தவர் அவர் இராமர் கோவில் கட்டும் வரை சாப்பிடாமல் விரதம் இருந்து வருகிறார் என்று சொன்னதை வியக்கும் முன்னமேயே , ஒரு ஐநூறு ரூபாய் கோவிலுக்கு நன்கொடையாகக் கொடுத்தால் ஆசி வழங்குவார் என்ற அறிய வாய்ப்பிலிருந்து நழுவி வெளியே வந்தால் தெரிந்த சீதை சமையல் செய்த உக்கிராண அறையில் இருந்த ராட்சச வாணலி வியக்க வைத்தது.<br />
<br />
அடுத்து இராம ஜென்ம பூமி என்றழைக்கப்படும் இடத்துக்குச் செல்லும் பொழுதே ஏகப்பட்ட பாதுகாப்பு கெடுபிடிகள் துவங்கியது. எதையுமே எடுத்துக் கொண்டு போகக் கூடாது என்று தொடர்ந்து வந்த பயமுறுத்தலால் அநேகமாக எல்லாவற்றையும் அறையிலேயே விட்டு விட்டு (மூக்குக் கண்ணாடிக் கூட்டுக்குக் கூட அனுமதி கிடையாது ) கையில் கொண்டு போன பணத்தை மட்டும் வைத்திருந்தேன். எல்லா காவலர்களும் கட்டுக் கட்டாக உள்ள கரன்சியை வெறித்துப் பார்த்தாலும் ஒரே ஒருவர் மட்டும் சொன்னது - ' திருடர்களிடம் காப்பாற்றி விட்டீர்கள், ஆனால் ஜாக்கிரதை , இங்குள்ள குரங்குகள் அப்படியே பிடிங்கிச் சென்று மரத்தின் மேலிருந்து பண அபிஷேகம் செய்து விடும் ' என்று பயமுறுத்தியதால் புது மண தம்பதியைப் போல் பையை இறுக்கி அணைத்துச் சென்றதை இன்று நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஆனால் நாங்கள் அந்த இடத்தை விட்டுக் கிளம்புமுன் வானர படை இரண்டு முறை எங்களை ரெய்டு விட்டு இப்படிப்பட்ட முன்னேற்பாட்டால் வெறுங்கையுடன் திரும்பின - வாழ்க அந்தக் காவலர்.<br />
<br />
இவ்வளவு கெடுபிடிகளுக்கு இடையே சீராக இல்லாத தரையில் தட்டு தடுமாறி சென்றபோது ஒரு இடத்தில் நிறுத்தப் பட்டு 'அதோ அது தான் <b>இராமர் பிறந்த இடம்</b> ' என்றார்கள். ஒரு பதினைந்து அடி தூரத்திலிருந்து பார்த்ததில் மங்கலாக ஒரு வெள்ளை சிலையும் அருகில் விளக்கும் எரிந்து கொண்டிருப்பது தான் தெரிந்தது - ஏழுமலையானைக் கூட இன்னும் அருகில், மேலும் தெளிவாக பார்த்த ஞாபகம். இந்த முக்கிய ஸ்தலத்துக்கு அருகில் இருந்த பாதுகாப்பு காவலர்கள் பம்பாய் படத்தில் வரும் முரடர்கள் போல சரத்குமாரையும் அர்னால்டு ஸ்வாசினேகரையும் நினைவு படுத்திய உருவங்கள் கொஞ்சம் துரித நடை போட வைத்தது. இவ்வளவு தடைகளையும் மீறி எந்த இடத்தை 1996ல் பார்க்க முடியாமல் போனதோ அதைக் கண்டதில் ஆனந்தமடைந்து திரும்ப வாரணாசி நோக்கிப் பயணப் பட்டோம்.<br />
<br />
அருமையான ராஸ்தாவில் நல்ல பயணத்தில் ஒரு சின்ன உறக்கத்துக்கு பின் தொடங்கியது மதிய உணவு வேட்டை. கூகிளில் ஒரு நல்ல பெயர் கொண்ட ஹோட்டலிலும் வெறும் மேசை, நாற்காலி மட்டுமே இருந்தது. 'சாப்பாடு இருக்கா' என்று கேட்க உங்கள் தலையைக் கண்டவுடன் தான் கல்லை போடப் போகிறோம் என்பது போல் பார்த்த ஹோட்டல்களிலிருந்து ஓட்டம் பிடித்து, மூன்று மணி அருகில் பிரதாப்கர் என்ற இடத்தில் கிடைத்த மசால் தோசை, தயிரை உயிர் வாழ்வதற்காகவே விழுங்கினோம்.<br />
<br />
மாலையில் ஒரு பத்து கிலோ மீட்டர் மோசமான சாலையைக் கடந்து வந்தால் நம்ம ஊர் அங்காளம்மன் கோயிலை நினைவுப் படுத்தும் <b>விந்தியாசல் </b>என்ற அழகிய கிராமத்தில் வாராஹி அம்மனின் அருமையான சக்தி பீட தரிசனத் திளைப்பிலேயே வந்து சேர்ந்து இரவுக்குத் தஞ்சமடைந்தது அதே வாரணாசி அறையில் .<br />
<br />
<div>
<u>நான்காம் நாளா</u>ன மறுநாள்தான் உண்மையிலேயே வாரணாசி நியமங்கள் துவங்கின. அதிகாலை எழுந்து , சாஸ்திரிகள் வீட்டு சூடான காப்பிக்குப் பிறகு குளித்து அவர் வீட்டில் சங்கல்பம் செய்து பின் வேத கோஷங்களுடன் பிரார்த்தித்து அனைத்து வேத விற்பன்னர்களுக்கும் வணங்கி மரியாதை செலுத்தி அதன்பின் அருகிலுள்ள இன்னும் குளிர்ந்து கொண்டிருக்கும் கங்கை நதியில் தயங்கியபடியே மெல்ல காலை நுழைத்து , துவக்க நடுக்கத்துக்குப்பின் முங்கி முங்கி எழுந்ததில் கிடைத்த சுகம் இதற்க்காகப் பட்ட அத்தனை சிரமங்களையும் மறக்க வைத்தது. அந்த காலையில் அதிக நீரோட்டமில்லாவிட்டாலும் இருந்த தெளிந்த கங்கையில் குளித்த சுகம் எழுத்துக்குள் அடங்கா - அனுபவித்தே அறிய வேண்டிய உணர்வு .<br />
<br />
கங்கா ஸ்நானத்திற்குப் பின் வந்த ஒரு அந்தணரின் மந்திர உச்சரிப்புக்கள் அரைகுறையாக வந்தவர்களையும் இழுத்து நிறுத்தும் குரல், ஞான வளம். ஒரு முழு திருப்தியுடன் நடந்த நாந்தி ஸ்ரார்தத்திற்குப் பின் மன நிறைவோடு திரும்பினால் கம்பியூட்டர் இலை என்று சொல்லப் பட்ட பேப்பர் தட்டில் சாப்பாடு போடப் பட்டிருந்தது , கொஞ்சம் மனதை உறுத்தியது. பின்னால் தெரிந்து கொண்டது , இப்படி சில பல விஷயங்கள் இங்கு கொஞ்சம் முன்னப் பின்ன இருந்தாலும் இந்த க்ஷேத்ரத்தின் மகிமைக்கும் இங்கு நாம் முன்னோர்களுக்கு செய்யும் கடமைகளுக்கும் அது பெரும் பொருட்டல்ல என்பதே.<br />
<br /></div>
இங்கு மற்றொன்றையும் யாத்திரிகள் மனதில் கொள்ள வேண்டும் - எப்படி வங்கியில் வேலை பார்ப்பவர்களுக்கு குவித்து வைத்திருக்கும் பண மூட்டைகளை பார்த்து எந்த புதிய உணர்வும் வராதோ அதே போல் தான் இங்குள்ள சில அந்தணர்களும். அங்கு நம்மைப் போல் செல்பவர்கள் பல இன்னல்களைக் கடந்து அங்கு போனவுடன் ஜென்ம சாபல்யம் அடைந்தது போல் உணர்ந்து எல்லாவற்றையுமே முதல் ரகமாகச் செய்ய விரும்புகிறோம். ஆனால் நாம் மனதில் கொள்ள வேண்டியது, அந்த அந்தணர்களுக்கு இது சாதாரண தினப்படி வேலையே. நாமெல்லாம் அவர்களுக்கு கவுன்டருக்கு அந்தப்புரம் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் தாம் !!<br />
<div>
<br /></div>
அன்று மாலை வாரணாசியிலிருந்த சில முக்கிய கோவில்களுக்கு விஜயம்.<br />
<br />
முதலில் இந்த ஊரில் பிரசித்தி பெற்ற '<b>கால பைரவர் </b>கோவில்'. சுமாரான கூட்டம் இருந்தாலும் நல்ல தரிசனம் செய்ய முடிந்தது. ஆனால் கொஞ்சம் அசந்து இருந்தாலும் முகத்தில் செந்தூர பொட்டு வைத்து காசு பிடுங்க ஒரு கும்பலே அலைந்து கொண்டிருக்கிறது - கொஞ்சம் உஷார் தேவை. கால பைரவரைக் கும்பிட்டு இங்கு தான் விசேஷமான அந்த 'காசிக் கயிறு' வாங்க வேண்டும். அருகிலேயே உள்ள '<b>தண்டபாணி பைரவரை</b>யும் ' ஒரு நடை பார்ப்பது நல்லது.<br />
<br />
பின் '<b>தொண்டி கணபதி</b>யை' வணங்கிய பின் தான் <b>காசி விஸ்வநாதரை</b> தரிசிக்கலாம் . மீண்டும் ஏக கெடுபிடி - ஆளாளுக்கு உடலை வருடி பார்த்து விட்டுத்தான் அனுப்புவார்கள். காசும் ஆள் பலமும் இருந்தால் எவ்வளவு பெரிய வரிசையையும் தாண்டி போக முடியும். உள்ளே சென்று அந்த அறிய காட்சியான விஸ்வநாதரைக் காண மனம் நெகிழ்ந்தது -1996 ல் செய்ததது போல் சிவனை கட்டித் தழுவி ஆலிங்கனம் செய்து, பால் அபிஷேகமெல்லாம் கனவில் கூட செய்ய முடியாது. சில அடி தள்ளியே நிறுத்தி 'ஜாவ் ஜாவி' விடுகிறார்கள். இருந்தாலும் திருமலையை விட ஏன் இராம ஜென்ம பூமியை விட அதிக நேரம் திருப்தியாக பார்க்க முடிகிறது.<br />
<br />
பின் அருகிலேயே உள்ள <b>அன்ன பூரணி </b>, <b>காசி விசாலாக்ஷி</b> கோவில்களின் அருமை எவ்வளவு சிரமத்தையும் உதறும் மன நிறைவைக் கொடுக்கிறது.<br />
<br />
இவற்றை முடித்து ஒரு ஆறு மணி சுமாருக்கு கங்கைக் கரைக்கு வந்து விட்டால் சௌகரியமாக ஒரு படகில் ஏறி உட்கார்ந்து இந்த இடத்துக்கே உள்ள அற்ப்புதமான '<b>கங்கா ஹாரத்தி</b>' யை காணலாம். 'தச அஸ்வமேத கட்டம் ' போன்ற சில முக்கிய கட்டங்களில் நடக்கும் இந்த நிகழ்ச்சி, ஆறரை மணியிலிருந்து மெதுவே சூடேறி, சரியாக ஏழு மணிக்கு ஐந்தாறு பேர்கள் சிவ ஸ்துதி மற்றும் சில மந்திரங்களை ஸ்பஷ்டமாக சொல்லிக் கொண்டு கங்கா மாதாவிற்கு தீப ஹாரத்தி எடுப்பது கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு கண் கொள்ளா காட்சி. இதை நூற்று கணக்கான படகுகளிருந்து எல்லா நாட்டவர்களும் புகைப் படமெடுக்கும் காட்சியை பல நூறு மின்னல்கள் தோன்றுவது போன்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும். ஹாரத்தி நடக்கும் சமயம் பக்தர்கள் கங்கையில் விடும் அகல் விளக்குகள் மெல்ல ஆடி அசைந்து போகும் காட்சியும் அருமை.<br />
<br />
<div>
<div>
<b> ஐந்தாம் நாளான</b> மறுநாள் இந்த யாத்திரையின் ஒரு முக்கிய நாள் என்று எனக்குத் தோன்றியது. அதிகாலையில் கங்கையில் மூழ்கி எழுந்து ஈரத்துடன் வாத்யார் சகிதம் படகில் சவாரி. படகிலேயே குமுட்டி அடுப்பில் ஹவிஸ் வைத்து அதை நம் வீட்டுப் பெண்மணி பிண்டம் தயாரிக்க படகு கங்கை நதியின் மிக முக்கிய கட்டங்களான அசி காட் (ஹரித்வார தீர்த்தம்), தச அஸ்வமேத் காட் (ருத்ர சரோவர் தீர்த்தம்), விஷ்ணு பாத காட் (வருண தீர்த்தம்), பஞ்ச கங்கா காட் (கங்கா, யமுனா, சரஸ்ஸ்வதி தீர்த்தங்கள்) மற்றும் மணி கர்னிகா காட் (மணி கர்னிகா தீர்த்தம்) போன்றவைகளுக்கு ஒவ்வொன்றாக நகர்கிறது.</div>
<div>
<br /></div>
<div>
ஒவ்வொரு தீர்த்த கட்டத்திலும் படகை விட்டிறங்கி தம்பதியராக கங்கையில் நீராடி பின் படகில் வந்து ஸ்ரார்த்தம் செய்து பிண்டங்களை அந்த கட்ட நீரில் கரைக்கும் இந்த விசேஷமான காரியங்கள் தான் <b>பஞ்ச கட்ட ஸ்ரார்த்தம் </b>என்றழைக்கப் படுகிறது . இந்த இரண்டு மணி நேர படகில் செல்லும் கட்டத்தில் கூட வரும் சாஸ்திரிகளின் தீவிரம் நம்மை வியக்க வைக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் படகு போகும் பொழுது அங்கு தான் பிண்டம் கரைக்க வேண்டும் என்று சொல்லி நம்மை அவசரப் படுத்தி அதற்கான காரணங்களையும் கேட்கும் பொழுது நம் முன்னோர்களுக்கு நாம் உண்மையிலேயே அறுசுவை விருந்து படைத்தது போன்ற வரும் திருப்தி, சொல்லி மாளாது. </div>
</div>
<div>
<br /></div>
<div>
ஈர வஸ்த்திரத்துடன் இரண்டு மணி நேர படகு பயணம் , குளிரில் சுமார் ஆறு முறை கங்கா ஸ்நானம் நடுவில் மந்திரங்கள் , இன்று நினைத்தால் ஆயாசத்தைக் கொடுத்தாலும், இந்த முக்கிய கடமையைச் செய்யும் பொழுது எந்த சிரமும் தெரியவில்லை. சிரத்தைக்குக் கடைசியில் கிடைக்கும் திருப்தி, ஒரு நல்ல சன்மானம். உடல் கொஞ்சம் காய்ந்து இள வெய்யில் சுகம் தெரிய ஆரம்பித்தவுடன் மீண்டும் கங்கையில் குளிக்கச் சொல்லும் பொழுது டெல்லி கணேஷின் வசனம் (தெளிய விட்டு தெளிய விட்டு) தான் ஞாபகத்திற்கு வந்தது !! இதன் நடுவே வாரணாசியின் புகழ் பெற்ற '<b>பிந்து மாதவர் கோவில்</b>' - செல்வதற்குள் முழங்கால் கொஞ்சம் முனகதான் ஆரம்பிக்கும் - பாதை அவ்வளவு நெட்டு குத்து </div>
<div>
<br /></div>
<div>
வாரணாசியில் முக்கிய நிகழ்வுகளை முடித்த நிறைவுடன் பயணப்பட்டது கயாவிற்கு. காசியின் முறையில்லாத வாகன நெரிசல்களிலிருந்து மீண்டு வரவே மாலை நான்கை எட்ட சுற்றி வர ஒன்றுமே இல்லாத ஒரு பாலைவன சாலையில் வண்டி விரைந்தது. சிரமப்பட்டு கண்டு பிடித்த டீக்கடையில் கருப்பு டீ நன்றாக இருந்ததும் , சாலைகளின் தரம் வெகுவாக முன்னேறி இருந்ததும் இந்தப் பிரதேசத்தின் வளர்ச்சியைக் காட்டியது. சிறிது தேடி அலைந்து, இடைத் தரகர்களை சமாளித்து <b>கயா</b>வில் ஒரு நல்ல தங்கும் அறையைக் கண்டு பிடித்து கையில் கொண்டு வந்த இட்லி பொட்டலத்தைப் பிரித்த பொழுது இரவு மணி ஒன்பதைத் தாண்டி இருந்தது. ஆனால் 1996ன் கயா என்று சொன்னால் தோன்றிய பயம் அறவே இல்லை - ஊர் நிறைய முன்னேறி , மாறி இருந்தது - ஒரு யாத்ரியின் பார்வையில்.<br />
<br />
<b><u>ஆறாம் நாளான</u></b> மறுநாள் , முன் அனுபவத்தை வைத்து சிறிது திகிலுடன் தான் தொடங்கியது. ஒரு காசி யாத்திரையின் முக்கிய தினமான இன்று தான் நாம் மனதார நம் முன்னோர்களை வணங்கி, பணிவிடை செய்து மானசீகமாக தரிசித்து திருப்தி அடைந்த அவர்களின் பரிபூரண ஆசி பெரும் நாள். சிறிது ஓட்ஸ் கஞ்சிக்குப் பிறகு கர்நாடக பவனில் ஒன்பது மணிக்குத் தொடங்கிய சம்பிரதாயமான சடங்கில் ஒரு எல் வடிவ பெரிய ஹாலில் இருந்தவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட ஜோடிகள். இதில் சைவ, வைணவ மற்றும் பல வித்தியாசமான குழுக்களை சேர்ந்தவர்கள் , கணவருக்கு வயதின் காரணமாக முடியாததால் மனைவி ஏற்று நடத்தும் அதிசயம், பல வேதங்களை சார்ந்தவர்கள் என்று ஏகப்பட்ட குழுக்கள். அமைதியாக வந்த கர்நாடகத்தைச் சேர்ந்த சாஸ்திரிகள் எல்லோரிடமும் விஷயங்களைக் கேட்டு அமோகமாக கிரஹித்துக் கொண்டு ஒரு கை தேர்ந்த இசைக் குழு நடத்துனரைப் போல மஹா சங்கல்பத்தை நடத்தினார். ஆடவர்கள் சடங்குகளை செய்ய பெண்கள் தமக்கு அளிக்கப்பட வேலையான இரண்டு கூறுகளாக 64 பிண்டங்களை தயார் செய்தனர் . அப்பொழுது அவர் நம் பெற்றோர்கள் நமக்காக எப்படியெல்லாம் பாடு பட்டிருப்பார்கள், அவர்களுக்கு முக்கிய உணவான எள்ளும் நீரையும் நாம் எப்படி சிரத்தையுடன் கொடுக்க வேண்டும் என்று விளக்கி முடித்தவுடன் கலங்காத கண்களே இல்லை. ஒரு சமயத்தில் சில பிண்டங்களை கையில் சுமக்க சிலர் சிரமப் பட்ட பொழுது அவர் சொன்ன வார்த்தைகள் - 'பதினைந்து நிமிடங்கள் சில சோற்று உருண்டையை சுமப்பதற்குள் இப்படி நெளிகிறோம். நம்மை வயிற்றில் சுமந்து, மின்சாரம் இல்லாத அந்த காலங்களில் விறகு அடுப்பில் வெந்து நம்மை காப்பாற்றிய தாயை நினைத்துக் கொள்ளுங்கள் ' என்றவுடன் பலரும் கண்களைத் துடைக்க கைக்குட்டைகளைத் தேடினர். வந்ததில் அநேகர் மூத்த குடிமகன்களாக இருந்தும் சில சிறியவர்கள் கூட தரையில் உட்கார அவஸ்த்தைப் பட்டது நம் அன்றாட வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் சுகங்களை நினைத்து சிந்திக்க வைத்தது.<br />
<br />
அது முடிந்தவுடன் அருகிலுள்ள <b>பல்குனி நதிக்கு</b> அனைவரையும் அழைத்துச் சென்று அதில் பிண்டங்களை கரைப்பது நம் முன்னோர்களுக்கு கொடுப்பதாக ஐதீகம் என்று சொன்னார். மேலும், ஒரு சாபத்தினால் பல்குனி நதி எப்பொழுதுமே கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்கு கீழேதான் ஓடும் என்றும் அதற்க்கு பதில் அங்குள்ள பசுக்களுக்கு அந்தப் பிண்டங்களை கொடுப்பது பெற்றோர்களே சாப்பிடுவது போல் என்றவுடன் அனைவரும் அங்கு திரிந்து கொண்டிருந்த சில பசுக்களை நோக்கி ஓட, எனக்கு ஒரே நேரத்தில் இவ்வளவு சாப்பிடும் அந்தப் பசுக்களின் ஜீரண சக்தியை சிந்திக்க வைத்தது.<br />
<br />
அதன்பின் மற்றோரு பங்கான பிண்டங்களை இந்தத் தலத்தின் பெருமை வாய்ந்த '<b>விஷ்ணு பாதத்தில்</b>' சேர்ப்பது இன்றைய தினத்தின் மற்றுமொரு முக்கிய பணியாகும். இந்த இடத்தின் சிறப்பை விவரித்த கதை அதிசயமானது. அந்நாளில் கயேஸ்வரன் என்ற கொஞ்சம் சாதுவான அசுரனைப் பற்றி மக்கள் முறையிட அவனை அழிக்கும் வழியையும் கடவுள் கற்றுக் கொடுத்திருக்கிறார். ஆனால் அவனைக் கொன்று புதைத்த பின்னும் அவன் பூமிக்கடியிலுருந்து மீண்டும் மீண்டும் எழுந்ததால் மறுபடியும் கடவுளிடம் முறையிட அவர் வந்து தன் ஓற்றைக் காலால் அமுக்கி மீண்டும் எழாமல் பார்த்துக் கொண்டாராம். அதனால் தான் அங்கு விஷ்ணுவின் ஒரே ஒரு பாதம் மட்டும் இருக்கும். அந்த அசுரனோ விஷ்ணுவிடம் 'நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. பசிக்கு உணவு தேடத்தான் எழுந்து வருகிறேன்' என்றவுடன் மஹா விஷ்ணு இனி நீ உணவுக்காக எழுந்து வர வேண்டியதில்லை . எல்லா நாட்களிலும் மக்கள் இங்கு வந்து அவர்களின் மூதாதையருக்குப் படைக்கும் பிண்டங்கள் மூலம் உனக்கு உணவு கொடுப்பர். என்றைக்கு உனக்கு ஒரு பிண்டம் கூட வரவில்லையோ அன்று மீண்டும் எழலாம் என்று சொன்னதாகவும் இதற்க்கு பயந்து தான் இங்கு வரும் மக்கள் எல்லோரும் கண்டிப்பாக இந்த இடத்துக்கு வந்து சில பிண்டங்களை கொடுப்பதாகவும் சொல்கிறார்கள். விளையாட்டாகவோ இல்லை நிஜமாகவோ சாஸ்திரிகள் சொன்னது 'ஏதேனும் ஒரு நாள் எந்த யாத்திரியும் ஸ்ரார்த்த பிண்டம் கொடுக்கவில்லையோ இந்த அசுரனின் எழுச்சிக்கு பயந்து இங்குள்ள அந்தணர்கள் பிண்ட பிரதானம் செய்து விடுவார்கள் என்றது சிரிப்பையும் , சிந்தனையும் தூண்டியது. </div>
<div>
<br />
இந்த இடத்தில், கயாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய மற்றோரு முக்கிய விஷயம் - இங்கு வந்தால் கண்டிப்பாக நம் முன்னோர்களுக்கு தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். பெற்றோர்கள் உயிருடன் இருப்பவர்கள் இங்கு வருவது சிலாக்கியமில்லை .<br />
<br />
மேலும் கயா என்பது ஒரு சுற்றுலாத் தலமல்ல- முன்னோர்களை நினைவு கூர்ந்து பணிவிடை செய்யும் புண்ணியத் தலம் மட்டுமே . <br />
<br /></div>
அது முடிந்து மீண்டும் கர்நாடக பவன் திரும்பி ஒரு சம்பிரதாயமான ஹோம சிரார்த்தம் நடத்த இம்முறை எல்லோரும் கண் கலங்கியது அதிகமாகக் கிளம்பிய ஹோமப் புகையால். அதன் பின் அந்தணர்களை அமர வைத்து வஸ்த்திர மரியாதை செலுத்தி பின் உணவு படைத்தது ஒரு மனதை நிறைக்கும் உணர்வு. நம்ம ஊர் போல் இங்கு ஸ்ரார்த்த காரியங்களுக்கு வரும் அந்தணர்கள் எல்லோரும் வயதானவர்களோ , மணமானவர்களோ இல்லை. சில சிறுவர்கள் கூட கலந்து கொண்டனர். மறுபடியும் நம்ம பக்க வழக்கப் படி திருமணமானவர்கள் மட்டும் தான் பஞ்சகச்சம் கட்ட வேண்டும் என்பது இங்கு கிடையாது போல; சில மீசை அரும்பாத சிறுவர்களும் பஞ்ச கச்சத்தில் தென்பட்டனர் . ஆனால் இவர்கள் சாப்பிடும் அளவோ மிகக் குறைவு . சாப்பிட்ட பின் நாம் சம்பிரதாயாக அவர்களின் திருப்தியை விசாரிக்க அவர்கள் மகிழ்ச்சியுடன், மனம் நிரம்பி பரிபூரண ஆசி அளித்து மிகவும் திருப்தி என்பார்கள். இந்த 'அந்தணர் திருப்தி' கயாவின் ஒரு முக்கிய சிறப்பாகும். அதன் பின் அருகிலுள்ள <b>அக்ஷய வடம் </b>என்று சொல்லப் படும் இடத்திற்கு கூட்டிச் சென்று அதன் சிறப்பை வெகு தெளிவாக விவரித்தார் - எப்படி இராமர் தன் தந்தைக்கு தர்ப்பண காரியங்களை செய்யும் பொழுது இந்த அக்ஷய வட மரம் சாட்சியாக இருந்ததோ அதே போல் பல மாகாணங்களிலிருந்து இவ்வளவு தூரம் வந்து மிகுந்த சிரத்தையுடன் நாம் நம் முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணத்திற்கு சாட்சியாக இருக்க நாம் அழைக்க , அங்குள்ள அந்தணர்கள் அதை ஆமோதிக்க அந்த மரத்தின் வேர்களுக்கு நாம் கொண்டு வந்த பிண்டங்களை படைக்க , நம் காசி யாத்திரை முழுமை அடைவதாக அறிவிக்கப் பட்டது. இங்கும் ஒரு முக்கிய விஷயம் அங்குள்ள அந்தணர்களுக்கு ஒரு சிறிய அளவிலான பணத்தை நாம் கொடுப்பதற்கு பெயர் 'திருப்தி தக்ஷணை'. இந்த சடங்குகளெல்லாம் முடிந்து மனது நிறைந்து, கண்ணும் தொண்டையும் வறண்டு சாப்பிட இலையில் கை வைக்கும் பொழுது மணி மாலை ஐந்தைத் தாண்டி இருந்தது.<br />
<br />
பசி மந்தித்து களைப்பு மேலிட்டாலும் பெயருக்கு வயிற்றை நிரப்ப கொஞ்சம் சாப்பிட்டு விட்டு அவசரமாகக் கிளம்பி வழியில் உள்ள '<b>மங்கள் கௌரி </b>' என்ற சக்தி பீடத்தை தரிசித்தோம் . மிகவும் குனிந்து நுழைந்து காற்றே புக முடியாத ஒரு சின்ன இடத்தில் அம்பிகையின் அருகில் உள்ள அந்த விளக்கு பக்தி உணர்வைத் தூண்டியது.<br />
<br />
<div>
1996ல் முயற்சித்து பார்க்க முடியாத '<b>புத்த கயா</b>வை' இம்முறை எப்படியும் காண வேண்டும் என்ற உறுதியில் முதலில் பார்த்தது மிக அமைதியான , சுத்தமான முறையில் பராமரிக்கப் படும் <b>புத்தர் கோவிலை</b>. பின் காணச் சென்ற '<b>போதி மரம்</b> ' வெகு தொலைவில் இருந்ததாலும் இன்னும் பயணப் பட வேண்டிய தொலைவையும் கருத்தில் கொண்டு 'நமக்கு ஞானம் பிறக்கும் வேளை இன்னும் வரவில்லை ' என்று அங்கலாய்த்துக் கொண்டே பாதியிலேயே திரும்பி விட்டோம். </div>
<br />
காற்றைக் கிழித்துக் கொண்டு வண்டி வாரணாசி நோக்கிப் பறந்த பொழுது தாமத உணவினாலும், நாள் முழுவதும் உடலும் மனமும் அனுபவித்த ஆயாசத்தினாலும் அனைவரும் இருந்த அரை மயக்கத்தை கெடுத்தது - ஏன் என்றே தெரியாமல் எல்லா வண்டிகளும் ஒரு மணிக்கு மேல் நிறுத்தப் பட்டது தான் - ஒரு சிலர் சொன்னார்கள் எல்லோருமே அருகில் உள்ள டோலில் முதல் நாளே ஒரு நாள் கட்டணம் செலுத்தியதால் கொஞ்சம் தாமதித்து மீண்டும் கலெக்ஷன் செய்யத்தான் என்று - என்ன உண்மையோ மஹா விஷ்ணுவுக்குத் தான் தெரியும். உறங்கி, எழுந்து, தாலாட்டப்பட்டு மீண்டும் மயங்கி ஒரு வழியாக வாரணாசி வந்து விழுந்த போது மணி நான்கு (மறுநாள் காலை). !!<br />
<br />
<u>ஏழாம் நாளான</u> மறுநாள் எப்பொழுது விடிந்ததென்றே தெரியாது தூங்கி காபி கொண்டு வந்த பெரியவர் கூப்பிடுதலால் தான் எழ முடிந்தது - அவ்வளவு அலுப்பு , ஆனால் மன நிறைவான அலுப்பு . 1983 உலகக் கோப்பையில் கபில் தேவின் ஜிம்பாப்வேக்கு எதிரான 175 ரன் கரகாட்டத்திற்குப் பின் அவரின் புகைப் படம் போட்டு அருகில் 'Golden Exhaustion' என்ற தலைப்புதான் நினைவிற்கு வந்தது !!<br />
<br />
நாள் முழுவதும் தூங்கி தூங்கி எழுந்து அலுப்பு குறைந்தபின் மாலையில் அந்த நாளில் சென்ற முதல் இடம் '<b>தில பண்டேஸ்வரர்</b>' கோவில். வாரணாசியின் குறுகிய சந்துகளில் தான் எவ்வளவு புகழ் வாய்ந்த கோவில்கள்!! இங்குள்ள சிவனை பாண்டவர்கள் வந்து வழிபட்டதாக அந்தக் கோவிலுள்ள பலகை அறிவித்தது .<br />
<br />
வாரணாசியை விட்டு கிளம்பு முன் மற்றுமொரு முறை விஸ்வநாதரை காண ஆசைப் பட்டு அங்கு ஆனந்த தரிசனத்திற்குப் பிறகு அந்தக் கோவிலின் விசேஷமான '<b>சப்த ரிஷி பூஜை'</b>யை பார்க்க முற்பட்டோம். நல்ல கூட்டமிருந்தாலும் முண்டி அடித்து, ஒரு காவலாளியின் கருணையால் முதல் வரிசையில் அமர்ந்தாலும் எப்பொழுது விழுந்து விடுவோமோ என்ற அச்சச்சத்துடன் தான்பார்க்க முடிந்தது. கூட்டம் என்றால் சாதாரணக் கூட்டமில்லை. நம் இரு பக்கமும் உள்ள கைகளை எடுத்து கும்பிட முடியவில்லை ; அவ்வளவு நெரிசல். இருந்தும் அந்த அருமையான பக்தி உணர்வை பொங்க வைக்கும் அபிஷேகத்தை கண் குளிர கண்டது பெரிய பாக்கியமே. <br />
<br />
வாரணாசியில் நாங்கள் இருந்த கடைசி தினமான <u>எட்டாம் நாள்</u> சற்றே பரபரப்புடன் துவங்கியது. அதிகாலையில் முதலில் கங்கா மாதாவிற்கு எங்கள் யாத்திரையை இனிதே நடத்திக் கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பால், தயிர் , தாம்பூலம் முதலியவற்றுடன் <b>கங்கா பூஜை</b>.<br />
<br />
அதன் பின் எங்கள் சாஸ்திரிகள் வீட்டில் இரண்டு வயதான தம்பதிகளை அழைத்து மரியாதை செய்து நடத்திய <b>தம்பதி பூஜை</b> . இவைகளை முடித்து அவர்கள் நம்மையும் நம் குடும்பத்தாரையும் வாழ்த்தி வழி அனுப்பும் பொழுது நாம் இந்த யாத்திரைக்காக செய்த ஏற்பாடுகள், ஏகப்பட்ட போன் கால்கள் , விமான முன் பதிவுகள், யாத்திரைக்குத் தேவையான பொருட்களை இரண்டு நாட்களாக தி. நகரிலும் மயிலாப்பூரிலும் வேட்டை ஆடிய நாட்கள் - இப்படி எல்லா முயற்சிகளும் , சிரமங்களும் சில சங்கடங்களும் எல்லாம் பறந்து போய் ஒரு நல்ல மன நிறைவைக் கொடுத்தது.<br />
<br />
அதன்பின் இருக்கும் சில மணி நேரங்களில் பார்க்க வேண்டிய சில பல கோவில்களைக் காணப் பறந்தது காலேஜ் நாட்களின் பரீட்சைக்கு முன் தினங்களைத் தோற்கடித்தது. கிடைத்த இரண்டு மணி நேரங்களில் விரைந்து முதலில் பார்த்தது ஹனுமான் காட்டிலேயே உள்ள <b>கேதாரேஸ்வரர் கோவில்</b> மற்றும் <b>சங்கர மடம்</b>. முன்றைய கோவில் மீண்டும் மீண்டும் எங்களின் தொண்ணூத்தி ஆறாம் ஆண்டு இனிய நினைவலைகளை தட்டி எழுப்பின.<br />
<br />
பின் சென்றது ' <b>சங்கத் விமோசன்</b>' என்ற சங்கடங்களைத் தீர்க்கும் ஆஞ்சநேயர் கோவில். செந்தூரத்துடன் எதிரில் உள்ள இராமரையே பார்த்துக் கொண்டிருக்கும் ஆஞ்சநேயரின் இந்தப் பிரபலமான கோவிலில் சனிக் கிழமைக்கேயான கூட்டமிருந்தாலும் சுலபமாக தரிசன வலம் வர முடிந்தது.<br />
<br />
அதன்பின் '<b>த்ரிதேவ் கோவில்</b>' என்ற அமைதியான அழகான மும்மூர்த்திகளின் கோவில். அடுத்து சென்ற '<b>துர்கா மந்திர்</b>' நம்ம பக்கத்து , அங்காளம்மன் கோவில் போல் நிறைய சிவப்புடன் காட்சி அளித்தது .<br />
<br />
<b>'துளசி மாநஸ் மந்திர்'</b> என்ற துளசிதாசரை முற்படுத்திக்க கட்டப்பட்ட இந்தக் கோவிலைக் காண ஒரு அரை நாளாவது வேண்டும். அவ்வளவு சித்திரங்கள் , அவ்வளவு வேலைப்பாடுகள் நிறைந்த சிலைகள், படங்கள் .<br />
<br />
நிறைவாகச் சென்ற '<b>சோழியம்மன் கோவில்</b> ', யாத்திரிகளுக்கு நேரம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக தரிசனம் செய்ய வேண்டிய கோவில் - இதில் நமக்கு எந்த சாய்ஸும் இல்லை. இங்கு வந்து கோவிலிலேயே கிடைக்கும் ஒரு சோழியை வாங்கி அதை அம்மனிடம் படைத்து ' வாரணாசி வந்ததற்கு நான் உனக்கு சோழி அளிக்கிறேன் , வந்ததற்கான பலனை நீ எனக்கு அளிப்பாய் ' என்று வேண்டிக் கொண்டால் அதற்க்கு அம்மன் ஆசி வழங்கி விஸ்வநாதரிடம் நாம் வந்த செய்தியை உறுதி படுத்துவதாக ஒரு நம்பிக்கை !!<br />
<br />
இனி இங்கு பார்க்க வேண்டிய முக்கிய கோவில்கள் இல்லை என்ற மன நிறைவுடன் நாங்கள் தங்கிய பாலானந்த தீர்த்தாஸ்ரமத்தை விட்டு கிளப்பினோம். இந்த ஆஸ்ரமம் வரும் யாத்திரிகளுக்காக , குறைந்த வாடகையில் , மிதமான வசதியுடன் தங்கி, வந்த வேலைகளை, எண்ணங்களை திருப்தியாக செய்ய உதவும் எண்ணத்துடன் நடத்த படும் ஒன்று. மிகுந்த வசதிகளை எதிர்பார்ப்பவர்களுக்கு இது இடமல்ல . அனால் இந்தப் புனித யாத்திரைக்குத் தேவையான அதிகாலை வெந்நீர் ஸ்நான வசதி, குளிர் சாதனம், முக்கியத் தேவையான ஈரத்துணி உலர்த்த கொடி கட்ட நிறைய இடம், நம் சாஸ்திரிகள் வீடு அருகிலேயே இருப்பதால் வேளா வேளைக்கு காபி, சிற்றுண்டி அறைக்கே வரும் வசதி .... இதை விட ஒரு புனித யாத்திரையில் மனமெல்லாம் செய்ய வேண்டிய கர்மாக்களில் இருப்பவருக்கு வேறென்ன தேவை ?<br />
<br />
வரும்பொழுது இருந்த அதே அரை இருட்டில் திளைத்திருந்த வாரணாசி விமான நிலையம் எங்கள் விமானத்தை பற்றிய எந்த அறிவிப்பும் செய்யாமல் முதல்வரை தேர்வு செய்யும் ஆளுநர் போல் கொஞ்சம் சஸ்பென்ஸ் கொடுத்து படுத்தியது . பின் ஏறிய கொல்கத்தா விமானத்தில் நுழைந்தவுடன் செய்த முதல் காரியம் கொண்டு வந்த பொட்டலத்தை பிரித்தது தான். அகோரப் பசியில் , உடனேயே கொல்கத்தா வந்து விடும் என்ற அவசரத்திலும் விழுங்கிய தோசைகள் கண்களில் நீரை வரவழைத்து - மிளகாய்ப் பொடியின் அதிகக் காரத்தால் !!<br />
<br />
இங்கு நாங்கள் வாரணாசியில் உள்ள போது கிடைத்த ஆகாரங்களை பற்றிய சில வரிகள். வந்த முதல் நாளே சொல்லி விட்டார் எங்கள் வாத்தியார்- தினமும் எந்த நேரம் கேட்டாலும் அறைக்கே வந்து காபி, டீ வழங்க பூல் சந்த் என்ற முதியவர் எங்களுக்காவே பிரத்தயேகமாக நியமிக்கப்பட்டிருப்பதை. இந்த முதியவர் இது மட்டுமல்லாமல் பல இடங்களில் எங்கள் வழி காட்டியாகவும் இருந்து பெரிதும் உதவினார். அவர் பேசித் தான் கேட்டதே இல்லை - மொழி புரியாததால் மட்டுமில்லை ; வாயில் எந்நேரமும் பான் !!!<br />
<br />
மதியம் சாப்பாட்டிற்க்கோ இரவு பலகாரத்திற்க்கோ அடுத்த தெருவிலிருந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு ஒரு போனைப் போட்டு சொல்லி விட்டால் போதும் - அங்கு போயும் சாப்பிடலாம் அல்லது அறைக்கும் அனுப்பப் படும். இத்தனை காரியங்களுக்கு நடுவில் அந்த வடநாட்டில் நமது ரசம் சாதம் போடும் இவரது பெருமை , போய் சாப்பிட்டுப் பார்த்தால்தான் புரியும் !!<br />
<br />
இங்கு நமக்கு முன்னோர்களுக்கு காரியங்கள் செய்ய பெரிதும் உதவும் அந்தணர்கள் பற்றி :<br />
<br />
நீங்கள் எந்த அளவுக்கு சிரத்தை காண்பிக்கிறீர்களோ , எவ்வளவு உங்களால் செய்ய முடியுமோ அதற்கேற்ப காசுக்கேத்த தோசை கிடைக்கும் . இதில் காசு முக்கியம் என்றாலும் அது மட்டும் முடிவு செய்ய உதவுவதில்லை. கேட்ட தட்சணையைக் கொடுத்தும் சில அலட்சியங்கள் நம் கண்களுக்குத் தப்புவதில்லை. ஸ்ரார்த்தம் முடிந்து வைதீக அந்தணர்களுக்கு வாழை இலைக்கு பதில் பேப்பரில் சாப்பாடு, பிளாஸ்டிக் தட்டுகள், சில மந்திரங்களை புத்தகத்தைப் பார்த்து படித்தல் இப்படி பல. எவ்வளவு இருந்தும் நாம் நம் சிரத்தையை குறைவில்லாமல் செய்தால் மற்ற(வர்களின்) குறைகள் மன்னிக்கப்படும் என்பது என் நம்பிக்கை.<br />
<br />
வயிறு நிரம்பி சிறிது சாவகாசமாக வந்திறங்கிய கொல்கத்தா விமானம் பளீரென்று வரவேற்றது - வாரணாசியில் காணாமல் போயிருந்த அத்தனை மின்சார விளக்குகளும் இங்கிருப்பதுபோல் தோன்றியது. சிறிது காத்திருந்து மறுபடியும் ஏறிய விமானம் சென்னை வந்திறங்கிய பொழுது மணி இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது (மறுநாள் அதிகாலை) <br />
<br />
<b><u>பாகம் மூன்று - மீண்டும் ராமேஸ்வரம் </u></b><br />
<div>
காசியிலிருந்து திரும்பியபின் சென்ற ராமேஸ்வர பயணம் அதிக சிரமமில்லாமல் அமைந்ததற்கு முக்கிய காரணங்கள் முன்னே அறிமுகமான சாஸ்திரிகள் மற்றும் சிக்கலில்லாத சம்பிரதாயங்கள். அலஹாபாத்தின் திரிவேணி சங்கமத்திலுருந்து பிளாஸ்டிக் கேனில் விமானத்திலும் கடினமான சாலைகளிலும் காப்பாற்றி எடுத்து வந்த அந்த புனித கங்கா ஜலத்தை வெகு சுலபமாக சேர்ப்பிக்க முடிந்தது. ஒரு சிறப்பு டிக்கட் மட்டுமே எடுத்துக் கொண்டு நேராக இராமநாத சுவாமி கோவிலிலுள்ள பிரகாரத்தினுள் நுழைந்த உடன் அதை பத்திரமாக வரவேற்று பிரத்யேகமாக உங்களுக்காகவே அதை வைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்த காட்சி , காணக் கண் கொள்ளாமலிருந்தது. </div>
<div>
<br /></div>
மிகுந்த பரப்புடன் தொடங்கிய பயணம் வெகு விரைவிலும் சுலபமாகவும் எதிர்பார்த்தபடியே முடிந்ததால் மகிழ்ச்சியை மேலும் கூட்ட ராமேஸ்வரம் அருகிலிருந்த சில முக்கிய தலங்களுக்கு செல்ல முடிவு செய்து முதலாக போனது '<b>சேதுக்கரை</b>' - இங்கிருந்து தான் இராமர் சீதையை மீட்க இலங்கைக்கு பாலம் கட்ட ஆரம்பித்த இடம் .<br />
<br />
அதன் பின் சென்ற '<b>திருப்புல்லானி</b>' என்ற திவ்ய தேசம், உண்மையிலேயே ஒரு திவ்யமான இடம் தான். மிகப் பெரிய இந்தக் கோவிலின் பெருமாளின் அழகு சொல்லி மாளாது. அதன் பின் சென்ற '<b>உத்தரகோச மங்கை</b> ' நான் வெகு நாட்களாக போக ஆசைப்பட்ட க்ஷேத்ரம். இந்தக் கோவிலில் திருவாதிரையின் போது மரகத நடராஜரைக் காண வரும் கூட்டம் சொல்லி முடியாது என்று கேள்விப் பட்டிருக்கிறேன் . மற்ற நாட்களில் அந்த மரகத உருவம் பங்கப் படாமலிருக்க உடல் முழுவதும் சந்தனம் பூசி இருந்தது குளிர்ச்சியைக் கூட்டியது .<br />
<br />
அடுத்து சென்ற "<b>தேவிப் பட்டிணம்</b> " என்ற இடத்தில் கடல் நீரில் அமிழ்ந்திருக்கும் நவ கிரஹங்கள்<br />
<br />
பின் மறக்க முடியாத புகை வண்டிக்கும் கப்பலுக்கும் பாலத்தை தூக்கி மாற்றி மாற்றி வழி விடும் பாம்பன் பாலத்துடன் சில செல் ஃபிகளுக்குப் பிறகு , ராமேஸ்வரத்தையும் இவரையும் எப்படிப் பிரிக்க முடியும்? ! அப்துல் கலாம் அவர்களின் சமாதிக்கும், பிறந்த வீட்டுக்கும் ஒரு விஜயத்துடன் விடை பெற்றுக் கொண்டோம் .<br />
<br />
மறுநாள் திருச்சியில் எங்கள் <b>குல தெய்வத்திற்கு</b> நன்றி சொல்லி பின் <b>சமயபுர மாரியம்மனின்</b> ஆசியையும் பெற்றுக் கொண்டோம். எல்லா முக்கிய காரியங்களும் விநாயகர் வழிபாட்டுடன் தான் தொடங்கும். ஆனால் நாங்கள் <b>திருச்சி உச்சிப் பிள்ளையாரை</b> வணங்கி முடித்த பயணம் மறு வாரம் சமாராதனையுடன் இனிதே முடிவடைந்தது.<br />
<br />
விளையாட்டாக ஆரம்பித்த இந்த புனித யாத்திரைக்கு எப்பொழுதும் கூடவே இருந்த தெய்வங்களைத் தவிர பலரும் கை கொடுத்தனர். என்னுடன் வந்த என் நெருங்கிய உறவினர், அவரின் ஹிந்தி பரிச்சயம், வைதீக காரியங்களை சிறப்பாகச் செய்த காசியிலுள்ள அந்த அந்தணர்கள், படகில் செல்லும் பொழுது அந்த கங்கை காற்றின் வேகத்திலும் அணையாமல் குமுட்டியை விசிறிக் கொண்டே இருந்து பிண்டங்களை சரியான நேரத்தில் சமர்ப்பிக்க வைத்த அந்த 'பாய்', கங்கையில் என் முன்னோர்கள் காத்திருக்கும் சரியான அந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற படகோட்டி 'குகன்' , மந்திரங்களால் எங்களின் மனதை நெகிழ வைத்த அந்த கயா சாஸ்திரிகள், எங்களின் வழிகாட்டி பூல் சந்த் இப்படி பலர். இவற்றையெல்லாம் சேர்த்து முன்னோர்களின் ஆசி எங்களை இங்கெல்லாம் வரவழைத்தாக மனப்பூர்வகமாக நம்புகிறோம் !!!<br />
</div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-89829089831530407882017-01-14T20:58:00.000-08:002017-01-15T05:26:13.204-08:00சோழ நாட்டு திவ்ய தேச தரிசனங்கள் - 2016<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
'உண்மையான காதல் என்றுமே சுலபமான பாதையில் செல்வதில்லை' என்று சொல்லுவார்கள் (The path of true love never runs smooth) .<br />
<br />
என்னளவில் அது எல்லாவற்றுக்குமே பொருந்தும். ஒரு மிகச் சாதாரணமான காரியமாக இருந்தாலும் , கொஞ்சம் நம்மைச் சுற்றி விட்டு வேடிக்கை பார்க்கும். முடிவில் நன்றாகவே நடக்கும் என்ற அனுபவத்தினால் தான் இதனைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டி இருக்கிறது.<br />
<br />
இப்படித்தான் மிகத் துல்லியமாக ஏரியா வாறாக ஜானகி டூர்ஸின் ரமேஷ் அனுப்பிய குறுஞ்செய்திப்படி அதிகாலை 4 : 45 க்கே தயாராக இருந்தும், நாங்கள் பயணிக்கப் பட வேண்டிய வேனுக்கு முன் இன்னொரு மஹாநுபாவன் வண்டியை நிறுத்தி விட்டு ஏதோ டீ வீ சீரியல் பார்க்கப் போயிட்டார் போல- மணி ஏழாகியும் கிளம்பிய பாடில்லை. டென்க்ஷன் விண்ணை முட்டி மஹாவிஷ்ணு என்னவென்று மேலிருந்து எட்டிப் பார்த்ததெல்லாம் ஒன்றுமே அறியாத ரமேஷ் அலை பேசியில் தொடர்ந்து பேசிக்கொண்டே மந்தைவெளி நாற்சந்தி நடுவில் அலைந்ததைக் கண்டு மனமிரங்கிய பெருமாள் ஒரு வழியாக எட்டு மணிக்கு பயணம் தொடங்க வழி செய்தார். இருந்தாலும் தனுர் மாதத்தில் பெருமாளை நாற்பது திவ்ய தேசங்களில் தரிசனம் செய்ய விழைந்த பதினாறு புண்யாத்மாக்களைச் சுமந்து கொண்ட வண்டி தாம்பரம் தாண்டிய பின் தான் ரமேஷுக்கு கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்க கொள்ள முடிந்தது. என்னைப் போல் வண்டியினுள் இருந்தவர்களுக்கு இந்தக் கவலையும் இல்லை -ஏனென்றால் எங்கள் கண்களுக்கு ரமேஷ் அந்தத் தேரோட்டிக் கண்ணனாகத் தெரிந்ததால் கவலையை அவனிடத்தில் விட்டு விட்டு காலை மூன்று மணிக்கே எழுந்ததில் கண்கள் சொருக கொஞ்சம் சாய்ந்து அமர்ந்து கொண்டவுடன் தட்டி எழுப்பி ஒரு வெறியோடு அருமையான காலை உணவு கொடுத்த ரமேஷ் அப்போது எங்களுக்கு கடோத்கஜனாகவே தெரிந்தார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGIy4ZiIr04BgbZzADs_W8Eb0y1GX8KtXIelr5wXL111fNRE4aEZyHH2A9c2VB3q5kKaqYY2Ck3W3Hx6j2SQ1aGbY3W93vW69mMiFVSNbLrqxjiZGn0EjzZ1DalE33lflUsE8V1vF-e4U/s1600/15589709_1349448465097427_4439096835983254474_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGIy4ZiIr04BgbZzADs_W8Eb0y1GX8KtXIelr5wXL111fNRE4aEZyHH2A9c2VB3q5kKaqYY2Ck3W3Hx6j2SQ1aGbY3W93vW69mMiFVSNbLrqxjiZGn0EjzZ1DalE33lflUsE8V1vF-e4U/s400/15589709_1349448465097427_4439096835983254474_n.jpg" width="400" /></a></div>
<br />
முதல் நாளே நெய்வேலியில் ஒரு நல்ல மதிய உணவு கிடைத்தாலும் , மாலை நான்கு மணி வரை கொஞ்சம் மந்தமாகவே நகர்ந்து கொண்டிருந்த பயணம் சீர்காழியை அடைந்தவுடன் திடீர் உத்வேகம் பெற்றது. அந்த மாலையில் <b>திருவாலி</b>யில் தொடங்கிய திவ்ய தேச தரிசனங்கள், நடுவில் <b>திருநகரி</b>யில் மக்கள் சுவாமி கும்பிட்டுக் கொண்டிருந்த பொழுது ரமேஷ் கலக்கிய ஸ்பெஷல் காப்பியால் உந்தப்பட்டாலும் , இரவினுள் எந்தவித அதிக சிரமமில்லாமல் பதிமூன்று க்ஷேத்திரங்களைக் கண்டது அதிசயமே. அலைந்த உடம்பிற்கும் நிரம்பிய மனதுக்கும் , மறுநாள் இதைவிட மோசமான நீண்ட தூர பயண எண்ணத்துக்கும் ஆறுதலாக இருந்தது வசதியான மாயூர அறை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbGLrTpmDElrnkEYlxSgu1dYDMliKVr3xfwcctRndXnOIoTbed_X9xfzPgCjH4_bat-uJwap5jbz2aF_Sd3VCGhduYqtapLVBmZi7CbOpV-Be7Zsq4AMYEy6KK9-qMnf5C48PEUxaL1PU/s1600/IMG_4500.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbGLrTpmDElrnkEYlxSgu1dYDMliKVr3xfwcctRndXnOIoTbed_X9xfzPgCjH4_bat-uJwap5jbz2aF_Sd3VCGhduYqtapLVBmZi7CbOpV-Be7Zsq4AMYEy6KK9-qMnf5C48PEUxaL1PU/s640/IMG_4500.jpg" width="480" /></a></div>
<br />
<br />
ஒரு ஆழ்ந்த உறக்கத்திற்குப் பின் இரண்டாம் நாள் விடிகாலை தரிசித்த '<b>திரு இந்தளூர்</b>' ராஜ கோபுரமே ஒரு கம்பீரத் தோற்றமளித்தது. திருப்பள்ளி எழுச்சி பாடி பெருமாளை எழுப்பி ஆசி வாங்கிய பிறகு சென்ற '<b>தேரழுந்தூர்'</b> கோவில் தோற்றமே ஒரு தெய்வீகமாக தக தகவென்று மிளிர்ந்தது.<br />
<br />
எவ்வளவு அவசரமாக ஓடினாலும் , திவ்ய தேச பட்டியலில் இல்லா விட்டாலும் பார்க்கலாம் என்று தீர்மானித்த <b>மயூரநாதர் </b>கோவிலில் அம்மனை மட்டும் தான் தரிசிக்க முடிந்தது. ஆனால் அங்கு <b>கண்ட 1928ஆம்</b> ஆண்டு தேதியிட்ட ஒரு கல்வெட்டு அதிசயிக்க வைத்தது .<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwqYxu1_sLpVR3KUD_wl-2bDKChBc81DgIHXguy03QkSdrBT-_oImGSufjIn6wyHoI1amIcZzsPN1OZrXWPoXwXewmzt6d0wUc6ivdX3jqgUoIJt1ahli5PcHflMknhigNT7Va-pg4Nrw/s1600/IMG_4552.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwqYxu1_sLpVR3KUD_wl-2bDKChBc81DgIHXguy03QkSdrBT-_oImGSufjIn6wyHoI1amIcZzsPN1OZrXWPoXwXewmzt6d0wUc6ivdX3jqgUoIJt1ahli5PcHflMknhigNT7Va-pg4Nrw/s320/IMG_4552.jpg" width="240" /></a></div>
<br />
<br />
மதிய உணவுக்கு பெரிய பெயரை நம்பிப் போன ஹோட்டல் உணவின் தரத்தில் ஏமாற்றினாலும் சில நல்ல புகைப் படங்கள் எடுக்க உதவியது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0oBw6g7quNaqiuHNznniLu_Q68POHDGHXuxiG2bSqcLJ8bGkIelE_zziaWGQWraSZsm7zM45SE7r7kZkPtDjuidoDSEGHOTZA_R_t4Q1_fTae7Gj5ocUyc6DbDd_VSdww3DMXuncUhOY/s1600/IMG_20161223_130820031.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="112" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0oBw6g7quNaqiuHNznniLu_Q68POHDGHXuxiG2bSqcLJ8bGkIelE_zziaWGQWraSZsm7zM45SE7r7kZkPtDjuidoDSEGHOTZA_R_t4Q1_fTae7Gj5ocUyc6DbDd_VSdww3DMXuncUhOY/s200/IMG_20161223_130820031.jpg" width="200" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrZ-yVrSG6EcgqOhhR6w1y0D4wXatP1KAgiM-_BTnBnJ_0sOeEZcdDjM_3RaeqpTJMTPcwlEvSXoEO7UGcgCESwuCy3SliK1v3tgifOKQ-7hOwfh-OFYzPRT1eVmvZOZJqtnYwP0tlLMQ/s1600/IMG_4562.JPG" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrZ-yVrSG6EcgqOhhR6w1y0D4wXatP1KAgiM-_BTnBnJ_0sOeEZcdDjM_3RaeqpTJMTPcwlEvSXoEO7UGcgCESwuCy3SliK1v3tgifOKQ-7hOwfh-OFYzPRT1eVmvZOZJqtnYwP0tlLMQ/s200/IMG_4562.JPG" width="200" /></a></div>
<br />
<br />
அடுத்துச் சென்ற '<b>திருக்கண்ணபுரம்</b>' என்ற அருமையான திவ்ய தேசத்திற்கு சீக்கிரம் போனதால் கோவில் எதிரிலுள்ள பெரிய குளக்கரையில் அமர்ந்த நேரம் மறக்க மறுக்கும் மணித் துளிகள்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbtiIVBUUGhBpsQOigsJDY5bvGXXIn-n_0-k-p5qUgek8e20OEhJBrZm7NDY1lo3YF44p7h6DzsLaSm1xunaCg_O5PUaMqITW5DDLgxoVFWbLMCdKBLSWszQ0sB4vvJ60uImPSXz5uX_s/s1600/15740735_1362249487150658_1183497060826191599_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbtiIVBUUGhBpsQOigsJDY5bvGXXIn-n_0-k-p5qUgek8e20OEhJBrZm7NDY1lo3YF44p7h6DzsLaSm1xunaCg_O5PUaMqITW5DDLgxoVFWbLMCdKBLSWszQ0sB4vvJ60uImPSXz5uX_s/s400/15740735_1362249487150658_1183497060826191599_n.jpg" width="400" /></a></div>
<br />
சாய ரட்சையில் <b>திருநாகை</b>யில் கண்ட சௌந்தர ராஜப் பெருமாள் தரிசனம் என்றும் இனிக்கும் .<br />
<br />
அடுத்துச் சென்ற '<b>திருக்கண்ணங்குடி</b>' யில் திவ்ய தீபாராதனை காட்டிய குருக்களின் தாயில்லாப் பெண் படிக்க பணம் கொடுக்க முடியாது கஷ்டப் படுவதைக் கேட்ட பொழுது அதே நாராயணனிடம் கொஞ்சம் அதிகமாக அந்தப் பெண்ணுக்கும் சேர்த்து வேண்டிக் கொள்ளத்தான் முடிந்தது. என்ன சாபமோ தெரியவில்லை, மதிய உணவுக்கு ஏமாற்றப் பட்டது போலவே, இரவு களைத்து த(தூ)ங்கப் போன திருவாரூர் ஹோட்டலிலும் ரூம் இல்லை என்று டென்க்ஷனை கூட்டி அந்த நாளை முடித்தார்கள்.<br />
<br />
மீண்டும் விடிய விடிய எழுந்து சில கோவில்களை பார்த்த மூன்றாம் நாளில் கண்ட <b>திருவாரூர் </b>தியாகேசர் கோவில் ஒரு அதிகாலை அற்புதம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMKY83B3ARhD-rH9QKP8kB31i5wUWu2aw3RewAjrG4Lo-khD97xSQbs2JrwEow6kuSqUm-wTtGiiKligRcGjxaWajJdbwgnztaEWmxjnBJIPuNYsrd4t_MHzoo1OxalpjZ73lLe3XThOY/s1600/IMG_4745.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMKY83B3ARhD-rH9QKP8kB31i5wUWu2aw3RewAjrG4Lo-khD97xSQbs2JrwEow6kuSqUm-wTtGiiKligRcGjxaWajJdbwgnztaEWmxjnBJIPuNYsrd4t_MHzoo1OxalpjZ73lLe3XThOY/s640/IMG_4745.jpg" width="480" /></a></div>
<br />
<br />
கமலாலயத்தின் முன் நின்று சில நிமிடங்கள் அந்த தனுர் மாதக்காலையின் குளிர்ந்த காற்றை அனுபவித்தது என்று நினைத்தாலும் ஜில்லென்று இ(னி)ருக்கும் . ஒரு அருமையான காலை சிற்றுண்டிக்குப் பிறகு தொடர்ந்த பயணம் மற்றுமொரு பிரம்மாண்டமான <b>மன்னார்குடி </b>ராஜகோபால சுவாமி கோவிலுக்கு.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9eoILTTda6UIKleSg-60fyV-By2ueGlvjYpXmG4AXWFRlWrK2SrmN7H27RKKiEwUeYHTZIwnBlncYJekD-eVrwERll9Ym8JU8bptZXcrPBg-90mMBirxi_rHHR_sb3dd72Bq-BUCLqfc/s1600/15665750_1353287361380204_4656708703139471124_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9eoILTTda6UIKleSg-60fyV-By2ueGlvjYpXmG4AXWFRlWrK2SrmN7H27RKKiEwUeYHTZIwnBlncYJekD-eVrwERll9Ym8JU8bptZXcrPBg-90mMBirxi_rHHR_sb3dd72Bq-BUCLqfc/s640/15665750_1353287361380204_4656708703139471124_n.jpg" width="360" /></a></div>
<br />
<br />
குழந்தை கிருஷ்ணனை மடியில் ஒரு நொடி சுமந்த மன நிறைவுடன் சென்றது <b>கும்பகோணம் </b>சாரங்கபாணி கோவில். இப்படிப்பட்ட நெருக்கமான பயண அட்டவணையில் கிடைப்பதற்கு அறிய சில நிமிட மதிய ஒய்வு குடந்தை 'பாப்பி' ஹோட்டலின் இதமான சூழ்நிலையில் கிடைத்தது.<br />
<br />
சீக்கிரம் வந்தே பழக்கப்பட்ட இந்தக் குழுவுக்கு <b>நாச்சியார் கோவிலில்</b> கிடைத்த பரிசு அங்குள்ள புகழ் மிக்க பாவை விளக்கு வாங்கக் கிடைத்த கொஞ்ச நேர அவகாசம். அதன்பின் பார்த்த <b>ஒப்பிலியப்பன் கோவிலில்</b> கிடைத்த கூட்டமில்லா தரிசனம் , ஒரு ஆச்சரியம் தான் . அடுத்து பயணப்பட்ட <b>நாதன் கோவில் </b>என்றழைக்கப்படும் திருநந்திபுர விண்ணகரம் என்ற சிறு கிராமத்தை அடைவதற்குள் ஒரு த்ரில்லர் படத்தில் உள்ள எல்லா உணர்வுகளும் கிடைத்தது . மிகக் குறுகிய சந்துகளில் புகுந்து சென்ற எங்கள் வண்டியை சரியாக வழிகாட்ட யாருமில்லாத போதும், பெரிதும் நம்பிய கூகிள் மேப் கை விடவில்லை. சில திகில் நிமிடங்களுக்குப் பின் பார்த்த 'நாதன் கோவிலோ ' அற்புதமான ஒரு அழகிய கோவில் .<br />
<br />
மூன்று நாட்களின் கடுமையான சுற்றுப் பயணம் உடலில் தெரிய ஆரம்பித்தாலும், பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு உந்தியதே இரவு நன்கு தூங்க உதவிய சௌகரியமான விடுதிகள் , அதிகாலை காபி மற்றும் முக்கியமாக பார்த்துக் கொண்டிருக்கும் சில அறிய திவ்ய தேசங்கள். இப்படியாக நான்காம் நாள் அதிகாலை எழுந்து கும்பகோணத்திலிருந்து சுமார் 45 நிமிட பிரயாணத்துக்குப் பின் அடைந்த அருமையான கிராமம் <b>திருவெள்ளியங்குடி</b>. பெருமாள் கோவில் திறக்கப் படாததால் அருகிலுள்ள ஒரு சிவன் கோவிலை அங்குள்ள மக்கள் திறந்து விட, நம் குழு அங்கு விளக்குகள் ஏற்றி கோவிலையே ஒரு அதிகாலை தரிசனத்திற்கு வழி வகுத்துக் கொடுத்தது ஒரு நல்ல அனுபவம். மார்கழி அதிகாலையில் அங்கு உள்ள கிராம மக்கள் தெருவைக் கூட்டி, விட்டு வாசலில் கோலங்கள் போட்டது கடும் குளிரையும் மறந்து நின்று பார்க்கத் தூண்டியது .<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkQnXwvFCK1fpTBgfpqrdud77qZQrj9Q-pailDFP2QvM3K4j5cklFnaJk_6EK6SkjK-Z2_yLG_Lp4fxp-wbvm5KQaDuKCkKi8x12Gawuf621ozpxVKrWJkU66hYDEb4wr86sEcL2cZeKU/s1600/IMG_4852.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkQnXwvFCK1fpTBgfpqrdud77qZQrj9Q-pailDFP2QvM3K4j5cklFnaJk_6EK6SkjK-Z2_yLG_Lp4fxp-wbvm5KQaDuKCkKi8x12Gawuf621ozpxVKrWJkU66hYDEb4wr86sEcL2cZeKU/s400/IMG_4852.jpg" width="300" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghr21Ajy70ALc7NMxKp2pfkFV-En8OZAU9vS7xNP1tyA_O623_4SyPBWuuHIddMb_-Fd5KLX4WvILE6AnM-0AuIHdQPXS8zbPMiikKiPCpSjdCGrWWd0Hous0fDZO0K1svZETYGYbyTzE/s1600/15726419_1355273524514921_1387476130589654268_n.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="224" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghr21Ajy70ALc7NMxKp2pfkFV-En8OZAU9vS7xNP1tyA_O623_4SyPBWuuHIddMb_-Fd5KLX4WvILE6AnM-0AuIHdQPXS8zbPMiikKiPCpSjdCGrWWd0Hous0fDZO0K1svZETYGYbyTzE/s400/15726419_1355273524514921_1387476130589654268_n.jpg" width="400" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
பின் அங்குள்ள கோலவில் இராமனை தரிசித்ததில் தெரிந்து கொண்டது இங்கு வந்தால் எப்பேர்ப்பட்ட கண் சார்ந்த நோய்களும் குணமாகி விடும் என்பதே. அதன் பின் <b>திருஆதனூர்</b> என்ற அழகிய கோவிலைத் தரிசித்து <b>திரு புள்ள பூதங்குடி</b>யில் கண்ட ஒரு அதிசயம் 'உத்யோக நரசிம்மர்' . <br />
<br />
பின் சென்ற <b>கபிஸ்தலத்தில் </b>, கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்த கஜேந்திர வரதரின் அமோகக் காட்சியைக் கண்டு அதிசயித்து பின் சென்ற <b>திரு ஆடுதுறை </b>என்ற தலத்தில் மரத்தில் தாமாகவே தோன்றிய சங்கு வியக்க வைத்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhO_Y48VrjOPE_LkR1wBNERxIznnELJWqDMwHlgX9WEKYw-B0m16pYcoVmVF5NtAzhS7pdQtP_qnoAn3po4AO3FmBVDIFyt1ef1UzGF4ZqZkDD0Q1dTTVwZbpcVi6qbXO6_cLCESICd0pE/s1600/IMG_5001.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhO_Y48VrjOPE_LkR1wBNERxIznnELJWqDMwHlgX9WEKYw-B0m16pYcoVmVF5NtAzhS7pdQtP_qnoAn3po4AO3FmBVDIFyt1ef1UzGF4ZqZkDD0Q1dTTVwZbpcVi6qbXO6_cLCESICd0pE/s400/IMG_5001.jpg" width="300" /></a></div>
<br />
<br />
அதன்பின் சென்ற, கும்பகோணம் - தஞ்சை பிரதான சாலையில் அமைந்திருக்கும் <b>திருக்கண்டியூர் </b>என்ற கோவிலில் இருந்த பட்டர் கொஞ்சம் அவசரமாகவும் கோபத்திலும் இருந்ததால் ஒரு அவசர தரிசனத்துடன் நகர்ந்தது நம் குழு .<br />
<br />
காஞ்சியில் ஒரு சிவத்தலத்தினுள் அமைந்த திவ்ய தேசம் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் தஞ்சை அருகே உள்ள <b>தஞ்சை மாமணிக் கோவில்</b> என்ற திவ்ய தேசமோ மூன்று கோவில்களைக் கொண்டது. அதாவது, மூன்றும் சேர்ந்தது தான் ஒரு திவ்ய தேசம் !!<br />
<br />
தஞ்சையில் ஒரு நிறைவான மதிய உணவிற்குப் பிறகு வெகு நேரம் பயணித்து அடைந்த இடம் திருப்பேர் நகர் என்ற <b>கோவிலடி</b>.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1f6-HVTnWGojqwl2c5_g79Y9qH7iHf95vBpJj7_TDN7YLIXFx7xhCQv172zXlk6ruZGcSgw2XPdV90VoMRVf0p6MLmUjD_061_Uug_EpAH6G81tlabzej09oi49PuvmSL4xbd5fZkZF8/s1600/IMG_5070.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1f6-HVTnWGojqwl2c5_g79Y9qH7iHf95vBpJj7_TDN7YLIXFx7xhCQv172zXlk6ruZGcSgw2XPdV90VoMRVf0p6MLmUjD_061_Uug_EpAH6G81tlabzej09oi49PuvmSL4xbd5fZkZF8/s640/IMG_5070.jpg" width="480" /></a></div>
<br />
<br />
வெகு சீக்கிரமே வந்ததால் அந்த கிராமத்தை ஒரு சுற்று சுற்றி வர நேர்ந்ததில் காண முடிந்தது கோவிலுக்கு எதிரிலேயே உள்ள ஒரு வீட்டில் இந்தக் கோவிலின் அப்பக்குடத்தான் பெருமாளுக்குப் பிரதான பிரசாதமான அப்பம் செய்யும் இடம். பெருமாளுக்கு மட்டுமின்றி எங்களுக்கும் நான் போய் வாங்கி வந்த பாலை வைத்து காபி போட்டுக் கொடுத்து இந்தக் காலத்திலும் காசைப் பற்றி அதிகம் கண்டு கொள்ளாமலிருந்து அதிசயிக்க வைத்தது.<br />
<br />
பின் சென்ற <b>திரு அன்பில்</b> என்ற கோவிலில் பட்டர் விளக்கை அணைக்கச் சொன்னதும் தக தகவென்று மின்னும் பெருமாளை கண்டது சிலிர்க்க வைத்த தரிசனம். நாளின் கடைசி கோவில்களாக<b> உத்தமர் கோவிலும்</b>, <b>உறையூரையும் </b>கண்டு பின் சென்றடைந்தது <b>ஸ்ரீ ரங்கம்</b>.<br />
<br />
பொது விடுமுறையாதலால் சொல்ல முடியாத கூட்டம் என்று முதல் நாளே பீதியைக் கிளம்பியதால் மீண்டும் , தொடர்ந்து ஐந்தாவது நாளாக சீக்கிரம் எழுந்து கோவிலருகே எல்லோரும் கை காட்டிய 'முரளி கடையில்' ஒரு சூப்பர் காபிக்குப் பின் கிளம்பிய எங்களுக்கு ஸ்ரீ ரங்கனின் திவ்ய தரிசனம் உடனே கிடைத்தது பாக்கியமே.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw_E3qvkYPNKqjmZgfFPxxq6VuOJpCgFbaJdCuwkkHZpD6mt6Aa8fVw_c_CNqIMWd334s2D0jHLjZRlL7A3CWUZ2lXfn29y9yNf-PjU_iyniFsv3JjlC_GyOfpEK8vmj75epRQqSvxccQ/s1600/IMG_5120.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw_E3qvkYPNKqjmZgfFPxxq6VuOJpCgFbaJdCuwkkHZpD6mt6Aa8fVw_c_CNqIMWd334s2D0jHLjZRlL7A3CWUZ2lXfn29y9yNf-PjU_iyniFsv3JjlC_GyOfpEK8vmj75epRQqSvxccQ/s640/IMG_5120.jpg" width="480" /></a></div>
<br />
தாயாரையும் , உடையவரையும் தரிசித்து வெளியே வந்து குழுவிற்கு அநேகமாக எல்லா கோவில்களையும் பார்த்த திருப்தியில் வீடு திரும்பும் மன நிலை வரத் தொடங்கி இருந்ததில் ஆச்சரியமில்லை.<br />
<br />
உள்ளூர் வாசி கை காண்பித்து உதவிய ஒரு எளிய மெஸ்ஸில் அருமையான சிற்றுண்டிக்குப் பிறகு சென்னை நோக்கிப் புறப்பட்டு வந்து சேர்ந்ததோ பயணத்தின் நாற்பதாவது திவ்ய தேசமான <b>திருவெள்ளறை</b>.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6Pmv5Q5p4CUZaKBaE9LBYkyq0wTkX8cIcCYTYSZ5lHP_aktwwd_VeNJtpWcpe70f3WWI6HyDH1VrfXb80DwEASw0dWGDQyJnPkgG86tCKjMK9lUWdkP-GcswGlgtcIPtvgdSX11BW960/s1600/15747333_1357986530910287_7095099289891389876_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6Pmv5Q5p4CUZaKBaE9LBYkyq0wTkX8cIcCYTYSZ5lHP_aktwwd_VeNJtpWcpe70f3WWI6HyDH1VrfXb80DwEASw0dWGDQyJnPkgG86tCKjMK9lUWdkP-GcswGlgtcIPtvgdSX11BW960/s640/15747333_1357986530910287_7095099289891389876_n.jpg" width="360" /></a></div>
<br />
<br />
முடிக்கப் படாத மொட்டைக் கோபுரம் , ஆனால் நெகு நெகுவென ஓங்கி வளர்ந்து நின்ற புண்டரீகாட்ச பெருமாள் வருபவர்களை சுண்டி இழுத்தது. கோவிலின் பிரமாண்டத்தாலும் , பயணக் களைப்பினாலும் ஒரு சிலர் தாயார் சன்னதியை பார்க்காது நகர அங்குள்ள பட்டர் கோபமடைந்து எப்படி அவர்களெல்லாம் பாபிகள் என்று சொன்னதை விட அவர் சொன்ன 'எமன் உங்களைக் கண்டவுடன் கள்ளரைக்கு வருமுன் வெள்ளறையைக் கண்டாயோ என்று கேட்பான்' என்று சொன்னது மேலும் அழுத்தமாகப் பதிந்தது.<br />
<br />
ஒரு மிகுந்த மன நிறைவுடன் நாற்பது திவ்ய தேசங்கள் , மேலும் மூன்று பிரசித்த பெற்ற சிவ ஸ்தலங்கள் என்று ஐந்து நாட்களில் பார்த்து, நிறைவாக திருச்சியில் எங்கள் குல தெய்வத்தையும் பார்த்து நன்றி சொல்லி விட்டு வந்த போது அடைந்த மன நிறைவுக்கு முன் ஐந்து நாள் அசதியும், உடல் வலியும் காணாமல் போயிருந்தது .<br />
<br />
சென்ற இடங்களில் எல்லாம் எழுந்த ஒரே வியப்பு , நம் தேசத்தில் இவ்வளவு பழமையான, புராணச் சிறப்பு வாய்ந்த இத்தனை தலங்களா !<br />
<br />
இவையெல்லாம் கட்டுக் கதை இல்லை - ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திருத்தலங்கள். ஏகப்பட்ட சான்றுகள் இருக்கின்றன - சான்று என்று ஒன்று தேவைப்பட்டால்.<br />
<br />
இவற்றையெல்லாம் தரிசிக்க தேவைப் படுவது நிதி மட்டுமல்ல - குறிப்பாகச் சொன்னால் நிதி பட்டியலில் கடைசியில் தான் வரும்.<br />
<br />
முதலில் உடல் ஆரோக்கியம், இவ்வளவு இடங்களுக்கும் நேரம் விரயமாகாமல் கூட்டிச் செல்ல ஸ்ரீ ஜானகி டூர்ஸ் போன்ற நல்ல பயண ஏற்பாட்டாளர்கள், நல்ல தங்குமிடம், உடலுக்கு சுகமான ஆகாரங்கள் , அழைத்துப் போக வழிகாட்டி, கூட வர அதே மன ஓட்டமுடையவர்கள், நண்பர்கள்- இவை அனைத்தையும் ஒன்று சேர்ந்து சீராக கிடைப்பது என்பது தான் ஒருவரின் அதிருஷ்டம். எங்களுக்கு கிட்டியது.<br />
<br />
முயன்றால் உங்களுக்கும் கிடைக்கும். நீங்களும் முயன்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.<br />
<br />
Note: To view more pictures on this Divya Desam tour , please visit my picture blog: <a href="http://kapalipics.blogspot.in/2017/01/forty-divya-desams-some-frozen-frames.html"> http://kapalipics.blogspot.in/2017/01/forty-divya-desams-some-frozen-frames.html</a><br />
<br /></div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-38400040165002681312016-11-01T02:52:00.000-07:002016-11-01T09:30:15.363-07:00 என் அக்டோபர் காதல் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<div>
எனக்கும் அக்டோபருக்கும் ஒரு எழுதப் படாத நட்பு இருந்து கொண்டிருக்கிறது.<br />
<br />
- சென்னை வெய்யிலின் தாக்கம் குறையத் தொடங்கும் மாதம் (முன்பெல்லாம்)<br />
- பல பண்டிகைகள் வரும், குறிப்பாக தீபாவளி.</div>
<div>
- இந்த மாதத்தில் நடந்த பல சம்பவங்கள் மறக்க முடியாமல் இன்றும் அசை போட வைத்துக் கொண்டே இருக்கின்றன . </div>
<div>
<br /></div>
<div>
இப்படியாக அக்டோபர் எனக்கு பிடித்துப் போக பல காரணங்களைக் கூறலாம்.</div>
</div>
<div>
<br /></div>
<div>
என் மற்றொரு நண்பன் மழை. நான் எடுக்கும் எந்த ஒரு நல்ல முடிவின் போதும் கண்டிப்பாக ஒரு லேசான மழையாவது வந்து ஆமோதித்தே தீரும் - அனேகமாக அது கன மழையாக இருந்தால் மிகப் பெரிய முன்னேற்றமாகத்தான் இருக்கும். இது நம்பிக்கையோ , எதிர் பார்ப்போ இல்லை. உண்மையில் நடந்தது தான்.</div>
<div>
<br /></div>
<div>
குறிப்பாக அக்டோபர் மழையுடன் சேர்ந்து நிகழ்ந்த ஒன்றிரண்டு சம்பங்கள் மறக்க மறுக்கின்றன</div>
<div>
<br /></div>
<div>
அந்த 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதக் கடைசியில், வழக்கமான கூட்டம் தான் இருந்தது வங்கியில். கொஞ்சமும் தலை தூக்க முடியாமல் வேலை செய்து கொண்டிருந்த அப்படிப்பட்ட ஒரு அரிய தருணத்தில் மிகவும் பரிச்சயப் பட்ட குரலின் குட் மார்னிங் கேட்டு தலை நிமிர்ந்தால், நட்பு அதிகமுள்ள ஒரு வங்கி வாடிக்கையாளர் அசாதாரண பதற்றத்தில் இருந்தார். கௌண்டரின் உள்ளே வந்து உரிமையோடு பக்கத்தில் உட்கார்ந்து ' இப்ப சொல்றது இன்னும் கொஞ்ச நேரத்துக்காகவாவது ரகசியமாக வெச்சுக்கோங்க' என்ற பீடிகையுடன் ' இந்திரா காந்திய சுட்டுட்டாங்க. இறந்து போயிட்டதா தகவல்-மேலும் டெல்லியிலே ஒரே கலவரமாம் . ஜாக்கிரதையா இருங்க' ன்னு சொல்லிட்டு ஓடியே போயிட்டார். சென்னை சாந்தோமில் உள்ள அவர் வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு இப்படிப் பட்ட சேதிகளை முதலில் ஆராய்ந்து மக்களுக்குச் சொல்லும் அதிகாரம் இருந்ததால் 'உண்மையா' என்று கேட்கத் தோன்றவில்லை. </div>
<div>
<br /></div>
<div>
<div>
கேட்டதை மற்ற நண்பர்களுடன் அதே ரகசியகமாகப் பகிர்ந்த பிறகு வீட்டுக்குப் போக வெளியே வந்தால் செய்தி கசிந்ததற்க்கான ஆதாரங்கள் சில ஷட்டர்கள் மூடும் சத்தத்தால் தெரிந்தன. இதற்க்கு முன் இப்படிப்பட்ட தலைவர்கள் இறந்த போது சென்னையில் நடந்த சில கலவரங்கள் ஞாபகத்துக்கு வர சைக்கிளை மிதித்து அருகிலுள்ள பள்ளிக் கூடத்தில் படிக்கும் எங்க வீட்டுப் பையனையும் அவன் நண்பனையும் கூட்டிக் கொண்டு , கூடவே நான்கு ரேடியோ பாட்டரிகளையும் (கலவரம் நடந்தால் கரண்டு பிடுங்கப்படலாம் என்பதால்) வாங்கிக் கொண்டு பத்திரமாக வீட்டில் சேர்த்த பிறகு தான் கொஞ்சம் நிதானப் பட்டது. </div>
<div>
<br /></div>
<div>
இதனுடன் நில்லாமல் சைக்கிளை மிதித்து சில நண்பர்கள் தி நகரில் கூடி விவாதித்து விட்டு வீடு திரும் பொழுது பார்த்த வன்முறைகள் இன்றும் பீதி ஏற்படுத்துகின்றன. அப்புறம் தான் தெரிய வந்தது டெல்லி கலவரங்களை நினைத்தால் சென்னை ஒன்றுமே இல்லை என்று. </div>
<div>
<br /></div>
<div>
அதே அக்டோபர் கடைசி தினத்தில் 2002ஆம் ஆண்டு காலை பொழிந்த பலத்த மழை என்னை அவ்வளவு பாதிக்கவில்லை ஏனென்றால் என் மனமெல்லாம் நான் அன்று எடுத்து வைக்கப் போகும் மிகப் பெரிய அடியில் இருந்தது. கால் நூற்றாண்டுக்கு மேல் ஒட்டி உறவாடிய வங்கிக்கு கையசைத்து விடை கொடுத்து, என் மனதுக்குப் பிடித்த அடுத்த துறையில் வேலைக்கு போகும் முதல் நாள். கொட்டிய மழையைப் பொருட்படுத்தாது ஆட்டோவில் சென்று அந்த அண்ணா சாலை அலுவலகத்தில் நுழைந்தால் அங்கு வேறு விதமான வெள்ளம் - புதிய ப்ரோஜக்டுக்குச் சேர வந்த நிறைய தலைகள், அன்று தொடங்கும் பயிற்ச்சியில் கொடுத்த 'அறிவுப் பரிமாற்றத்தில்' கிடைத்த லீஸிங் பற்றிய வெள்ளமான விவரங்கள் - இப்படி மூழ்கி இரவு ஒன்பது மணி அளவில் வெளியே வந்தவுடன் தான் தெரிந்தது அன்று நாள் முழுவதும் சுமார் எட்டு மணி நேரத்துக்கு மேல் மழை கொட்டித் தீர்த்து சென்னையை புரட்டிப் போட்டிருக்கிறது என்று. கெஞ்சிக் கூத்தாடி ஒரு ஆட்டோ பிடித்து காலைத் தூக்கி ஸீட் மேல் வைத்தும் நனைந்து (நீந்திக்) கொண்டே வந்த போது இரவு மணி 10.30. அன்று ஏற்பட்ட வெள்ளத்தில் புரண்ட சென்னை சாலையால் பல பஸ்கள் அங்கங்கு நின்று போக , அன்று பார்த்து தன் முதல் நாள் வண்டலூர் கல்லூரியில் பொறியியல் கல்வி தொடங்கிய என் அண்ணன் மகன் , செல் போன் இல்லா அந்தக் காலத்தில் என்ன ஆனான் என்று கவலைப் பட்டு ஒரு வழியாக இரவு ஒரு மணிக்கு வந்து சேர்ந்தது வேற கதை.<br />
<br />
இதே போல் 1986 என்று நினைக்கிறேன். கடமைக்கு ஒரு பணி ஆற்றிக் கொண்டிருந்த போதிலும் என் திருப்திக்காக துரத்திக் கொண்டிருந்த மற்றோரு பணி படித்தறிந்ததை கற்றுக் கொடுப்பது. இப்படி ஆசைப்பட்டு அதற்கொரு மஹானுபாவன் வாய்ப்பளித்த களிப்பில் ஒரு அக்டோபர் மாலையில் வெளியில் வந்தால் வானம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. கவலைப் படாமல் வண்டியை உருட்டி வேகத்தைக்கூட்டினாலும் கிண்டி பொறியியல் கல்லூரிக்கு அருகில் வந்த பொழுது இனிமேல் என்னால் முடியாது என்பது போல் வானம் மடை திறந்து ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்து என்னையும் முழுமையாக நனைத்தது. சரி , இனிமேல் இப்படி ஈரம் சொட்டும் உடையில் பாடமெல்லாம் எடுக்க முடியாது என்று தைரியமாகப் போன எனக்கு ஷாக் கொடுத்தார் மேலாளர் - 'இன்று நல்ல நாள். வகுப்பை ஆரம்பித்து விடலாம் ' என்று. ஈர சாக்ஸை உலரவைத்து விட்டு வெறும் காலுடன் முழுவதும் நனைந்த பேண்டு, ஷர்ட்ஆங்காங்கே ஜில்லுப்பாக கிசு கிசு மூட்ட எடுத்த முதல் வகுப்பு அனுபவம் ; மிகப் பெரிய வரவேற்பு கொடுத்து மேலும் பதினைந்து வருடங்கள் ஓடியது, மற்றுமொரு மறக்க முடியாத அக்டோபர் நாள் தான்.<br />
<br />
இந்த இனிய உறவின் நினைவு ஒவ்வொரு அக்டோபர் மாதமும் வரத் தவறுவதில்லை.</div>
</div>
</div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-42016285175786042702016-09-07T02:01:00.000-07:002016-09-07T17:31:25.108-07:00 ஒரு 'கிரேசி' முயற்சி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன் குமுதத்தில் படித்த நாடகக் கதை!<br />
<br />
அன்று படிக்கும் பொழுது அனுபவித்த அதே ஜோக்குகள் - 70 எம் எம் திரை, திருவோண நட்சத்திரம் ரயிலை விடும் - போன்றவை இன்றும் குபீர் சிரிப்பைக் கிளப்பியது.<br />
<br />
இப்படிப்பட்ட ஒரு அரிய , சுவையான , பின்னோக்கிப் போன பயணத்தை அளித்தது நாடகப்பிரியா குழுவின் 'கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம் ' என்ற நகைச்சுவை நாடகம் , மீண்டும் நேற்று அரங்கேறிய பொழுது கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் உதவியால் காண நேர்ந்தது.<br />
<br />
நீளம் சற்று குறைவானதுதான் என்றாலும் நகைச்சுவைக்கு ஒன்றும் குறைவில்லை . கூர்ந்து கவனிக்கா விட்டால் ஒரு ஜோக் மக்கள் சிரிப்பிலும், கை தட்டலிலும் பறந்து விடும் என்ற அபாயம் எப்பொழுதும் இருந்தது . எஸ் வீ சேகர் இருந்தால் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?<br />
<br />
அந்த காலத்தில் ஒரு பேச்சு உலவியது - "இவர் எல்லா இடத்துலயும் , எல்லாரைப் பத்தியும் ஜோக் அடிக்கறதால் இவர் அரசியலுக்கு வந்த புதிதில் மக்கள் அதைக் கூட ஏதோ தமாஷ்தான் என்று நினைத்தார்கள்" என்று . அதற்க்கேற்றாற்போல் இவர் தேர்ந்தெடுத்த சின்னமும் அந்த எண்ணத்தைக் கூட்டியது. அதற்குப்பின் பானை தென்னையை வீழ்த்தியதெல்லாம் வேறு கதை , நமக்கு இங்கு தேவை இல்லாதது, நம் தொகுப்பிற்கு அப்பாற்பட்டது!<br />
<br />
நாடக முடிவில் பேசிய சேகர் , இதை இவ்வளவு வருடங்களுக்குப் பின் மீண்டும் தூசி தட்டி எடுத்து மேடையேற்ற எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று விவரித்தார்.<br />
<br />
உண்மை தான் , பல இடங்களில் சில நடிகர்கள் வசனங்களைக் கோட்டை விட்டாலும் சேகர் நுழைந்து அதையும் ஒரு வசனமாகவே புகுத்தி, சரி செய்த பொழுது தெரிந்தது அவருக்கு நகைச்சுவை உணர்வு இன்னும் துளி கூட குறையவில்லை என்று.<br />
<br />
பேசிக் கொண்டே லாவகமாக நகர்ந்து வந்து சக நடிகர்களை மைக் அருகில் வரச் சொன்னது , அவருடைய கூர்மையான நாடக உணர்வு சற்றும் குறையவில்லை என்பதையும் காட்டியது.<br />
<br />
இவ்வளவையும் கவனித்துக் கொண்டே நொடிக்கு நொடி காட்சிக்கேற்றார் போல் உடையை மாற்றிக் கொள்ளும் சேகருக்கு ஒரு சபாஷ்.<br />
<br />
ஒரு நடிகரின் உருவம் கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை என்பதைக் கூட ' நீ கூடத்தான் பார்த்தா அவ புருஷன் மாதிரி இல்ல, தம்பி மாதிரி இருக்கே ' என்று வசனமோட வசனமாக பேசிய பொழுது , அவர் இந்த தூசி தட்டி எடுத்த நாடகத்தை பல முறை மேடை ஏற்றப் போகிறார் என்ற எண்ணமும் புரிந்தது.<br />
<br />
மிக சிரத்தையாக 'மைலாப்பூரில் கிரவுண்டு விலை 45000, பெட்ரோல் விலை பத்து பைசா ஏறி ஒரு ரூபாய் தாண்டி விட்டது ' போன்ற வசனங்களால் 2016 இல் போடும் இந்த நாடகத்தை எழுபதுகளுக்கு தள்ளி விட்டுக் கொண்டே இருந்தது ஒரு நல்ல முயற்ச்சி.<br />
<br />
இவ்வளவு வருடங்களுக்குப் பிறகும், கவுண்டரிலிருந்து சூரி வரை வந்து போன பிறகும், இன்றைய மக்கள் நாற்பது வருட வயதான ஜோக்குக்கு குலுங்கிச் சிரித்தது , மோகனின் நகைச்சுவைக் கிரீடத்தில் பதித்த மற்றுமொரு வைரக் கல்.<br />
<br />
கிரேசி மோகனின் வசனமும், சேகரின் மேடை அனுபவமும் தூண்களாக நின்று இந்த நாற்பது வருட நகைச்சுவை நாடகத்தை தொய்வு விழாமல் பார்த்துக் கொண்டதற்குப் பாராட்டியே ஆக வேண்டும்.<br />
<br />
சேகர் மேலும் தன் பின்னுரையில் , வார நாளாக இருந்தும் நாரத கான சபா உள்ளேயும் , கார் பார்க்கிங்கிலும் நிரம்பி வழிந்ததற்கு மோகனின் வசனங்களைக் காரணம் காட்டியது அவர்களின் நட்பையும் , நாடகத் துறையில் இன்னும் உலவும் நாகரிகத்தையும், பரஸ்பர மரியாதையையும் காட்டியது.<br />
<br />
'மக்கள் நாடகங்களை ஆதரிக்க வேண்டும், எல்லா நாடகங்களையும் பார்க்க வேண்டும்' என்று அவர் வேண்டிக்கொண்ட பொழுது நாடகங்களின் மேல் உள்ள அவரின் அதீதப் பற்று , நாடகத் துறை மங்கிக் கொண்டிருக்கிறதே என்ற ஆற்றாமை போன்றவை தெரிந்தது .<br />
<br />
இன்றும் சேகர், சோ, மௌலி , மோகன், மனோகர் போன்றவர்கள் போட்டது போன்ற நாடகங்கள் வந்தால் மக்கள் பார்க்க தயாராகத் தான் இருக்கிறார்கள். வந்தால் சொல்லுங்களேன் !!</div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-16375164052735336322016-07-18T04:44:00.001-07:002016-07-18T05:07:01.334-07:00சிரிக்க சிந்திக்க <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு நிகழ்ச்சியை எப்படி நடத்துவது<br />
பேச்சாளர்களை எப்படி தேர்வு செய்வது<br />
சிரிப்போ , சிந்தனையோ --- எப்படி திகட்டாமல் கொடுப்பது<br />
வந்தவர்களை எப்படி கவனிப்பது<br />
நிகழ்ச்சியைக் காண வந்தர்களுக்கு எப்படி திகட்டாத, அசௌகரியங்கள் இல்லாத சில மணி நேரங்களைக் கொடுப்பது<br />
<br />
ஈவண்ட் மானேஜ்மேன்ட் என்ற பெரிய சமாச்சாரத்தை தங்களின் உழைப்பினாலும், முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தினாலும் அனாயாசமாக செய்து காட்டி இருக்கும் சென்னை திருவல்லிக்கேணி ஹியூமர் கிளப் நிர்வாகிகளுக்கு ஒரு பெரிய ஷொட்டு.<br />
<br />
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்பாளிகள் வந்தாலும் அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த நான்கு மணிக்குச் சரியாக மாம்பலம் சகோதரிகளின் இனிய குரலில் அரங்கில் 'சாந்தியை நிலவ' விட்டு நிகழ்ச்சியை தொடங்கியதிலேயே தெரிந்தது இவர்களின் திட்டமிடும் ஆற்றல் .<br />
<br />
தொடக்கத்திலிருந்தே காரியத்தில் குறியாய் இருந்து, தான் அதிகம் பேசாமல் , முக்கிய பேச்சாளர்களை பேச விட்டு, இடை இடையே அடுத்த வருட நிகழ்ச்சிக்கும் ஆதரவு தேடும் இந்தக் கிளப்பின் செயலாளர் பாராட்டப் பட வேண்டியவரே.<br />
<br />
முதலில் உரையாற்ற வந்த சொல்லின் செல்வர் சுகி சிவம் அவர்கள் தமிழ் மடை திறந்து நகைச்சுவை கலந்த உரையில் அனாயாசமாக இன்றைய தேதியில் முக்கியமாக எல்லோராலும் நிமிர்ந்து பார்க்கக் கூடிய சொல் - 'மகிழ்ச்சி' - என்றால் என்ன என்பதை:<br />
<br />
- "40% தான் விரும்பும் ஒருவருடனோ இல்லை தன்னை விரும்புவருடனோ இருப்பது,<br />
- மற்றோர் 40% தான் விரும்புவதைச் செய்வது என்றும்<br />
- பத்து சதவிகிதம் தான் இதில் பணம் இடம் பெறுகிறது" என்றும் சொல்லி சுகமான குளிர் அரங்கில் கண் அசர முயலும் சிலரின் கண்களையும் திறந்து வைத்தார்.<br />
<br />
இவருக்கு கணக்கு சரியாக வராதோ என்று நாம் வியப்பதற்கு முன் நிதானமாகத் தொடர்ந்தார் 'மீதமுள்ள பத்து சதவிகிதத்தை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் ' என்று. இவர் குறிப்பிட்ட ' Happiness' என்ற ஒரு குறும் படத்தை யூ டியூபில் பார்த்துக் கொள்ள பலரும் குறிப்பெடுத்துக் கொண்டனர்.<br />
<br />
யாரோ ஒருவர் மஹாபெரியவரிடம் ராம ஜென்ம பூமிக்குப் போகுமுன் உத்தரவு வாங்கப் போன போது, பெரியவர் அவரை 'கிருஷ்ண ஜென்ம பூமியையும்' பார்த்து வரச் சொன்னதின் உள் அர்த்தம் - நன்கு அனுபவிக்கக் கூடியதாக இருந்தது.<br />
<br />
இவர் ஏன் பேச்சை முடிக்கிறார் என்று நாம் ஏங்கும் பொழுது தொடர்ந்த மோஹன சுந்தரம் , ஒரு சர வெடிப் பேச்சாளர். ஒரே வாக்கியத்தில் சில முறை ஒன்றுக்கு மேற்பட்ட நகைச் சுவையையும் கலந்து ஒரு நாற்பத்து ஐந்து நிமிடங்கள் அரங்கைக் கலக்கி விட்டு அமர்ந்த போது தொலைக் காட்சியில் முன்பெல்லாம் தென்பட்ட மதுரை முத்துவை நினைத்து மனம் ஏங்கியது - அப்படி ஒரு இடை விடாத நகைச் சுவை. இவர் பேச்சின் தனிச் சிறப்பு -நிறைய வீட்டு சம்பந்தப்பட்ட நகைச்சுவை இருந்தாலும் அவற்றை வீட்டுமக்களையும் பக்கத்தில் வைத்துக் கொண்டே ரசிக்கும்படியாகவும் இருக்கும் என்பது தான்.<br />
<br />
மனம் நிறைந்து, எழுந்து எழுந்து, வாய் விட்டுச் சிரித்த பார்வையாளர்களின் உடம்பைக் கருதியோ என்னவோ அடுத்துப் பேச அழைத்த பர்வீன் சுல்தானா சிந்திக்க , உணர நிறைய விஷயங்களை முன் வைத்தார்.<br />
<br />
'அடங்கிய மனமே குரு ' ,<br />
'எப்பொழுதுமே தோற்ப்பதற்க்கு தயாராக இருப்பவர்களை யார் ஜெயிக்க முடியும்' ,<br />
<br />
போன்ற தெளிவான கருத்துக்களை சிறிது ஆவேசத்ததுடன் அள்ளி வீசினார். பேச்சைக் கேட்கக் கேட்க புரிந்தது அது ஆவேசம் இல்லை , தெரிந்து கொண்ட விடயங்களைத் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் என்று. பேச்சாளரின் பெயரைக் கேட்டு எடை போட்ட நண்பர்களை விவேகானந்தர், சாக்ரடிஸ், மஹா பெரியவர், யேசுநாதர், நபிகளார் போன்றவர்களின் கருத்துக்களை அனாயாசமாக உரைத்து வெட்கப் பட வைத்தார். அன்னாரின் உரையில் விளக்கிய 'விஸ்வரூபத்தின்' விளக்கத்தை நான் இது வரை கேட்டதில்லை! <br />
<br />
"கவலை என்ற பறவை என் மேல் பறக்க, நான் கவலைப் பட மாட்டேன்<br />
ஆனால் அவை என் மேல் கூடு கட்ட விட மாட்டேன்"<br />
<br />
- என்றுரைத்த போது முண்டாசுக்கவியின் ஆவேசமும், உறுதியும் நினைவுக்கு வந்தது. மக்களை பலத்த சிந்தனையில் ஆழ்த்தி உரத்த கையொலிக்கு நடுவே அமர்ந்த போது , பார்வையாளர்கள் நகைச் சுவையிலிருந்து சிறிது விலகி நின்று , அந்த அம்மையாருக்கு ஆச்சி மனோரமா விருது கொடுத்ததைக் கூட உள் வாங்காமல், நம்மைச் சுற்றி உள்ள மகான்களும் அவர்களுரைக்கும் மகத்தான சிந்தனைகளிலும் ஆழ்ந்து போயிருந்தார்கள்.<br />
<br />
நகைச் சுவை மன்றத்தார் அந்த அரங்கை இந்த நிகழ்ச்சிக்கு கொடுத்த அந்தப் பள்ளியின் முதன்மையாளரை கௌரவப் படுத்திய பிறகு தொடர்ந்து சிறப்புரையாற்ற வந்த முனைவர் ஞானசம்பந்தம் ஆழ்ந்த சிந்தனையிலிருந்த மக்களை எழுப்பி தன் கொஞ்சும் தமிழில் மீண்டும் நகைச்சுவை தீபாவளிக்கு கூட்டிச்சென்றார்.<br />
<br />
சரியாக எட்டு மணிக்கு தேசிய கீதத்திற்குப் பிறகு வெளியே வந்த மக்கள் பலரின் மனதிலும் அசை போடப்பட்டிருந்த வரிகள் , கடைசியில் பேசிய முனைவரைச் சாரும் : " பிரதானமாக ஹிந்துக்களாலே நடத்தப் படும் இந்த நிகழ்ச்சியில் ஒரு முகமதியருக்கு விருது கொடுத்து , தலை சிறந்த ஆன்மிகப் பேச்சாளர் சொல்லின் செல்வம் கைகளால் இந்தக் கல்லூரியின் முதல்வரான ஒரு கிருத்துவருக்கு மேடையில் கௌரப்படுத்தப் படுவதை எண்ணிப் பெருமைப் படுகிறேன் ".<br />
<br />
இதை விட மனம் நிறைந்த சுவை வேறு எங்கு கிடைக்கும் ?<br />
<br />
வீட்டிற்கு வந்ததும்தான் பார்த்தேன் அரங்கில் நுழையுமுன், குடிநீர் பாட்டிலையும் தின்பண்டங்களையும் தவிர, என்னென்னவோ கையில் திணித்திருந்ததை.<br />
<br />
அதில் இவர்களின் 1983 ஆம் ஆண்டுக் கனவாக இருந்தவை:<br />
<br />
"நம் கிளப்பிலே 500 அங்கத்தினர் சேர்க்க வேண்டும்.<br />
நாரத கான சபா போன்ற பெரிய அரங்கிலே ஆண்டு விழா நடத்த வேண்டும்<br />
ஆயிரம் பேர் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்<br />
ஒவ்வொருவருக்கும் ஒரு பை நிறைய பரிசுப் பொருட்கள் கொடுக்க வேண்டும்<br />
சிரிக்க வைக்க வேண்டும்<br />
ஒரு நாலு மணி நேரம் அவர்கள் தங்கள் கவலையை மறந்து ஆரோக்கியமாக சிரிக்க வேண்டும் "<br />
<br />
சாதித்துத்தான் இருக்கிறார்கள்!<br />
மூவரணி, அமைதியாக இருந்து ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை குலுங்க வைத்திருக்கிறார்கள் - வாழ்த்துக்கள்.<br />
<br />
மன்றத்தினர் பகிர்ந்த வலைத்தளத்தின் இணைப்பையும் இங்கு பகிர்வதால் நான் அடைவது: 'மகிழ்ச்சி' !! <a href="https://youtu.be/sWmyx5ZzSlk"> https://youtu.be/sWmyx5ZzSlk</a><br />
<div>
<br /></div>
</div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-34614170312059133962016-07-10T09:50:00.000-07:002016-07-11T22:46:22.699-07:00ஒரு மழைக்கால மராத்திய விஜயம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZodexZC0I7DuuDIPErJlkgtivoCCf__rlW57lubx9l39gOVU2Odmq8z1wLJrvnXmnOOz_THZ3gUb1_SV9e_s7UyHgEJtzyOCfzlBz9bwTShSGGTwV9wVqcme2Do5fi5rpMWTOP5VuWYM/s1600/A_CHENNAI+AIRPORT.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZodexZC0I7DuuDIPErJlkgtivoCCf__rlW57lubx9l39gOVU2Odmq8z1wLJrvnXmnOOz_THZ3gUb1_SV9e_s7UyHgEJtzyOCfzlBz9bwTShSGGTwV9wVqcme2Do5fi5rpMWTOP5VuWYM/s640/A_CHENNAI+AIRPORT.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Raring to take off from the Chennai Airport !</td></tr>
</tbody></table>
அந்த 16 பேர் குழு கிளம்பும் பொழுதே மேக மூட்டத்துடன் காணப்பட்ட வானைப் பார்த்து சென்னையின் வானம் பிரிவில் தான் கண் கலங்குகிறதென்று எண்ணி எந்த சந்தேகமும் படாமல் சுற்றுப் பயண இயக்குனர்கள் ஸ்ரீ ஜானகி டூர்ஸ் கொடுத்த இட்லிகளை அருமையான . தக்காளி சட்னியுடன் உள்ளே தள்ளி விட்டு இண்டிகோ விமானப் பயணத்தை அனுபவித்துப் பின் புனேவில் இறங்கியபின் தான் கவனித்தனர், புனேயும் ஆனந்தக் கண்ணீர் வடித்துத் தங்களை வரவேற்றதை !! சென்னையின் பிரசித்தி பெற்ற வெயிலைத் தொலைத்தாலும் சந்தோஷப் பட முடியாதபடி , அந்தக் குளு குளு வானிலையிலும் புனேயின் சாலைப் போக்குவரத்து நெரிசல் போரூர் சந்திப்பெல்லாம் ஜுஜுபி என்று சொல்லி வியர்க்க வைத்தது.<br />
<div>
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgx5TUKVt27YMIwTXJP5YJYP8AE5GgyZEtBuf-ZUqTnJDUSVU4BmIRBJvvRR2-FpymEog9HNX33xBP-QwOxTI-Ttqb3ks25KmZibKr6NCyQyCQIVcA5T1Dgl7GxK1dyLrdcKmNqJIDzjao/s1600/D_DAGDHUSHETH+VINAYAGAR_PUNE.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgx5TUKVt27YMIwTXJP5YJYP8AE5GgyZEtBuf-ZUqTnJDUSVU4BmIRBJvvRR2-FpymEog9HNX33xBP-QwOxTI-Ttqb3ks25KmZibKr6NCyQyCQIVcA5T1Dgl7GxK1dyLrdcKmNqJIDzjao/s640/D_DAGDHUSHETH+VINAYAGAR_PUNE.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Dagdusheth Vinayagar Temple, Pune</td></tr>
</tbody></table>
எப்படியோ சமாளித்து, நீந்தி, பல வாகங்களுக்கு மறு வாழ்வு கொடுத்ததில் கலங்கிய இதயத்திற்கு இகோஸ்பிரின் மாத்திரை எடுத்து வந்திருப்பதை மனைவியிடம் உறுதி செய்து கொண்டிருக்கும் போதே வண்டி நின்ற இடம் '<b><span style="color: red;">தக்தூ சேத் ஹல்வாயி கணப</span></b><span style="color: red;"><b>தி</b></span><b><span style="color: red;">' கோவில்</span></b>. இந்தியாவிலா - ஏழ்மையா என்று கேள்வி கேட்பது போல் தங்கமும், வெள்ளியும் அணிந்து அருமையாக தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார் விநாயகர். ஒரு சாதாரண இனிப்புக்கு கடைக்காரர் தனக்கு விநாயகர் அளித்த வியாபார லாபத்துக்கு நன்றியாகக் கட்டப் பட்டதாகச் சொல்லப்படும் இந்தக் கோவில் புனேயில் பார்க்க வேண்டிய ஒரு இடம்.</div>
<div>
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7TJkKKBX_fXEB1UYr2o1CN3S1BGYbeDAgMQ-dHf1p7HOPIOMo1k0n8iJ5ylBJUyK6_SOqFbQuoLyyb894Nm-FH_6nWjDipr1Ok7ZE4eHnTczT47zrJ9G3iqcgdsgtahAJrInye6nbris/s1600/F_NARAYANPUR+BALAJI+MANDIR.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7TJkKKBX_fXEB1UYr2o1CN3S1BGYbeDAgMQ-dHf1p7HOPIOMo1k0n8iJ5ylBJUyK6_SOqFbQuoLyyb894Nm-FH_6nWjDipr1Ok7ZE4eHnTczT47zrJ9G3iqcgdsgtahAJrInye6nbris/s640/F_NARAYANPUR+BALAJI+MANDIR.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Narayanpur Balaji temple</td></tr>
</tbody></table>
<br /></div>
<div>
மனம் திருப்தி அடைந்தாலும் வயிற்றில் அலாரம் அடிக்கத் தொடங்க ஒரு ஹோட்டலைப் பிடித்து இனிப்பான தக்காளி சூப்புடன் (பாயச பாத்திரத்தில் சூப் கலக்கி விட்டானோ ??!!) சாப்பாட்டை முடித்து சென்ற அடுத்த இடம் - <span style="color: red;"><b>நாராயண்பூர்</b></span>. திருப்பதி போன்று நெடு நெடுவென்று நின்ற பெருமாள் தரிசனம் . கோவில் - சுத்தத்திலும் உயர்ந்து நின்றது .</div>
<div>
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjACyQfFtFM7wBQclPzCbieHkyvK9vaE9hZWLM91xqrQvuIzx0Rk_LxjHsnR_Z0OFAPWufOrX9vrBBhxOMJA8nm96dVHagOWhzb_wFZj8sTNbUU1rwlHZJOgcyNdWyKUKw3IGWPEJxIMEM/s1600/H_SATARA-BEAUTY.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjACyQfFtFM7wBQclPzCbieHkyvK9vaE9hZWLM91xqrQvuIzx0Rk_LxjHsnR_Z0OFAPWufOrX9vrBBhxOMJA8nm96dVHagOWhzb_wFZj8sTNbUU1rwlHZJOgcyNdWyKUKw3IGWPEJxIMEM/s640/H_SATARA-BEAUTY.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Satara - Nataraj temple</td></tr>
</tbody></table>
<br /></div>
<div>
நிதானமாக நின்று அடிக்கும் மழையைப் பொருட்படுத்தாது முன்னேறியது , <span style="color: red;"><b>சத்தாரா </b></span>என்ற இடத்திற்கு . இந்த ஊரில் உள்ள நடராஜர் கோவில்சிறப்பு - மேற்கு இந்தியாவில் சிதம்பரத்தைப் போன்ற ஒரு கோவில் வேண்டுமென்று கட்டப் பட்டதாம் . உத்தர சிதம்பர நடராஜர் என்றழைக்கப்படும் இந்தக் கோவிலில் உள்ள நான்கு கோபுரங்களும் தமிழ்நாடு, ஆந்திரா, மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களின் முதல்வர்களின் உதவியால் கட்டப் பட்டவையாம். முக்கியமாக மஹா பெரியவர் இங்கு பல காலம் தங்கி இருந்த இடம். </div>
<div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiD-7_ZePp_qoFEg8JEviBzxBlIofz8CZen8ysqyF-LmGBS8S9e7C6SsQPtOQ4wozl1pJ9boSanzR_7by3iy2H1Hp0Y4tTaRVV8MSP1AUZb16NpZVuhNeYgsUgIyToy5IwCfF4x2ME_gSE/s1600/J_KOLAHPUR_BDAY+CAKE.jpg" imageanchor="1" style="clear: left; display: inline !important; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="111" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiD-7_ZePp_qoFEg8JEviBzxBlIofz8CZen8ysqyF-LmGBS8S9e7C6SsQPtOQ4wozl1pJ9boSanzR_7by3iy2H1Hp0Y4tTaRVV8MSP1AUZb16NpZVuhNeYgsUgIyToy5IwCfF4x2ME_gSE/s200/J_KOLAHPUR_BDAY+CAKE.jpg" width="200" /></a><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheh6EDC4W58Tu9GAk5dmjIAgB5x8slPi6ouynw6cXNqaihAaEjx1Z9o5QjAkAYHHEFI11cWeTk_B3qqUiFHY-oUeCHApWE2ujk3uy7zbYP_hSB7tgGeR0s2ZHv3JdF8acTSr9XxCyy9Bg/s1600/K_KOLAHPUR_BDAY+CELEB.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="112" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheh6EDC4W58Tu9GAk5dmjIAgB5x8slPi6ouynw6cXNqaihAaEjx1Z9o5QjAkAYHHEFI11cWeTk_B3qqUiFHY-oUeCHApWE2ujk3uy7zbYP_hSB7tgGeR0s2ZHv3JdF8acTSr9XxCyy9Bg/s200/K_KOLAHPUR_BDAY+CELEB.jpg" width="200" /> </a></div>
இவ்வளவு தொலைவு கடந்து வந்தாலும், சிரமம் பாராமல் என் மனைவியின் பிறந்த நாளை , கோலாப்பூர் ஹோட்டலில் சிறப்புடன் கொண்டாட வாழ்த்தி வழி வகுத்த அனைவருக்கும் நன்றி.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
வந்த அலுப்புத் தீரத் தூங்கி மறுநாள் விடிகாலை கண்ட தரிசனம், <span style="color: red;"><b>கோலாப்பூர் மஹாலக்ஷ்மி</b></span> ! மிகப் பழமையான இந்தக் கோவிலில் உள்ள சிற்பங்களும் , வேலைப் பாடுகளும் சரியான பராமரிப்பு இல்லாமலும் தனித்து நின்றன. இந்தக் கோவிலின் மற்றோரு சிறப்பு துல்ஜா பவானி, காசி அன்னபூரணி போன்ற சன்னதிகளும் முறையாக அமைக்கப் பட்டிருப்பது.</div>
<div>
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0makKnB7FxIQJzgnqoM8gENl7EpAOUJFBu5mY-4mvIbN5vtDAQmvPrszpEf3NOcLgFERKQr4M_yP9IbVS49cmv6ZGlxMkf_0I7U4E2Zgxu72oymiqQJrdOEuF-Y2BAaTyuDR_0-JZnK4/s1600/M_KOLAHPUR_M4HALASHMI+TEMPLE3.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0makKnB7FxIQJzgnqoM8gENl7EpAOUJFBu5mY-4mvIbN5vtDAQmvPrszpEf3NOcLgFERKQr4M_yP9IbVS49cmv6ZGlxMkf_0I7U4E2Zgxu72oymiqQJrdOEuF-Y2BAaTyuDR_0-JZnK4/s640/M_KOLAHPUR_M4HALASHMI+TEMPLE3.jpg" width="360" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Kohlapur Mahalakshmi Temple</td></tr>
</tbody></table>
<br />
கோலாப்பூரிலுந்து ஒரு சுமாரான சாலையில் சில மணி நேர பயணத்திற்குப் பின் வந்தது '<b><span style="color: red;">பண்டரிபுரம்</span></b>'. விட்டலனின் இடத்தில் கால் பதித்ததும் வந்த சந்தோஷம் அங்கு சொல்லப் படும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவியும் செய்தியும், தரிசனத்திற்கு எட்டிலிலுருந்து பத்து மணி நேரம் வரை ஆகும் என்ற நிலவரமும் கொஞ்சமும் கலங்க வைக்கவில்லை. இவ்வளவு தூரம் நம்மை அழைத்து வந்த பாண்டுரங்கன் , அதையும் பார்த்துக் கொள்வான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த திட நம்பிக்கை கொஞ்சமும் பொய்த்துப் போகாமல் , இருபது நிமிடங்களுக்குள் குழுவில் உள்ள பதினாறு பேரும் மனம் நிறைந்த தரிசனம் பார்க்க வழி வகுத்துக் கொடுத்தது எப்படி என்பதை விட்டலைத் தான் கேட்க வேண்டும் !!<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPoenlDkhIKbQFOy_paOM1XsZiX0VLta4a6JtavN0RUkvu4CfjZZxznKu0m853WxzQBUn3cE98nnEJrDNQL9XVe_nMZmx5WN6yxl2Pf3bsMlfIybXosKQ_YAvG5hFRL_JCZLqY3RO7DUM/s1600/N_PANDARIPUR1.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPoenlDkhIKbQFOy_paOM1XsZiX0VLta4a6JtavN0RUkvu4CfjZZxznKu0m853WxzQBUn3cE98nnEJrDNQL9XVe_nMZmx5WN6yxl2Pf3bsMlfIybXosKQ_YAvG5hFRL_JCZLqY3RO7DUM/s640/N_PANDARIPUR1.jpg" width="360" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Pandaripuram</td></tr>
</tbody></table>
நிறைந்த மனத்துடன் ஒரு இஞ்சி சுக்கு கலந்த தேனீருக்குப் பின் நம்ம ஊர் ஆட்டோவில் கிளம்பினோம் , சில உள்ளுர்க் கோவில்களைக் காண. பல லட்ச பக்தர்கள் குவியும் இந்த ஊரின் சாலை மற்றும் சுகாதார நிலை சொல்லிக் கொள்வது போல் இல்லை. நாங்கள் ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டி வந்தது போல் பிரதமரின் 'சுத்தமான இந்தியா' கனவு இன்னும் இங்கு வந்து சேரவில்லை போல. குண்டும் குழியுமான சாலை , அதில் விதிகள் என்றால் என்ன என்று ஒன்றும் புரியாமல் தலையைத் திருப்பிப் பார்க்கும் மாடுகளும் , மனிதர்களும் . தெருவில் நிதானமாக ஓடும் கழிவு நீர் . கண்டிப்பாக அரசாங்கமும், கோவில் பராமரிப்பதற்கு தானங்கள் செய்யும் பல தர்மவான்களும் காலம் தாழ்த்தாமல் கவனிக்க வேண்டிய ஒன்று.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkJek1Ym_3-w27KDnB9umv8M0bFSfmk0L3hU0Mgx_dXrOh8JrR2kcmxC5xnf0AJUAWqq9DAO07wnPvmdv98WxopW_3ztrIzlB9Is3yaCMmOq6Si3hpC8Ra4OPDrkOcv9IKdPRS9H14u3s/s1600/Crowd.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkJek1Ym_3-w27KDnB9umv8M0bFSfmk0L3hU0Mgx_dXrOh8JrR2kcmxC5xnf0AJUAWqq9DAO07wnPvmdv98WxopW_3ztrIzlB9Is3yaCMmOq6Si3hpC8Ra4OPDrkOcv9IKdPRS9H14u3s/s640/Crowd.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Braving rain, awaiting dharshan</td></tr>
</tbody></table>
இவ்வளவு சங்கடங்கள் இருந்தும் , எதையும் சட்டை செய்யாமல் தெருவில் தரிசனத்திற்காக பல மைல் தொலைவில் பொறுமையுடன் மழை, வெய்யிலைப் பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருக்கும் எளிய கிராமத்து மக்களை எவ்வளவு தட்டிக் கொடுத்தாலும் தகும். </div>
<div>
<br /></div>
<div>
நம்ம ஊர் ஆட்டோ ஓட்டுனர்கள் பெருமைப் படுவது போல் ஓட்டுகிறார்கள் அங்கு உள்ளவர்கள் - அந்த வேகத்தில் எங்கு யாரை இடித்துச் சாய்ப்பார்களோ என்ற பயத்தில் கண்களை மூடி உட்காந்ததும் முதலில் நிறுத்திய இடம் <span style="color: red;"><b>துக்காராம் மந்திர்</b></span>. இங்கு அவர் பயன்படுத்திய மரக்கட்டில் போன்றவைகள் பராமரிக்கப் பட்டு வருகின்றன.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcvu6uI_4Pi71LDbfDiCJiqhMHLb5PDFDgX6N9OAo3fTUJZVlmR8i9o7_BR2g1B46bGA2x0yEtlFa2n7f4u1N_-jkBW_2upeFTMEYVv2kysgnOO-xre7NMiYfVb4NT8qCy4wCP4GRHIks/s1600/N_PANDARIPUR_DUKARAM2.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcvu6uI_4Pi71LDbfDiCJiqhMHLb5PDFDgX6N9OAo3fTUJZVlmR8i9o7_BR2g1B46bGA2x0yEtlFa2n7f4u1N_-jkBW_2upeFTMEYVv2kysgnOO-xre7NMiYfVb4NT8qCy4wCP4GRHIks/s640/N_PANDARIPUR_DUKARAM2.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Cot used by Dhukkaram</td></tr>
</tbody></table>
</div>
<div>
அதன் பின் பார்த்த <b><span style="color: red;">கோரா கும்பர் </span></b>கோவிலிலும் இப்படிப்பட்ட ஞாபகார்த்த சின்னங்கள் காணப்பட்டது .<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtVnY36JMsttFaJw1JNZ1nZQEsYZ10l5rpk7wwjTlJqaVYtMVAhmXEskMw9dkWlziU5dQ9VqllXWOTQ0nsEMMqCp0EzYAxNIiUXpJ3moMUZZ3zzvV0NHhJje3gOEjlcdAhcn8xlkKuwkk/s1600/N_PANDARIPUR_GORA+KUMBAR1.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtVnY36JMsttFaJw1JNZ1nZQEsYZ10l5rpk7wwjTlJqaVYtMVAhmXEskMw9dkWlziU5dQ9VqllXWOTQ0nsEMMqCp0EzYAxNIiUXpJ3moMUZZ3zzvV0NHhJje3gOEjlcdAhcn8xlkKuwkk/s640/N_PANDARIPUR_GORA+KUMBAR1.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Gora Kumbar </td></tr>
</tbody></table>
அதன்பின் பார்த்தது கோவில் அல்ல - முனிவர்களிலுருந்து, புண்டரீகன், வேதங்களுக்கு முதல்வன் இவர்களிலுருந்து காந்தி, நேரு , அமெரிக்க ஜனாதிபதி வரை அனைவரின் மண் உருவ பொம்மைகளும் வைக்கப் பட்டிருக்கின்றன. ஒரு அருங்காட்சியகம் போல் உள்ள அந்த இடம் வருங்கால மக்களுக்கு ஒரு சரித்திர வழிகாட்டியாக அமைக்கப் பட்டிருப்பது புரிந்தது.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoRp7pOz8g4le-z74_v1zmO4VHmrYeUpY9dpn6prpw7HHHUbk-ksfTcBj8Wo_3eNF2QjI6CGym3nYFEMauXuwmQubQZ5Fo050R7DAbT3_Wk67w2PXF6QcgMwTFvUK9ksnu3E4B2fLi7Lo/s1600/N_PANDARIPUR_SANT+KAIKAWADI.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoRp7pOz8g4le-z74_v1zmO4VHmrYeUpY9dpn6prpw7HHHUbk-ksfTcBj8Wo_3eNF2QjI6CGym3nYFEMauXuwmQubQZ5Fo050R7DAbT3_Wk67w2PXF6QcgMwTFvUK9ksnu3E4B2fLi7Lo/s640/N_PANDARIPUR_SANT+KAIKAWADI.jpg" width="360" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Sree Santh Kaikadiya Viswapunyadaam</td></tr>
</tbody></table>
ஆனால் இது கட்டப் பட்டிருக்கும் விதமோ அவ்வளவு சுலபமாக இல்லை. ஏறி, இறங்கி, ஏறி, இறங்கி, குறுகிய பாதைகளில் பயணித்து சிறிது நேரத்தில் ஒரு பயம் கூட வந்துவிடுகிறது- நாம் சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறோமோ என்று. ஒரு மணி நேரம் கடந்து, வியர்த்து வெளியில் வந்தால் அதன் அமைப்பை நினைத்து பிரமிப்பு தான் மிஞ்சுகிறது. அந்த இடத்தின் பெயரும் அமைப்பைப் போல் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது - <span style="color: red;"><b>ஸ்ரீ சாந்த் கைக்கடிய விஸ்வ புண்யதாம்</b></span>.</div>
<div>
<br />
இப்படிப்பட்ட புண்ணிய பூமியில் அன்றிரவு தங்கி ஆனந்தம் அடைந்தோம் .<br />
<br />
மறுநாள் எங்கள் பயணம் தொடர எதிரே ஆஷாட ஏகாதசிக்கு பாண்டுரங்கனை தரிசனம் செய்ய சாரை சாரையாக வந்த மக்களைக் காண பிரமிப்பாக இருந்தது. வெகு தூரத்திலிருந்து கால் நடையாகவே வந்து கொண்டிருந்த இவர்களில் அநேகம் பேர் முதியவர்கள் - பஜனை செய்து கொண்டே செல்கின்றனர். ஆங்காங்கு வயல்களில் உள்ள பம்பு செட்டுகளில் குளித்து, ஒரு ஓரமாக தீ மூட்டி ஆகாரம் செய்து பிறகு நடை பயணத்தை தொடருகிறார்கள் . பல முதியவர்கள் அப்படியே வயல்களில் படுத்து இளைப்பாறியதையும் காண முடிந்தது. இப்படி ஆச்சரிய பட்டுக் கொண்டே நாங்கள் வந்தடைந்த இடம் <b><span style="color: red;">சனி </span></b><span style="color: red;"><b>ஷிங்ன்னாப்பூர்</b></span>.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJkua6_jRCOfxnC0eahidXrIasSg9DS6bIMDJX4Bxe-eE2XhgmLWlDvR_XKam_blCTIINeImsqNlYGQ7nNmB5B2eePAyu7yjKYnw6LLG5L5vntCyq2ZsDZkiU8Ja1Myr9Oys5twnNY8cE/s1600/O_SANI+SNIGNAPUR2.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJkua6_jRCOfxnC0eahidXrIasSg9DS6bIMDJX4Bxe-eE2XhgmLWlDvR_XKam_blCTIINeImsqNlYGQ7nNmB5B2eePAyu7yjKYnw6LLG5L5vntCyq2ZsDZkiU8Ja1Myr9Oys5twnNY8cE/s640/O_SANI+SNIGNAPUR2.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Sani Shingnapur</td></tr>
</tbody></table>
ஸ்னைஸ்வரனின் சுயம்பு உருவத்தைக் காண பலரும் பக்தியுடன் வந்து குவிகிறார்கள். இவருக்கு எண்ணெய் சாற்றுவது விசேஷமாகையால் மக்கள் பாட்டில் பாட்டிலாக ஊற்றும் எண்ணெய் பகவானை அடைய சிறு பாதை அமைத்து அதன் வழியே செல்லும் எண்ணெய் சனீஸ்வரன் தலை மேல் அபிஷேகமாக விழுவதை நாமே காணலாம் .<br />
<br />
குளிர்ந்த மேகங்கள் குடை பிடிக்க மனமும் குளிர எங்கள் பயணம் தொடர்ந்தது <b><span style="color: red;">ஷிரிடி</span></b> நோக்கி. சாயிநாதனைக் காண விரைந்த குழுவிற்கு வியாழக் கிழமை கூட்டம் கொஞ்சம் திகைப்பைக் கொடுத்தாலும் பொறுமையாக முன்னேற மாலை சுமார் ஆறரை மணிக்கு நிறுத்தப் பட்டோம். எப்படியாவது மாலை ஹாரத்திக்கு முன் தரிசனம் செய்யத் துடித்த சிலருக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும். சாயிராமின் எண்ணங்கள் வேறாக இருந்தது. அங்கே இருந்த தொலைகாட்சிப் பெட்டியில் பகவானின் உடை மற்றும் , மாலைகள் மாற்றும் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த எங்களை திடீரென்று கதவுகளைத் திறந்து ஹாரத்தி பார்க்க அனுமதித்தது பெரிய ஆனந்த ஆச்சரியம். ஒரு நாற்பது நிமிடங்கள் சாயிநாதனுக்கு நேரெதிரே அமர்ந்து முழு நிகழ்ச்சியையும் கண்டு களித்து பிரமிப்புடன் வெளியே வந்தோம் . கேட்டதோ சில நொடி தரிசனம் , கிடைத்ததோ நாற்பது நிமிடங்கள் !!!<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzzK7eoqVvzPHNbS5XmoTh0pBUES-gw-jDK8RcYiTzIEEnYYGjOhB_sq0N4SsTGKAn4jPq-636RTU5Z6k0u_LNmNmB1K_DXmdaUmeCglfEKq6vumHflkfvfuQQz9U7GI6UVLwRp0HMWXo/s1600/P_SHIRDI3.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzzK7eoqVvzPHNbS5XmoTh0pBUES-gw-jDK8RcYiTzIEEnYYGjOhB_sq0N4SsTGKAn4jPq-636RTU5Z6k0u_LNmNmB1K_DXmdaUmeCglfEKq6vumHflkfvfuQQz9U7GI6UVLwRp0HMWXo/s640/P_SHIRDI3.jpg" width="360" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Shirdi</td></tr>
</tbody></table>
<br />
மறுநாள் காலை உணவாக சில நாட்களாகக் கிடைக்காத பொங்கலைப் பார்த்த குழு 'கண்டேன் பொங்கலை' என்று பாய்ந்து இரண்டு டம்பளர் பொங்கல் பருகியவுடன் - ஆம், பொங்கல் ஆறாய் ஓடியது - கிளம்பியது , பயணத்தின் கடைசி ஸ்தலத்துக்கு. சென்ற அநேக இடங்களில் கிடைத்த அமோக தரிசனத்தில் திளைத்த குழு நான்காம் நாள் காலை மிகுந்த உற்சாகத்துடன் காணக் கிளம்பியது- <b><span style="color: red;">த்ரியம்பகேஸ்வர்</span></b> ஜ்யோதிர்லிங்க தரிசனத்திற்கு. கொட்டும் மழையில் வந்தடைந்து ஒரு மணி நேரம் காத்திருந்து சில நொடிகள் தரிசித்ததாலும் கிடைத்த சிவ தரிசன சுகம் அலாதி.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyRrhf1jRURVgiGYaV6YGzgCYuHST6YRaGM5P8ie7v3uXrIPST6xnsYfXhLZTBW5s4WRyR6HTX93tIuuyig4CfMXR3hIIdvS_w6YiVSG3mEJ4x6wFVywN20wv8Te3Er_tRc4XN_HlvI2U/s1600/Q_THYRAMBAKESWAR1.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyRrhf1jRURVgiGYaV6YGzgCYuHST6YRaGM5P8ie7v3uXrIPST6xnsYfXhLZTBW5s4WRyR6HTX93tIuuyig4CfMXR3hIIdvS_w6YiVSG3mEJ4x6wFVywN20wv8Te3Er_tRc4XN_HlvI2U/s640/Q_THYRAMBAKESWAR1.jpg" width="360" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Thrayambakeshwar</td></tr>
</tbody></table>
<br />
என்றுமே எல்லாம் நேராக நடந்து விடுவதில்லை . எல்லாக் கோவில்களிலும் கிடைத்த அமோகமான தரிசனத்தில் திளைத்திருந்த குழுவிற்கு காத்திருந்தது திரயம்பகேஸ்வரிலுந்து புனே வரும் பயணம். வழி நெடுக 'சாலை மேம்பாடு ' என்ற பெயரில் வெட்டிப் போட்டிருக்க ஒரு ஏழு மணி நேர பயணத்திற்குப் பின் சக்கையாக வந்தவர்களுக்கு கிடைத்த பரிசு புனேயில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இரவு தங்கும் வசதி !<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5zdeaUv4gHbZ1M19XGNUwPGUzb6pGvijV8aRQYPIomcROp9ziYfrWZ9QlsvWIuTlStDarQfi27hI7hrfyt7X6rF5T_OZ2GR_knLT-2Kh3Hg1X73m6QGuTeUtgxD0OnqmGS_wZtrOHGkU/s1600/S_PUNE+HOTEL3.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5zdeaUv4gHbZ1M19XGNUwPGUzb6pGvijV8aRQYPIomcROp9ziYfrWZ9QlsvWIuTlStDarQfi27hI7hrfyt7X6rF5T_OZ2GR_knLT-2Kh3Hg1X73m6QGuTeUtgxD0OnqmGS_wZtrOHGkU/s640/S_PUNE+HOTEL3.jpg" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Pune Keys Hotel</td></tr>
</tbody></table>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisa-cOjLvvAG_MR3knTxABUDTVp7ImnLPvL03XlFSguqUp6MtomQ72YigpYOEu9pweIVwqvlsnDic86NKr-eaPpQtMy58SE0rWFuYZnFuAjwZwPJX-IMuAvO4bqu3iCwX-VHOd3HqnSM8/s1600/T_RETURN+TO+CHENNAI2.jpg" imageanchor="1" style="clear: right; display: inline !important; float: right; margin-bottom: 1em; margin-left: 1em; text-align: center;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisa-cOjLvvAG_MR3knTxABUDTVp7ImnLPvL03XlFSguqUp6MtomQ72YigpYOEu9pweIVwqvlsnDic86NKr-eaPpQtMy58SE0rWFuYZnFuAjwZwPJX-IMuAvO4bqu3iCwX-VHOd3HqnSM8/s200/T_RETURN+TO+CHENNAI2.jpg" width="112" /></a>கொடுத்த காசுக்கு சரியாக இருக்கும் அறையைச் சுற்றிப் பார்க்கக் கூட முடியாமல் இரவு பதினோரு மணிக்கு படுத்து மறுநாள் காலை 3.30 மணிக்கு எழுப்பப் பட்டவர்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதல் அந்த அதிகாலையிலும் ஜானகி டூர்ஸ் ரமேஷின் ஸ்பெஷலான சுடச் சுடக் காபி !<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh22163LeTe-WpZXpm4YV91QJTu9LB0YtF-Gy0khQIsxwpwfR1j5UtEkdCqf3J-xKn-59JuUR_zcYTCP5eTT8xxX_4EgcAyTcWhE7gpifmGpWZTgAaGjZ5AsOgA7ZbYnDdtU_1KEoMkfh8/s1600/T_RETURN+TO+CHENNAI4.jpg" imageanchor="1" style="clear: right; display: inline !important; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="112" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh22163LeTe-WpZXpm4YV91QJTu9LB0YtF-Gy0khQIsxwpwfR1j5UtEkdCqf3J-xKn-59JuUR_zcYTCP5eTT8xxX_4EgcAyTcWhE7gpifmGpWZTgAaGjZ5AsOgA7ZbYnDdtU_1KEoMkfh8/s200/T_RETURN+TO+CHENNAI4.jpg" width="200" /></a><br />
<br />
மீண்டும் ஒரு முறை புனேயின் மழையை ரசித்துக் கொண்டே வந்த குழு சென்னையில் எட்டு மணிக்குத் தரை தொட்டபின் நினைவுக்கு வந்ததெல்லாம் நல்ல தரிசனங்கள், வயிற்றை நெகிழ்த்தாத சாப்பாடு, தேவைப்பட்டால் உபயோகப் படுத்தத் தயாராக இருந்த புளிக்காய்ச்சல், பருப்புப் பொடி, தக்காளித் தொக்கு, அதிகாலை காப்பி , அனைவரும் மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்த நொறுக்கு தீனிகள், கடலை மிட்டாய்கள், கொய்யாக்காய்கள், ... இப்படி இனிய நினைவுகள் தான்.<br />
<br />
நான்கு நாட்களில் மூவாயிரம் கிலோ மீட்டர்கள் விஸ்தாரத்தில் இப்படி ஒரு நல்ல சுற்றுலாவுக்கு வாய்ப்பளித்த அந்த ஆண்டவனுக்கு, ஏற்படுத்திக் கொடுத்த ஸ்ரீ ஜானகி டூர்ஸின் ரமேஷ், பிரியா தம்பதியருக்கு , கூட வந்து நட்பு வட்டாரத்தை விரிவுப் படுத்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றியைத் தவிர வேறு என்ன சொல்லுவது !! </div>
</div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-56807791808059292192016-05-15T04:32:00.000-07:002016-05-15T04:32:03.892-07:00முச்சந்தியில் வாக்காளன் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
போன வருடத்திலிருந்தே எதற்கெடுத்தாலும் சொல்ல ஆரம்பித்தார்கள் , அடுத்த வருடம் தேர்தல் என்று.<br />
<br />
ஸ்கூல் பையன் போல் பரீட்சை வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தது , இப்பொழுது வந்தே விட்டது.<br />
<br />
போன முறை யாருக்கு ஓட்டுப் போட்டேன் என்பது இப்பொழுது முக்கியமில்லை; அன்றைய அன்றாடத் தேவைகளுக்கு யார் சரிப்படுவார்கள் என்று பார்த்துத் தான் செய்திருக்க வேண்டும்.<br />
<br />
இது வரை ஆறு அல்லது ஏழு முறை வாக்களித்திருப்பேன் - என் ஒவ்வொரு தேர்வும் சரியா தவறா என்று கூட கணிக்க முடியவில்லை - அவ்வளவு மாற்றங்களா இல்லை என் எதிர்ப்பார்ப்பும் தேர்ந்தெடுத்தவர்களின் குறிக்கோளும் மாறுபடுகின்றதாலா - புரியவில்லை.<br />
<br />
இந்த முறையும் , வாக்களிப்பதற்கு ஒரு நாளே உள்ள நிலையில், பிரசாரத்தின் நேரமும் முடிந்த நிலையில் , இதுவரை யாருமே, எந்தக் கட்சியுமே என் போன்றவர்களை மதித்து வாக்குக் கேட்கவில்லை .<br />
<br />
என்னுடைய இந்த வரிக்கு ஒரு நல்ல புரிதல் தேவை.<br />
<br />
என்னை மதித்து கேட்கவில்லை என்ற கோபத்திலோ , என் வாக்கின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அகம்பாவத்திலோ சொல்லப்பட்டதல்ல அது.<br />
<br />
அறுபதுகளில் மயிலை கீழ மாட வீதியில் நான் வசித்துக் கொண்டிருந்த பொழுது மேள தாளம் சத்தம் கேட்டு ஓடி வந்து வீதியில் பார்த்தால் எந்தக் கட்சி என்று புரியாத வயதானாலும் இரட்டைக் காளைகளிடையே ஒரு பெரிய மூவண்ணக் கொடி தெரியும். அதன்பின் நீல நிறத்தில் வெள்ளை நட்சத்திர பாட்ஜ் சட்டையில் குத்திக் கொள்ளக் கொடுத்தது பசுமையாக நினைவில் இருக்கிறது. வீட்டின் கதவைத் தட்டி கும்பிடு போட்டதும் நினைவில் உள்ளது.<br />
<br />
எனது இன்றைய சந்தேகம் ஏன் வீடு தேடி வந்து கெஞ்சவில்லை என்பது அல்ல. என் போன்றவர்கள் அவர்களின் பார்வையில் இருக்கிறோமா இல்லையா என்பதுதான்.<br />
<br />
நிற்க .<br />
<br />
போன முறை யாருக்கு வாக்களித்திருந்தாலும் , அதனால் என் வாழ்வில் , வாழ்க்கை நடைமுறையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா, என் கஷ்டங்கள் கவனிக்கப் பட்டிருக்கிறதா ? சிந்திக்க வேண்டிய நேரம்.<br />
<br />
அப்படி இல்லையென்றாலும் , இந்த முறை தேர்வினால் ஏதேனும் மாற்றம், முன்னேற்றம், தீர்வு வருமா ? எதிர்பார்ப்புகளை எடை போடும் நேரம்<br />
<br />
குழப்பம் தான் மிஞ்சுகிறது.<br />
<br />
சரி - நாம் தான் பல முக்கிய கட்சிகளின் உழைப்பை, சாதனைகளை கவனிக்கத் தவறி விட்டோம். இவர்களின் இன்றைய நிலைப்பாட்டை ஊடகங்கள், விவாதங்கள் மூலம் தெரிந்து கொள்ளாம் என்றால் தங்களின் சாதனைகள், செய்ய விருக்கும் நடவடிக்கைகளுக்கு பதிலாக மற்றவர்கள் எங்கு தவறினார்கள் என்று சுட்டிக் காட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். வித விதமான தவறுகளை வெவ்வேறு கட்சிகள் செய்வதால் சாதாரணனின் பிரச்சினை தீர்ந்து விடுமா , இல்லை அது தான் ஒரு முடிவெடுக்கவாவது உதவுமா ? மீண்டும் குழப்ப முச்சந்திதான்<br />
<br />
அதற்க்காக சுலபமான முடிவாக வாக்குப் போடாமல் என் கடமையிலிருந்து தவறவும் இஷ்டமில்லை. மேலும் என் வாக்கை நானே போட விரும்புவதால் கண்டிப்பாக ஒரு நடை போயே தீர வேண்டும் .<br />
<br />
நம் வாழ்வில் முன்னேற்றம் இருக்கிறதோ இல்லையோ , தேர்தல் பணிகளில் , தேர்தல் முறைகளில், கண்காணிப்பில் நல்ல மாற்றம், முன்னேற்றம் தெரிகிறது. வீட்டிலிருந்தே நமது வாக்காளர் எண்ணை அனுப்பினால் அதே குறுஞ்செய்தியாக என் வாக்காள விவரங்களும் , எந்த வாக்குச் சாவடி என்றும் சௌகரியமாக தெரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் ஆணையம் தனது பிடியை இறுக்கி நியாயத்தை நிலை நாட்டப் பாடு படுவது ஒன்றிலிருந்தே தெரிகிறது , நம் தேசத்தில் இன்னும் ஜனநாயகமாக தேர்தல் நடத்துவதற்கு எல்லா முயற்சிகளும் நடந்து வருகின்றன என்று.<br />
<br />
பல எதிர்ப்புகளிலிருந்தும், பண பலத்தை சமாளித்தும், பல்லாயிரம் போட்டியாளர்களையும் அவர்களுக்கு பணி புரிந்து ஆதரவு அளிக்கும் லட்சக் கணக்கான ஆதரவாளர்களையும் எதிர்கொண்டு பாடு படும் இந்த அரசாங்க முயற்ச்சிக்காகவாவது , நாம் ஒரு நடை வாக்குச் சாவடிக்குச் சென்று இன்றைய தேதியில் யார் உண்மையாக உழைக்க முயல்பவர் என்று கண்டறிந்து என் வாக்கை அவர்களுக்கு அளித்து, என் சிறிய கடமையையாவது நான் செய்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத் துள்ளேன்.<br />
<br />
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு இந்தியனுக்குள்ளே என்றும் இருக்கும் ஒரு நம்பிக்கை இம்முறையும் தேர்ந்தெடுக்கத் தூண்டுகிறது<br />
<br />
முடிவே எடுக்காமல் முச்சந்தியில் நின்று விழிப்பதைவிட , ஏதாவது ஒரு முடிவெடுப்பதும் சரியென்றே தோன்றுகிறது.<br />
<br />
தவறென்றால் , இருக்கவே இருக்கிறது , அடுத்த சந்தர்ப்பத்தில் திருத்திக் கொள்ளலாம் . </div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-59484764520860815752016-04-18T23:12:00.000-07:002016-04-18T23:12:24.979-07:00படித்தது!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சென்னையில் உள்ள மாவட்ட நூலகங்கள் உதவியுடன் சுஜாதாவின் சில புத்தகங்களை படிக்க நேர்ந்தது. நன்றி என் நண்பனுக்கு- நூலக அறிமுகத்துக்கு!<br />
<br />
இரு வாரங்களில் நான்கு புத்தகங்கள்-சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் உட்பட.<br />
<br />
படிக்க படிக்க அந்த எழுத்தாற்றலின் வேகத்தை , அகலத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. இந்த வரி அனேகமாக அன்னாரின் எல்லா புத்தகங்களும் படித்த பின்னால் வருவதில் ஆச்சரியமில்லை.<br />
<br />
நிற்க சுஜதா புராணம்.<br />
<br />
இந்த வாரத்தில் படித்த இரண்டு நாவல்கள் -<br />
<br />
உள்ளம் துறந்தவன் - அபார வேகம் , ரிவர்ஸ் ஸ்னாபரி முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை வரை எல்லாவற்றையும் தொடுகிறார். வஸந்த் இல்லா விட்டாலும் அந்தக் கதா பாத்திரம் உள்ள பிரமையை எழுத்து மூலம் வாசகர்களுக்கு நினைவு படுத்துவதில் அவர் எழுத்தின் ஆளுமை தெரிகிறது. அந்த சின்ன இருதய நோய் சம்பந்தப் பட்ட விளக்கத்தின் எளிமையில் ஆர்தர் ஹைலியின் <span style="font-family: Arial, Helvetica, sans-serif;">Final Diagnosis</span>ஐ மிஞ்சுகிறார் !! பங்குச் சந்தையில் தன் அறிவு விஸ்தாரணத்தை அநாயாசமாகக் காட்டி இருக்கிறார்.<br />
<br />
இருந்தும், இயக்குனர் சிகரத்தை சிலர் குறை கூறுவது போல், கதையை முடிக்க தடுமாறி இருக்கிறார். தடுமாற்றத்தில் அதுவரை இருந்த விறுவிறுப்பு கொஞ்சம் மழுங்கிப் போய் எதிர்பார்க்கக் கூடிய திருப்பங்களைக் தவிர்க்க முடியவில்லை . இப்படிப்பட்ட சில குறைகள் இருந்தும் ரசிக்கக் கூடிய நாவல்.<br />
<br />
அடுத்த நாவல் - ஒரே ஒரு துரோகம் - நண்பரின் மனதுக்கு பிடித்த மைதானம் - 'துரோகம்' . இதில் உள்ள வியக்கத் தக்க விஷயம் அடுத்தடுத்த அத்தியாயங்களில் கதாநாயகனும் (அவனே வில்லனும் கூட) கதாநாயகியும் , மாற்றி மாற்றி அவர்கள் மன எண்ணங்களில் கதையை நகர்த்தி இருப்பது. ஒரே நிலைமையை இவர்கள் இருவரும் எப்படிப் பார்க்கிறார்கள் என்ற அருமையான உத்தியைக் கையாளுவதற்கு பல கதை, கட்டுரைகள் எழுதிய வளமான சிந்தனையும் , முதிர்ந்த எழுத்தாற்றலும் அவசியம் தேவை. அதற்க்கொன்றும் ஆசிரியருக்கு குறைச்சலில்லை - ஆகையால் வாசகருக்கு பக்கத்துக்கு பக்கம் விருந்துதான். இந்தக் கதையின் முடிவிலும் அவரசரமும் , நம்பகத் தன்மை குறைவும் நம்மைத் தாக்குவது தான் சிறிது ஏமாற்றமளிக்கிறது . சமீபத்தில் படித்த மற்றொரு கட்டுரையில் சுஜாதா எழுதி இருந்தார் - ' பல நிறைவேறாத ஆசைகளும், விபரீதக் கற்பனைகளும் எழுத்து மூலம் வெளிப்படுத்த முடிகிறது ' - இந்தக் கதையில் அந்தக் கூற்றை நன்கு காண முடிகிறது!<br />
<br />
வயதில் மூத்தவராக இருந்தாலும் எழுதுகோலில் உள்ள இளமை - ஆசிரியரை மீண்டும் ஒரு முறை ' ரசிக்கக் கூடிய ராஸ்கல் ' என்று சொல்லத் தூண்டுகிறது.<br />
<br />
அடையாறு மாவட்ட நூலகம் : அமைதியான, மரங்கள் சூழ்ந்த பிரதான சாலையில் , பத்மநாப ஸ்வாமி கோவில் அருகில், வண்டிகள் சௌகர்யமாக நிறுத்த இடத்துடன். கொஞ்சம் இருட்டு, பழைய வாசனைகளை சகித்துக் கொண்டால் அறுபது ரூபாய் வருடச் சந்தா கட்டி மூன்று புத்தகங்களை பதினைந்து நாட்களுக்குள் படித்து மறுபடியும் எடுக்கலாம். பாலகுமாரன், சிவசங்கரி, வாஸந்தி , சுஜாதா , சோ போன்றவர்களின் புத்தகங்கள் நிறைய உள்ளன. புத்தகங்கள் தேடுவதை விட நூலகத்தில் சேர விண்ணப்பத்தை தமிழில் நிரப்புவதில்தான் அதிக சிரமம் இருந்தது . </div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-44177714534256241162016-04-11T19:39:00.000-07:002016-04-11T19:39:02.310-07:00வாழ்வில் எத்தனை 'மை'? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சில மாதங்களுக்கு முன் எனக்குத் தெரிந்த ஒரு பெரியவரின் வீட்டுக்குப் போயிருந்தேன். பல வருஷங்களுக்கு முன்னால் நல்ல பதவியில் இருந்தவர், தன் பெரிய குடும்பமான பல பெண்களுக்கும் நல்ல முறையில் கல்யாணம் பண்ணிக் கொடுத்த பின்னும் கையில் ஒரு கணிசமான தொகையுடன் ஓய்வு பெற்று யார் கையையும் நம்பாமல் தனித்து, தன் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்தார். எப்பொழுதுமே சிரித்த முகம், வாய் நிறைய புன்னகையுடன் 'வாங்க வாங்க' என்று வரவேற்ப்பார்.<br />
<br />
வாழ்க்கைதான் அவ்வளவு சுலபமில்லையே. அவரது மனைவிக்கு சின்ன விபத்து நேர்ந்து நடப்பதில் சிரமமிருந்தாலும், அப்படியே காலம் தள்ளிக் கொண்டிருந்தார். கொஞ்ச காலமாக, வெளியே போவதில்லை- கண் பார்வை மங்குவதால், வயதும் ஏறிக்கொண்டே இருப்பதால் - ஞாபக மறதியும் தொற்றிக் கொண்டிருந்தது.<br />
<br />
இந்த முறை என்னைப் பார்த்தவுடன் வரவேற்று, உபசரித்ததைப் பார்த்து நான் மகிழ்வதற்க்குள் "நீங்கள் யார்" என்றார் ! எனக்கு அவரின் நினைவு தப்புவதைப் பார்த்து பரிதாபப் படுவதா அல்லது யாரென்று புரியாமலே வாய் நிறைய வரவேற்ற உள்ளத்தைக் கொண்டாடுவதா என்று புரியவில்லை. அதன்பின் அவர் மனைவி வந்து "நீங்க ஒண்ணும் தப்பா நினைச்சுகாதேங்கோ " என்றார்.<br />
<br />
என்னைத் தடுமாற வைத்தது - அவரின் அன்றைய நிலை<br />
<br />
சில வருஷங்களுக்கு முன் என் மற்றொரு நண்பர் ஒருவர் இப்படித்தான் - நன்றாக இருந்தவர், திடீர் வியாதியால் மூக்கில் டியூபெல்லாம் வைத்து கடைசி வரை பேச முடியாமலே போய் விட்டார். இறுதி நேரத்திலும் அவர் மனதில் என்ன நினைத்தார் என்பதே தெரியாமல் போய் விட்டது.<br />
<br />
பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங், அவருடைய மிகப் பெரிய ஆசையாக 'அனாயாச மரணத்தை'த் தான் குறிப்பிட்டுருந்தார்.<br />
<br />
பலருக்கும் உள்ள பல பயங்களில் மிகப் பெரிய பயங்களில் ஒன்றானது - நினைவிருந்தும் பேச முடியாமல் கட்டுப்படுத்தப் பட்டிருப்பதுதான். அது ஒரு கொடுமையான நிலை. நம் உற்றார் உறவினர்களைப் பார்க்க முடியும், ஆனால் பேச முடியாது. சில சமயம் கனவுகளில் இது போன்ற காட்சிகள் வரும் - குப்பென்று வியர்த்து எழுந்திருப்போம்.<br />
<br />
அந்தப் பெரியவர் சுருண்டு படுத்துக் கிடந்த கோலம், என் மனதைப் பிழிந்து விட்டது. எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும், எந்த ராஜ்ஜியத்தை ஆண்டவனாக இருந்தாலும், கம்பங்களியோ, தங்கபஸ்பமோ எது தின்றாலும் முதுமை தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.<br />
<br />
முதுமை என்பதே நிறைய பேர் விரும்பாத, பலர் புரிந்து கொள்ளத் தவறிய ஒரு கட்டாய நிலை.<br />
<br />
அதில் உறவினர்கள், நண்பர்கள் சூழாமல் தனிமை என்பது கொடுமை.<br />
<br />
இந்தக் கொடுமையே பலருக்கு மனதளவில் பாதித்து வெறுமையையும் ஏற்படுத்தும்.<br />
<br />
இதில் வறுமையும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம், மனிதனின் வேதனைக்கு.<br />
<br />
இதில் கல்யாணமாகாத பெண் என்று நிறைவேறாத கடமைகளும் மீதமிருந்தால் வியாதியே தேவையில்லை<br />
<br />
முதுமை, தனிமை, வெறுமை, வறுமை, கடமை - வாழ்வில் இவ்வளவு மைகளா?<br />
<br />
இதில் பொறுமை எப்படி வரும்?</div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-10724647117143830612016-03-09T08:10:00.001-08:002016-03-09T08:10:27.919-08:00காக்க வைத்துக் காட்சி கொடுத்த நரசிம்ஹன் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
என் உறவினர் ஒருவரின் பரிந்துரையின் பெயரில் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் எழுதிய 'குறையொன்றுமில்லை' புத்தகத்தின் முதல் பாகம் படித்தவுடன் ஏற்பட்ட தாக்கம் தான் ஒரு நரசிம்ஹரில்லை , நவ நரசிம்ஹரையும் காண வேண்டுமென்றெழுந்த அவா.<br />
<br />
அவற்றைப் பற்றி மேலும் படிக்கப் படிக்கத் தெரிய வந்தது , அஹோபிலம் அருகிலுள்ள இந்த நவ நரசிம்ஹ க்ஷேத்திரத்தையும் நாம் தனியாகப் போய் பார்ப்பதென்பது ஒரு கடின முயற்ச்சி என்பது. அதன் பின் தான் எனக்குப் பரிச்சயமான ஸ்ரீ ஜானகி டூர்ஸின் 'அஹோபில' யாத்திரையைப் பற்றிக் கேள்விப் பட்டு விசாரிக்க, 2015 ஜனவரியில் முயற்ச்சிக்க , நரசிம்ஹர் என் விசாவைக் கிடப்பில் போட, இந்த வருடம் தொடர்ந்து கெஞ்ச , அவரின் அருட் பார்வையில் கிடைத்த அதிர்ஷ்டம் தான் ஒரு 18 பேர் கொண்ட குழுவில் சென்னையிலருந்து மும்பை மெயிலில் கிளம்பி மறுநாள் விடிகாலையில் பல் தேய்த்துக் கொண்டிருந்த பொழுது 'இறங்கு, இறங்கு- வண்டி கடப்பாவில்தான் நிற்கிறது' என்று யாரோ கூவ, அவசரமாக இறங்கினோம் , இல்லை குதித்தோம் . காத்திருந்த வேனில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர அரைத் தூக்கத்தில் பயணித்தால் வந்தது ஒரு காட்டின் நடுவிலுள்ள 'நவ அஹோபில தங்கும் விடுதி'.<br />
<br />
சுத்தமான அறையில் சுகாதாரமான குளிர்ந்த காற்று மற்றும் நிறைய பூச்சிகளுடையே பயந்து கொண்டே குளித்து முடித்து போன முதல் இடம் 'அஹோபில லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி கோவில்'. மலை மேல் ஸ்வயம்புவாகத் தோன்றியுள்ள அத்தனை நரசிம்ஹர்களின் உற்சவ மூர்த்திகளையும் ஒரு சேரப் பார்க்க முடிந்த இந்தக் கோவில் வாசலிலேயே உள்ள அஹோபில மடத்தின் வயதான வைணவரின் சொல்ப ஆனால் சுவையான காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு மூன்று ஜீப்புகளில் கிளம்பியது நம் குழு, வரவிருப்பது என்ன என்று தெரியாமல்.<br />
<div>
<br /></div>
<div>
<div>
வழக்கமாக வண்டிகள் சாலையில் தான் ஓடும். ஆனால் சாலை இருந்த சுவடே இல்லாத குண்டும் குழியுமாக உள்ள ஒரு பாதையில் நம் ஓட்டுனர் குத்து மதிப்பாக ஓட்ட, உள்ளே இருந்தவர்கள் உயிரைப் பிடிப்பதை விட மேல உள்ள கம்பியை கெட்டியாகப் பிடித்து இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ள , அடிக்கடி உச்சி மண்டை ஜீப்பின் உச்சியை முத்தமிட்ட அயர்ச்சியில் மயங்க , ஏதோ காஷ்மீர் பனிச்சறுக்கில் போவது போல் நம் ஓட்டுனர் அனாயசமாக் ஜீப்பை உருட்டினார். திடீரென்று 'அக்கடச்சூடு' என்று கத்தினார் - அங்கு அழகான புள்ளி மான் கூட்டம் , அருகிலேயே படு வெள்ளை நிறத்தில் சில மாடுகளும் ! சிறிது கண்ணை மூடித் தூங்கினாலும் ஜீப் ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கி டங்கென்று இடித்து உச்சி வகுந்தெடுத்து எழுப்பி விட்டது- வாழ்வை ஒத்த ஏற்ற இரக்கப் பாதை . இப்படியாக ஒரு ஒன்றரை மணி நேரப் பயணத்துக்குப்பின் சென்றடைந்தது <b><u><span style="color: red;">'பாவன நரசிம்ஹர்'</span></u></b> கோவில். அருமையான மலைகள் நடுவே அமர்ந்திருந்த நரசிம்ஹருக்கு நிதான அருச்சனையுடன் ஒரு வாய் இனிய பானகத்துக்குப் பிறகு கிளம்பவே மனது வராத அந்தக் கானகம் ஏனோ நான் மகாராஷ்ட்ராவில் பார்த்த பீமா சங்கரின் முதல் நினைவை கண் முன்னே காட்டி மறைந்தது.<br />
<br />
முதல் நரசிம்ஹரைப் பார்த்த நினைப்பில் மனம் நெகிழ்ந்து கிடக்க தொடர்ந்த மீண்டும் ஜீப்பின் 'மண்டை இடிப் பயணம்' உறைப்பதற்கு முன் அடுத்த கோவில் என்று இறக்கி விடப்பட்ட இடம் கொஞ்சம் பிரமிப்பாகவே இருந்தது. ஒரு சிறிய காட்டுப் பகுதியின் ஒத்தையடிப் பாதையைத் தொடர்ந்து அழகாக புதிதாய் வெள்ளை அடிக்கப் பட்ட 130 படிகள் தென்பட்டாலும் ஏறும் வெயில் கொஞ்சம் படுத்த, மலை ஏறியவுடன் ஆஸ்வாஸப் படுத்தியது சிரித்த குருக்களின் அன்பு முகமும் அதன் பின்னே ஒளிந்திருந்த <span style="color: red;"><u>பார்கவ நரசிம்ஹரின்</u></span> உருவமும்தான். இந்தத் தலத்தின் சிறப்பு நரசிம்ஹர் வதம் செய்யும் பொழுது, ஹிரண்யனின் வலது கை உயர்த்திய வாளுடன் அப்படியே உறைந்து நிற்கும் காட்சிதான் !<br />
<br />
திருப்தியான இரண்டு நரசிம்ஹ தரிசனத்துக்குப் பின் அஹோபில மடத்தின் எளிய மதிய உணவுக்குப் பின் அனைவரும் சற்று இளைப்பாற, குழுவில் இருந்த சில இசைப் பிரியர்கள் எம் எஸ் மற்றும் மகாராஜபுரத்தின் கீர்த்தனைகளை அவிழ்த்து விட கண்கள் சொருகி மனம் தானாக அமைதியடைந்தது. கோழித் தூக்கம் கொடுத்த புத்துணர்வில் மீண்டும் உற்சாகம் பெருக்கெடுக்க, நாம் படையெடுத்த இடம் <span style="color: red;"><u>சத்ரவட நரசிம்ஹர்</u></span>. சிறியதாக இருந்தாலும் அமைதி சூழ்ந்த இந்த இடத்தில் தான் கந்தர்வர்களின் இனிய பாடலுக்கு ஆஹா ஓஹோ என்று கையைத் தட்டி அனுபவித்தாராம் நரசிம்ஹர். இதே நரசிம்ஹர் மதியம் மடத்துக்கு வந்திருந்தால் நம்மவர்களின் பாடல்களுக்கும் தலையாட்டி இருப்பாரோ?<br />
<br />
ஒரு திருப்தியான தரிசனத்துக்குப் பின் சென்ற நான்காம் நரசிம்ஹ க்ஷேத்ரம்<span style="color: red;"><u> யோகானந்த நரசிம்ஹர்</u></span>. அருகிலுள்ள பால யோக நரசிம்ஹர் கோவிலும் , நவ நரசிம்ஹ ஸ்வாமி கோவில்களும் போனஸாகக் கிடைக்க, பார்த்த ஆறு கோவில்களும் மனதுக்கு அமைதியைக் கொடுக்க, அடித்த வெய்யிலும் உச்சி மண்டையில் ஜீப் முத்தமிட்ட இடம் கன்னிப் போக, ஊருகாய் ஜாடி போல் குலுங்கிய உடம்பு சோர்ந்து போக இன்றைய கோவில்கள் அவ்வளவுதான் என்ற அறிவிப்பை குழு மூலைக்கடை தூள் பக்கோடா மற்றும் டீயுடன் கொண்டாடி அறைக்குத் திரும்பியது.</div>
<div>
<br />
மறுநாள் விடிகாலையிலேயே எழுந்து, ஜானகி டூர்ஸின் ஸ்பஷலிடியான டிகிரி காபி கொடுத்த புத்துணர்ச்சியில் உற்சாகமாகக் கிளம்பினோம் 'மேல் அகோபிலம்' நோக்கி.<br />
<br />
அதற்க்கு முன் '<span style="color: red;"><u>அஹோபில நரசிம்ஹர்</u></span>' என்ற மிக அழகான கோவிலுக்குள் சென்று பார்த்த பொழுதே அதன் பழமை தெரிந்தது. சீதையைத் தேடி ராமர் அலைந்தபோது இங்கே வந்து நரசிம்ஹரை வணங்கியதாகக் கூறப்படுகிறது . குறுகிய பாறையின் கீழ் இருந்த நரசிம்ஹருக்கு திவ்யமான ஆராதனை செய்த இந்த <span style="color: red;"><u>திவ்ய தேசத்தில்</u></span> சந்நிதிக்கு வெளியே பக்தர்களின் பாதம் பட்டு விடக்கூடாது என்று இரும்பு தடுப்புக்குள் வட்டமானதொரு பகுதி; அது என்ன என்று விசாரித்த பொழுது இருள் மண்டிக் கிடந்த இந்தப் பாதாளத்தில் ஒரு ஆலயம் இருந்ததாம். ஒரு காலத்தில் அன்றைய ஜீயர் அங்கு வந்த சில எதிரிகளுக்காக மறைந்து பூமிக்குள் சென்று , தினமும் வைகுந்தனை பூஜிக்கும் பொழுது , பூசை மணி கேட்டதாகவும், அந்த மணி சத்தம் திடீரென்று ஒரு நாள் நின்று போனதாகவும் அங்கு இருந்த குருக்கள் சொன்ன போது புல்லரித்தது.<br />
<br />
ஒரு நல்ல திவ்ய தேச தரிசனத்துக்குப் பின் , ஜானகி டூர்ஸின் அருமையான முன்னேற்ப்பாடால் கிடைத்த சில இட்லி வடைகளுக்குப் பிறகு நமது மேல் அகோபிலப் பயணம் துவங்கியது.<br />
<br />
மிகக் கடினமான நடை பயணம் - பாதையே இல்லை- என்றோ தொண்ணூறுகளில் போக நினைத்த ட்ரெக்கிங் நினைவுக்கு வந்தது . வயது வித்தியாசமில்லால் எல்லோரும் உற்சாகத்துடன் நடக்கத் துவங்க, முடியாத சிலர் டோலி என்ற தூளியில் ஏறி சவாரி செய்ய, கடின மலையேற்றம் தொடர்ந்தது. இந்தப் பயணத்துக்குத் தேவை உடல் பலமட்டுமில்லை , மன பலமும் கூட. ஒரு அதீத அபிலாஷை, நரசிம்ஹரைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற வெறி இருந்தால் போதும் - முழங்கால் வலி, உள்ளே வைத்த ஸ்டென்ட், எல்லாமே மற (றை)ந்து விடும். இந்த மனோ தைரியத்தில் தான் மலை ஏற ஆரம்பிக்கும் பொழுதே படியில் விழுந்து காலை பலமாகச் சிராய்த்துக் கொண்ட ஒரு மாமி, வலியுடன் உணர்ச்சியும் கூடி வரவழைத்த கண்ணீரையும் துடைத்துக் கொண்டு ஜானகி டூர்ஸ் சமயோசிதமாக கொண்டு வந்த முதலுதவி களிம்பைப் பூசிக் கொண்டு , வலியையும் உதறி விட்டு நடக்கத் தொடங்கினார். சரியாகத் தான் சொன்னார்கள் முதல் அடியை நீ எடுத்து வைத்தால் மற்ற அடிகளை அவர் பார்த்துக் கொள்வார் என்று . குழுவில் போகும் பொழுது ஒருத்தருக்கு ஒருத்தர் கை பிடித்து தூக்கி விடுவதைப் பார்க்கும் பொழுது , மனம் மிக நெகிழ்ச்சியாக இருந்தது. நேற்றுவரை பலரை மற்றவர்கள் பார்த்ததே கிடையாது.<br />
<br />
கிளம்பும் பொழுதே கொடுத்த ஆளுயர தடியைப் பற்றி வாங்கும் பொழுது பலர் அதிகம் நினைக்கா விட்டாலும், பின்னால் ஜ்வாலா நரசிம்ஹரைக் காண மிகக் கடினமான , கைப்பிடிப்புக்கு ஒன்றுமில்லாத பாதைகளைக் கடக்கும் பொழுது நம்மை விழாமல் காத்த பெரும் கைப்பிடி அது தான் என்று அவர்களுக்குப் புரிந்ததில் ஆச்சரியமில்லை. அத்தனை கஷ்டங்களையும் சகித்து, பாறைகளைக் கடந்து, படியில்லா மலைகளில் ஏறி , மூச்சு வாங்கி, மலை உச்சியிலுருந்த <span style="color: red;"><u>ஜுவாலா நரசிம்ஹரைக்</u></span> கண்டவுடன் கண்ணீரைக் கட்டுப் படுத்த கொஞ்சம் பிரயத்தனப் பட்டு போராட வேண்டி இருந்தது. அங்கு இருந்த சுயம்பு சிலைகளில் நரசிம்ஹரும் ஹிரண்யகசிபுவும் சண்டை போடுவதை இளம் பிரஹலாதன் பிரமிப்புடன் பார்க்க , அசுர குருவான சுக்ராச்சாரியார் உலகத்துக்கு ஒரு பெரிய பாடமும் சரித்திரமும் உருவாவதை அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்த காட்சியும் நம் நாட்டின் வளமான பக்த சரித்திரத்தை பறைசாற்றின. நரசிம்ஹரின் ஆவேசம் காரணமாக இந்தக் குகை வெகுகாலம் நெருப்பு போல் கனன்று கொண்டிருந்ததாம் - பச்சைப் புல்லைக் காட்டினால் கூட உடனே பற்றிக் கொள்ளுமாம்; அதனால் தான் இங்குள்ள நரசிம்ஹருக்கு 'ஜ்வாலா' நரசிம்ஹர் என்று பெயர் வந்தது என்பதை அறிய கைகள் தன்னால் அந்த அக்கிரமத்தை அழித்த நரசிம்ஹரை நோக்கிக் கூப்பின. அங்கு ஜானகி டூர்ஸின் ரமேஷ் கையோடு கொண்டு வந்திருந்த நாட்டுச் சர்க்கரையை ஜுவாலா நரஸிம்ஹருக்கு நைவேத்யம் பண்ணிக் கொடுத்தது , எல்லோரையும் நெகிழ வைத்தது. <br />
<br />
சற்றே அருகிலுள்ள 'ரத்த குண்டம்' என்று சொல்லப்படும் ஒரு சின்ன சுனையில் உள்ள தண்ணீரைக் கையிலெடுத்தால் இளம் சிவப்பாக இருப்பது , ஹிரண்ய வதத்திற்குப் பிறகு நரசிம்ஹர் இங்கு வந்து கரங்களைக் கழுவிக் கொண்டதால் என்று ஒரு வழிகாட்டி விளக்கிக் கொண்டிருந்தார். அருகிலுருந்த வானுயர 'உக்ர ஸ்தம்பம்' என்ற தூணிலுருந்து தான் நரசிம்ஹர் வெளிப்பட்டதாகவும் சொன்னது அந்தக் கூற்றை ஆமோதிப்பது போலிருந்தது . இந்த ஸ்தம்பத்துக்குச் செல்வது மிகவும் கடினமென்றாலும் , அங்குள்ள காவிக் கொடியும், குங்குமக் கறைகளும் பலர் வந்து போனதற்கான சுவடுகளைக் காட்டியது.<br />
<br />
கண்ட காட்சிகளில் மனம் கனமற்றுப் போக , ஒரு துள்ளலுடன் மலை இரங்கத் தொடங்கிய குழு சிறிது நேரத்திலேயே அடுத்த சவால்களை எதிர் கொள்ளத் தொடங்கியது. இது தான் உயரம் என்று நினைத்தவர்களுக்கு அங்கிருந்து கீழ் இரங்கி, மறுபடியும் பல படிகளை ஏறி, காட்டுப் பாதையில் கடுமையாகத் தொடங்கிய வெய்யிலில் சிலர் திரும்பி விடலாமோ என்று நினைத்த பொழுது நான் சொன்ன 'திரும்புவதை விட முன்னேறி அடுத்த இலக்கை அடைவது சுலபமென்பதை' நாங்கள் அடுத்துக் கண்ட <span style="color: red;"><u>மாலோல நரசிம்ஹர்</u></span> கோவிலில் பலரும் ஆமோதித்தனர். என்னைப் பொறுத்தவரை இந்தப் பயணத்திலேயே மிகக் கடினமான பாகம் இந்த ஜுவாலா நரசிம்ஹரிலிருந்து மாலோல நரசிம்ஹரைக் காணும் பாதைதான். மிகவும் உடல் மற்றும் மன உறுதியைச் சோதிக்குமிடமும் இது தான். மேலும், "உண்மையான பக்தி இருந்தால் வந்து தரிசிக்கட்டும் என்று வனமும் விலங்குகளும் அடர்ந்த குகைகளில் நாராயணன் தன்னை வெளிப்படுத்திய புண்ணியத் தலம் அஹோபிலம்" என்று ஏன் சொல்கிறார்கள் என்பது ஜுவாலா நரசிம்ஹரையும் , மாலோல நரசிம்ஹரையும் தரிசித்த பின் தான் புரிந்தது ! இந்த மாலோல நரசிம்ஹருக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. நவ நரசிம்ஹர்களில் எந்த மூர்த்தியை அடிப்படையாக வைத்து உற்சவரை அமைப்பது என்ற கேள்வி எழுந்தபோது, முதலாம் ஜீயரின் கனவில் நாராயணன் தோன்றி , மாலோல நரசிம்ஹராஹக் காட்சி அளித்து ஒரு தீர்ப்பளித்ததாகவும் நம்பப்படுகிறது .<br />
<br />
ஒரு சிறிய இளைப்பாறலுக்குப் பின் இன்னும் அதிக தூரமில்லை என்று நம்பிக்கை வந்து வேகமாக முன்னேறியது அடுத்தத் தலமான <span style="color: red;"><u>குரோத வராஹ நரசிம்ஹர்</u></span> கோவிலுக்கு. பெரிய பாறைக்கடியில் அமர்ந்திருந்த பெருமாளை இருவர் மட்டுமே சேவிக்கக் கூடிய சிறிய இடத்தில் ஒரு அருமையான தரிசனம்.<br />
<br />
கடின பாதையில் நடை பயணம் , மலை ஏற்றம் இத்துடன் முடிவடைந்ததென்பதால் அனைவரும் சந்தோஷமாக ஆனால் நன்றியுடன் கையிலுருந்த தடியைத் திருப்பிக் கொடுத்து விட்டு வேனில் ஏறி சிறிது தூரத்தில் உள்ள கடைசிக் கோவிலான <span style="color: red;"><u>ஸ்ரீ காரஞ்ச நரசிம்ஹர் -</u></span>ஆஞ்சனேயருக்குக் காட்சி கொடுப்பதற்காக வில்லுடன் தோற்றமளித்த இடம்.<br />
<br />
1980<span style="font-size: x-small;">களில்</span> கடைசியாக இப்படிப்பட்ட ஒரு கடின நடை நான் எடுத்தது அழகர் கோவில் செல்லும் பொழுது - ஆனால் இவை இரண்டுக்குமிடையே இருந்த பெரிய வித்தியாசம் நடுவில் கடந்து போன வயது தான்.<br />
<br />
சமீப காலத்தில் என் அனுபவத்தில் தோன்றிய சில எண்ணங்கள்- இப்படிப் பட்ட கடின பயணங்கள், மகாமஹம் போன்ற முயற்ச்சிகளை கூடிய மட்டும் வாழ்க்கையின் முதல் பகுதியில் முடித்துக் கொள்வது நல்லதென்று. அப்படித் தவற விட்டிருந்தால் புத்திசாலித் தனமாக இப்படிப்பட்ட டூர் ஆப்பரேட்டர்களைத் தேடிப் பிடித்துக் கொள்வது பல பிரச்சினைகளை எதிர் கொண்டு சமாளிக்க உதவும் <br />
<br />
இந்த இடத்தில் ஜானகி டூர்ஸ் பற்றி சில வரிகள்:<br />
<br />
<ul style="text-align: left;">
<li>மிகத் திறமையாக பயணங்களை வடிவமைக்கிறார்கள் .</li>
<li>மூத்த குடிமக்களுக்கு நல்ல கவனிப்பு - மலை ஏறும்பொழுது ஒருவர் கீழே விழுந்தவுடன் உடனே ஒரு மருந்தை எடுத்துக் கொடுத்தது இவர்களின் அக்கறையைக் காட்டியது.</li>
<li>ரயிலில் முடியாதவர்களுக்கு வசதியான படுக்கைகளை மற்றவர்களிடமிருந்து பெற்று மாற்றிக் கொடுக்கும் ஒரு நல்ல எண்ணம்.</li>
<li>விடிகாலையில் , காட்டின் நடுவே உள்ள தங்கும் விடுதியில் சுடச் சுடக் காப்பி கொடுப்பதற்க்கு இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.</li>
<li>கடந்த நான்கு வருடங்களாக இவர்களுடன் பல பயணங்கள் - கர்நாடகம், நவ திருப்பதி, கேரளா முதலிய இடங்களுக்கு சென்றிருக்கிறேன். இவர்களின் சிறந்த பணி நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. இதில் முக்கியம் முன்னேறுவது மட்டுமில்லை , மேலும் முன்னேறி சிறப்பாக செய்ய வேண்டும் என்ற இவர்களின் எண்ணம் தான் இவர்களை இன்னும் இந்தத் துறையில் வெகு தூரம் கொண்டு போகப் போகிறது.</li>
</ul>
</div>
<div>
அஹோபில பயணம் - இது ஒரு சாதாரண உல்லாசச் சுற்றுலா இல்லை . இதை மனதில் முதலில் உள் வாங்கிக் கொள்ள வேண்டும்.<br />
<br />
கடக்க வேண்டிய பல கடினமான பாதைகள் உள்ளன- சில ஜீப்பிலும், பல கால் நடையாக காட்டுப் பகுதியிலும், கடினமான படியில்லாத மிகக் குறுகிய மலைப் பாதைகளிலும். கிளம்பு முன்னமேயே இவற்றை மனத்தில் கொண்டு நரசிம்மனைக் காண ஒரு திவ்ய பயணம் என்று புரிந்து கொண்டால் சில கஷ்டங்கள் கூட வலிப்பதில்லை.<br />
<br />
செல்பவர்கள் செய்து கொள்ளக் கூடிய சில முன்னேற்ப்பாடுகள்:<br />
<br />
கூடிய வரை ஆண்கள் முழுப் பேண்ட்டும் பெண்கள் சுடிதார் போன்ற புரண்டு, தடுக்கி விழாத உடை அணிவது நல்லது.<br />
<br />
ஆண், பெண் இருவரும் ஜோல்னா போன்ற தோளில் மாட்டிக் கொள்கின்ற பையை எடுத்துக் கொண்டு இரு கைகளையும் கைத்தடி மற்றவைகளைப் பிடித்துக் கொள்ள தோதாக வைத்துக் கொள்வது நல்லது.<br />
<br />
மலை ஏறும் பொழுது, சிலருக்கு தலை சுற்றல் போன்ற உபாதைகள் வந்தால் சமாளிக்க கொஞ்சம் சர்க்கரை, இனிப்பு/புளிப்பு மிட்டாய்கள், சீரக மிட்டாய், எலுமிச்சம் பழம், கொஞ்சம் பிஸ்கட்டுகள் வைத்துக் கொள்வது உசிதம்.<br />
<br />
இது ஒரு காட்டுப் பகுதி - ஆகையால் வழியில் எதுவுமே கிடைக்காது என்பதை மனதில் வாங்கி அவரவர் தேவைக்கேற்ப எடுத்திச் செல்ல வேண்டும். ஆனால் குடி தண்ணீர் மட்டுமாவது கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாமல் சிலர் அவதிப் பட்டதையும் காண முடிந்தது.<br />
<br />
ஜாக்கிரதை - குரங்குகள் நிறைய நடமாடும் இடமிது ! பெண்கள் கைப் பையை தவிர்க்கவும். குரங்குகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வது மட்டுமில்லால் கைகளில் எந்த பாரமுமில்லாமல் வைத்துக் கொண்டால் விழாமல் சுதாரித்துக் கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.<br />
<br />
ஆகாரங்கள் - கிடைத்த சொல்ப உணவுகளை உட்கொண்டு வயிற்றைக் காய விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இந்த வனாந்திரத்தில் கிடைப்பதை அமிர்தமாக நினைத்து உட்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும் . இந்த இடத்திலேயும் ஜானகி டூர்ஸ் சர்க்கரைப் பொங்கல், கேசரி போன்ற இனிப்புகளுடன், கையில் கொண்டு வந்த அப்பளத்தை பொறிக்கச் செய்து சுவை கூட்டியது பாராட்டப் பட வேண்டிய ஒரு செயல். அதனுடன் அவர்களின் வழக்கமான பருப்பு பொடியும், புளிக் காய்ச்சலும் உங்களை பசியில்லாமல் கண்டிப்பாக வைத்துக் கொள்ளும்!<br />
<br />
இவ்வளவு நேரமும் இனிமேல் படி கிடையாது , ஏற வேண்டாம் என்று சொல்லி சொல்லி எங்களை ஊக்குவித்த சின்ன பையனான ஆனால் அபார திறன் கொண்ட எங்களது வழி காட்டி , பிரியுமுன் பிரியமுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொண்ட பின் அவன் பெயரைக் கேட்ட பொழுது 'நரசிம்ஹன்' என்றவுடன் பேச்சு எழவில்லை. இதுதான் நாம் முதல் அடி எடுத்தவுடன், நரசிம்ஹன் மற்ற பாதைகளைக் காட்டுவானென்று சொல்கிறார்களோ என்று வியக்க வைத்தது !!<br />
<br />
மடத்தில் வாங்கிய புத்தகத்தில் படித்தது ஞ்யாபகம் வந்தது " உண்மையான பக்தியும் உடலுறுதியும் இருந்தால் மட்டுமே அஹோபிலத்தின் நவ நரசிம்ஹர்களைத் தரிசித்துப் பரவசம் கொள்ள முடியும்". நன்றியுடன், அழைத்த நரசிம்ஹரையும் அவர் வழிகாட்டியாக அனுப்பிய நரசிம்ஹனையும் கை எடுத்துக் கூப்பியவுடன் 18 பக்தியால் மகிழ்ந்து , நெகிழ்ந்து போன இதயங்களுடன் வண்டி சென்னை நோக்கி நகர்ந்தது. <br />
<br />
<u>பின் குறிப்பு</u>: ஏற்கனவே இது ஒரு நீளப் பதிப்பாக இருப்பதால், இந்த அஹோபில பயணத்தில் எடுத்த புகைப் படங்களை இங்கு தவிர்த்திருக்கிறேன் , அவற்றைக் காண விழைபவர்களை, என்னுடைய புகைப் படங்களுக்கான பதிவுகளுக்குக்கான <a href="https://goo.gl/photos/Lu8tmJNTC7ZWmdey6">https://goo.gl/photos/Lu8tmJNTC7ZWmdey6</a> என்ற முகவரிக்கு அன்புடன் அழைக்கிறேன்.</div>
</div>
</div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-41809624506156154182016-01-06T23:23:00.000-08:002016-01-06T23:29:12.420-08:00உறைத்தது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நினைத்த உடனே காலில் செருப்பை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பி ஷூவும் , குளிர் கோட்டும் போடாது சிறிது தொலைவு போனபின் -<br />
<br />
<div>
<div>
எல்லா திசையிலிருந்தும் வரும் வாகனங்களையும் சமாளித்து லாவகமாக ஒதுங்கி ரோட்டிலேயே நடக்கும் பொழுது -</div>
<div>
<br /></div>
<div>
நடை பாதையில் நடக்காமல் அது தேடியும் கிடைக்காத பொழுது -</div>
<div>
<br /></div>
<div>
முன் போகும் வாகனத்திலிருந்து வரும் புகை நாசியைத் தாக்கி தானாக கைக்குட்டையை எடுக்கும் போது -</div>
<div>
<br /></div>
<div>
ஒரு கை தேர்ந்த வித்தைக் காரனாக, சிக்னல் இல்லாத தெருவை வாகனங்கள் வராத நேரத்தில் விருட்டென்று கடந்த போது -</div>
<div>
<br /></div>
<div>
தெருவில் சொல்ப வாகனங்களே போனாலும் பெருத்த ஹார்ன் சப்தம் கேட்ட போது- </div>
<div>
<br /></div>
<div>
சந்தையில் 'காலி.... பிளவர் பத்தே ரூபா' என்ற சத்தம் செவிப்பறையை தாக்கிய பொழுது - </div>
<div>
<br /></div>
<div>
நடக்கும் பொழுது காசே கொடுக்காமல் பட்சணக் கடையிலிருந்து வரும் வெங்காய பக்கோடாவின் கம கம வாசனையை அனுபவித்த போது -<br />
<br />
பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றாமல் முழங்களாகக் காத்திருக்கும் ரோஜாவையும் , மல்லீப்பூக்களையும் பார்த்த பொழுது -</div>
<div>
<br /></div>
<div>
வைகறையில் மாட வீதிகளில் பாண்டு ரங்கனை கூவி அழைத்த பஜனை கோஷ்டியைக் கண்ட பொழுது - </div>
<div>
<br /></div>
<div>
கொசு வலையைத் தேடும் போழுது -</div>
<div>
<br /></div>
<div>
மின்சாரம் போய் போய் வந்த பொழுது - </div>
<div>
<br /></div>
<div>
வங்கியில் பணமெடுக்கப் போனால் வாசலிலேயே ஒரு கும்பல் உதட்டைப் பிதுக்கிய பொழுது -<br />
<br />
மடியில் கனமே இல்லாத ஏடீஎம் குஷியாய் குளு குளு அறையில் யாருக்கும் உதவாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்த பொழுது -</div>
<div>
<br /></div>
<div>
.. . . . . . . . உறைத்தது , நான் என் ஊருக்குத் திரும்பி விட்டேன் என்று !</div>
<div>
<br /></div>
<div>
</div>
<div>
<br /></div>
</div>
</div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-73223359593884789572015-12-24T13:03:00.000-08:002016-09-13T03:30:32.613-07:00வலையும் வலை சார்ந்த வாழ்க்கையும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சிங்காரச் சென்னையை விட்டு இந்நாட்டுக்கு வந்து சில மாதங்கள் ஆகிறது .<br />
<br />
இந்தியாவிலிருந்து கிளம்பும் பொழுது அமெரிக்காவைப் பார்ப்பதை விட உறவினர்களைக் காணும் ஆர்வம் மேலோங்கி நின்றது. ஒன்றிரு முறை பயணப்பட்டிருப்பதால் புதிய நாட்டை விட பழைய உறவினர்களைக் காணும் நாட்டம் அதிகமாக இருந்தது.<br />
<br />
இருந்தாலும் சுஜாதா என்னும் எழுத்து ஜீவி எழுதியது நினைவுக்கு வந்ததது "அமெரிக்காவென்னும் அதிசய உலகம் வெளி நாட்டவர்களுக்கு என்றுமே ஒரு கவர்ச்சிக் கன்னி தான் "<br />
<br />
பார்ப்பதற்க்கு நிறைய இடங்கள் உள்ளன .<br />
வியப்பதற்கு அதை விட அதிகம் இருக்கின்றன.<br />
இங்கும் இப்படியா என்று எண்ண வைக்கும் சமாச்சாரங்களும் உள்ளன.<br />
வியப்பது அலுத்து விட்டாலும் பார்க்கப் பார்க்க, ரசிக்க ரசிக்க அதை மற்றவர்களிடம் பகிரும் ஆர்வம் அதிகமாகிறது. அதன் வெளிப்பாடு தான் இந்த வலைப் பதிவு.<br />
<br />
இங்கு, ஒவ்வொரு முறை வீட்டை விட்டுப் பயணப் படும் பொழுதும் நம்மைக் கவர பல விஷயங்கள் உள்ளன. இந்நாட்டு ஜனங்கள் , அவர்களின் பழக்க வழக்கங்கள், அவர்களின் ஒழுக்கம்..... இப்படியான பல விஷயங்களில் என்னைச் சிந்திக்கத் தூண்டியது இங்கு நிலவும் 'வலை சார்ந்த வாழ்க்கை'.<br />
<br />
நான் சென்ற சில பல நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் வேலை நாட்களில் யாரும் ஒருத்தரை ஒருவர் விசாரித்துக் கொள்ளவே முடியாத ஒரு அவசர நிலை. வார இறுதிக்காக ஏங்கிக்கொண்டே, வார நாட்கள் முழுதும் உழைத்து வெள்ளி மாலையில் தொடங்குகிறது கொண்டாட்டம்.<br />
<br />
சனிக்கிழமை முழுவதும் வீட்டைச் சுத்தம் செய்து, துணி துவைத்து- (நம்ம ஊரில் இதெல்லாம் செய்யும் முனியம்மாக்கள் இந்த ஊரில் கிடையாதாம்) , அருகிலுள்ள மால் எனப்படும் சூப்பர் சந்தைக்குப் போய் பால் முதல் ஷவர சமாச்சாரம் வரை வாங்கி, வரும் வழியில் பீஸ்ஸாக்களை விழுங்கி இன்றே உலகம் முடியப் போவது போன்ற ஒரு துரித கதியில் கொண்டாடி விடுகிறார்கள்.<br />
<br />
ஞாயிறு வழக்கத்தை விட இன்னும் தாமதாக எழுந்து எங்கோ பார்த்த ஞாபகமாக உள்ள சமையலறையில் நுழைந்து வெளி வரும் பொழுது இன்னும் ஏழு நாட்களுக்கான உணவு ரெடி. சுட வைத்து சுட வைத்து வாரம் முழுவதும் ஓட்டி அடுத்த வெள்ளி மாலைக்குக் காத்திருக்கிறார்கள்.<br />
<br />
இதெல்லாம் அனேகமாக சென்னையிலும் நடந்தேறிக் கொண்டிருக்கும் சம்பவங்கள் தான் என்றாலும் ஏதோ குறைவது போல் உதைத்தது. நாடே வலை மூலம் இறுக்கமாகப் பின்னப் பட்டிருக்கும் நிலையில் உள்நாட்டு , பன்நாட்டு செய்திகளை இவர்கள் எப்படி அறிந்து கொள்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்தேன்.<br />
<br />
நான் விஜயம் செய்த வீடுகளில் யார் வீட்டிலும் பேப்பர் வாங்குவதில்லை. (இரண்டு மாதத்துக்குஒரு முறை பழைய பேப்பர்களை விலைக்குப் போடும் தொல்லை இல்லை).<br />
<br />
ஆபீஸுக்குப் கிளம்பும் முன் மழை வருமா , குளிர் அதிகமாகுமா, குடையோ ஸ்வெட்டரோ தேவையா , எல்லாம் டீவீ மூலம் தெரிந்த கொள்கிறார்கள்.<br />
<br />
எந்நேரமானாலும் உபேர் போன்ற டாக்சிகளை போன் மூலமாகக் கூப்பிட்டு அது எங்கு இருக்கிறது என்பதையும் வலை மூலம் தெரிந்து கொள்கிறார்கள்.<br />
<br />
பஸ்ஸிலோ , பூமிக்கடியிலும் மேலும் ஓடும் ரயிலிலோ போகும் பொழுது நாட்டு நடப்பு, அடுத்த ரயில் எப்பொழுது, போகுமிடம் எவ்வளவு தூரம் வரை எல்லாவற்றையும் கைக்கடக்கமாக உள்ள சின்னக் கணிணி போன்ற தொலை பேசியில் பார்த்துக் கொள்கிறார்கள்.<br />
<br />
பஸ்ஸில் போகும் பொழுது என் அருகிலுருந்தவர் திடீரென்று செல் போனை வாயருகில் கொண்டு போய் 'ஸ்டார்பக்ஸ்' என்று சொன்னவுடன் அது அருகிலுள்ள காப்பிக் கடைக்கு வழி காட்டுகிறது. நம்மூரிலும் செல் போனை அழுத்தி 'இரானி டீக்கடை' என்று சொன்னால் வருமா என்று பார்க்க வேண்டும். இலவச வை பை கிடைப்பதால் ஸ்டார்பக்ஸ் கடைக்குள் எப்பொழுதும் கூட்டம் . ஒரே ஒரு கப்புசினோ காப்பியை வாங்கிக் கொண்டு மேக்கைப் பிரித்து மணிக்கணக்கில் உட்கார்ந்து விடுவதைப் பார்க்கும் பொழுது எண்பதுகளின் உட்லேண்ட்ஸ் டிரைவ் இன் ஞாபகம் வந்தது.<br />
<div>
<br /></div>
<div>
சில வாரங்களுக்கு முன் நான் போன ஒரு இந்தியக் கடையிலிருந்த சில இலவச பேப்பர்களைக் கொண்டு வந்து என்னதான் இருக்கிறதென்று பார்த்ததில் சில தலைப்புச் செய்திகள்:</div>
<div>
<ul style="text-align: left;">
<li>எட்டு மாதங்களுக்கு முன் பேரக் குழந்தையைப் பார்க்க குஜராத்திலிருந்து வந்த பட்டேல் தாத்தாவை எப்படி ஒரு காவலர் அநியாயமாக சந்தேகத்தின் பேரில் அடித்து அவர் இன்னும் எழுந்திருக்க முடியாத நிலையில் தள்ளப் பட்டார் என்ற கேஸ் கோர்ட்டில் நடப்பதை விரிவாகச் சொல்லி இருந்தார்கள். 'அவரைப் பார்ப்பதற்க்கு எழுபது வயது போலிருந்தார். அவரால் எந்த ஆபத்தும் வரும் என்று எனக்குத் தோன்றவில்லை" - இப்படிச் சொன்னது இதில் சம்பந்தப் பட்ட ஒரு காவலர் தான். </li>
<li>சைனா அதன் ஒரு குழந்தைகள் உள்ள பிரஜைகளுக்கு இன்னொன்று பெற்றுக் கொள்ள அனுமதி கொடுத்தது !</li>
<li>சோட்டா ராஜனைப் பற்றியும் , ஹர்பஜன் திருமணம் பற்றியும் சில சுவையான தகவல்கள் இருந்தது . ஆனால் பத்திகையாளர்களிடம் ஹர்பஜன் கேட்டதாக வந்த மன்னிப்பு பற்றி செய்தி இல்லை </li>
<li>அழகுச் சாதனங்களில் உள்ள கேன்சர் அபாயத்தைப் பற்றிய ஒரு திகில் செய்தி.</li>
<li>எளிய ஜீரணத்துக்கு முட்டைக் கோசையும் , பெரிய வெங்காயத்தையும் சாப்பிட ஒரு அறிவுறுத்தல் </li>
</ul>
ஒரு வேளை காசு கொடுத்து வாங்கும் பேப்பர்களில் இன்னும் இருக்குமோ ?</div>
<div>
<br />
ஒரு விபரீதக் கற்பனை - நம்ம ஊரில், நம்ப வங்கிகளில் நடப்பது போல் சர்வர் உட்கார்ந்து போனாலோ இணைய தளம் இல்லாமல் போனாலோ இந்நாடு என்னவாகுமோ ?<br />
<br />
நினைக்கவே பயமாக இருக்கிறது.<br />
<br />
ரொம்ப வருடங்களுக்கு முன் போய் விட்ட என் பாட்டியின் குரல் கேட்கிறது "நல்ல நாளும் அதுவுமா தோசித்தனமாக யோசிக்காதே. பாவம் இங்குள்ளவாளெல்லாம் தவிச்சுப் போயிடுவா" <br />
<br />
- - சாண்டா பெரியவரின் மணியோசையை எதிர்பார்த்து இருக்கும் ஒரு குளிராத டிசம்பர் மாலையில் எழுந்த கலங்கிய எண்ணங்கள் .</div>
<div>
<br /></div>
</div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1045129569068627538.post-74982234517734601122015-11-28T05:53:00.001-08:002015-11-28T15:41:55.597-08:00நன்றியுடன் ஒரு வெள்ளி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அமெரிக்காவின் பல இடங்கள், சில நாட்களாக, ஒரு கொண்டாட்டம் கலந்த ஜுரத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.<br />
<br />
நம்மூரைப் போல் பிள்ளைகள் கல்லூரி முடித்து வேலைக்கும் போய் கல்யாணம் செய்து கொள்ளும் வரை இங்கு பெற்றோர்கள் அடை காப்பதில்லையாம். பள்ளியில் ஒரு அளவு வரை கொண்டு வந்து சேர்த்து விட்டு, இனி மேற்படிப்பு தேவை என்றால் பிள்ளைகளையே பொறுப்பேற்றுக் கொள்ளச் சொல்லி விடுகிறார்கள். அவர்களும் அதை ஒரு சவாலாகவே ஏற்று தொடர்வதால் அனேகமாக அனைவருக்கும் வங்கிகள் கடன் கொடுக்கின்றன. தானே சம்பாதித்து , தாம் வாங்கிய கடனை அடைக்கும் பிள்ளைகள் தத்தம் வாழ்க்கையை தாமே அமைத்துக் கொள்ளவும் கற்றுக் கொள்கிறார்கள்.<br />
<br />
பணம் , பொறுப்பு, சுய சிந்தனை எல்லாம் சிறு வயதிலேயே வந்து விட மெதுவாக பெற்றோர்களிடமிருந்து விலகியே வாழ்கிறார்கள். இதனால் பெற்றோர்களை தாங்கள் மறந்து விடவில்லை என்பதைத்தான் இந்த நன்றி நவிலும் நாளான நவம்பர் கடைசி வியாழனன்று வெளிப் படுத்துகிறார்களாமாம். அங்கங்கு சிதறிக் கிடக்கும் அண்ணன், தங்கைகள் அனைவருமே இந்த நாளில் தன் பெற்றோர்களிருக்குமிடம் அடைந்து , அவர்களை வணங்கி, ஆசி பெற்று பரிசுகளைப் பரிமாறி கொண்டாடுகிறார்கள். சரித்திர ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இப்படிப்பட்ட பழக்க வழக்கங்களே நினைவில் தங்கிக் கொண்டிருன்றன என்கின்றனர் பேசிய சிலர்.<br />
<br />
ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்னமேயே எல்லா பஸ், விமானங்களிலும் கூட்டம் அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த நாளின் கொண்டாட்டம் நியூயார்க் நகரின் மையப் பகுதியில் ஒரு பிரதான வீதியில் நடக்கும் ஒரு மிகப் பிரசித்தி பெற்ற ஊர்வலத்துடன் தொடங்குகிறது. இதில் மெக்டொனால்ட் முதல் நியூயார்க் போலீஸ் வரை அனைவரும் கலந்து கொண்டு அணி வகுத்துப் போவதைக் காண இந்த வருடம் பத்து லக்ஷத்துக்கும் மேல் கூட்டம் கூடியதாக ஒரு தகவல். தொலை காட்சியில் வரும் பிரபலங்களுடன் சாண்டா க்ளாஸ் போன்றவைகளும் அணி வகுத்து வருவதால் குழந்தைகளின் வரவேற்புக்குக் குறைவே இல்லை- இந்த ஊர்வலத்துடன் ஓயாது கூடவே வரும் இசை பெரியவர்களையும் ஆட வைக்கிறது.<br />
<br />
நாள் முழுவதும் இந்தக் கொண்டாட்டங்கள் நடந்து நிறைவேற, பசிக்கு வான் கோழியின் துணையை தேடிக் கொ<strike>ல்</strike>ள்கிறார்கள். இந்த வருடம் சுமார் நாற்பத்து மூன்று லட்சம் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு, வளர்க்கப் பட்ட வான் கோழிகள் இதற்காக உயிர்த் தியாகம் செய்ததாக ஒரு செய்தியும் படித்தேன். வயிறு நிறைய, மறுநாள் மக்கள் கடைகள் பக்கம் பரிசுகள் வாங்க திரும்பத் தொடங்க வியாபாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு விலையை அதிரடியாகக் குறைக்க எங்கும் திருவிழாக் கோலம் தான். சில பண்டங்களை வாங்க இணைய தளத்திலேயே பதிவு செய்ய முடியும்; அனேகமாக இப்படிப்பட்ட எல்லா பண்டங்களுமே இலவசமாக வீடு தேடி வருகிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-LhQTbi-ze0IAkmxwUnwvRK9fly3jz0E7IAY31KcMNiZ71fwoms9x3ye8adCqWW1IvG-gPkR9_6sUv59CByn2jPG4_72cV5E1XekevjV-SHm2hHLjXcChYQBtMzhkUnxp7f3V50Xtk04/s1600/IMG_20151126_192140345.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-LhQTbi-ze0IAkmxwUnwvRK9fly3jz0E7IAY31KcMNiZ71fwoms9x3ye8adCqWW1IvG-gPkR9_6sUv59CByn2jPG4_72cV5E1XekevjV-SHm2hHLjXcChYQBtMzhkUnxp7f3V50Xtk04/s640/IMG_20151126_192140345.jpg" width="640" /></a></div>
<br />
<br />
சில சமாச்சாரங்கள் சந்தையில் தான் அடி மாடு விலை என்பதால் கடை திறக்கும் போதே வெள்ளம் அலை மோதுகிறது. இங்கு காத்திருந்து, பின் கதவு திறந்தவுடன் ஓடி வரும் கூட்டம் உண்மையிலேயே Door Buster என்ற பதத்தை நியாயப் படுத்துகிறது.<br />
<br />
நேற்று எடுத்ததாகச் சொல்லப்பட்ட , மக்களின் ஷாப்பிங் பசியைக் காட்டும் இந்த காணொளிக் காட்சி பிரமிக்க வைக்கிறது : <a href="https://youtu.be/SA5P4MsNGfI" style="background-color: white; color: #1155cc; font-family: arial, helvetica, sans-serif; font-size: small;" target="_blank">https://youtu.be/SA5P4MsNGfI</a><br />
<br />
ஜே சி பென்னி போன்ற பிரபலமான சில கடைகளில் அதிகக் கூட்டத்தில் கேட்ட குரல்கள்:<br />
' மாப்பிள்ள , ஒரு மணி நேரமா கியூவே நகரல்லே '<br />
'பசிக்குதுன்னா இப்ப என்னம்மா பண்றது, லைன விட்டு போக முடியாதே'<br />
'ஏமண்டி , இக்கட....." - - - - - போன்றவைகள் உண்மையிலேயே கேட்ட சில குரல்கள்<br />
<br />
ஐம்பது இன்ச் டிவியைக் கூட வாங்கிக் கொண்டு தானே அதைத் தூக்கிக் கொண்டும் ஒருவர் பஸ்ஸில் போகிறார், அவர்களே வீட்டில் போய் பொருத்தியும் கொள்ளுவார்களாம். இங்கு இதைத் தூக்கிக் கொண்டு போக வண்டியோ, ஆட்களோ கிடையாது.<br />
<br />
ஒரு கடையின் வாசலில் குவித்து வைத்திருந்த மலை போன்ற சாமான்களைப் பார்த்து, எனக்கு வீட்டுக்கு வந்து கூட வெகு நேரம் தூக்கமே வரவில்லை - இதை எப்படி எடுத்துப் போகப் போகிறார்கள் என்று நினைத்து!<br />
<br />
எல்லா பொருள்களுக்குமே கணிசமான தள்ளுபடி இருந்தாலும் அதற்க்கு பில் போட்டு பணம் கொடுப்பதற்க்குள் நாக்கு தள்ளி விடுகிறது. இவ்வளவு வியாபாரம் நடக்கும் இந்தக் கடைகளில் எனக்கென்னவோ வாடிக்கையாளர்களை இன்னும் சீக்கிரமாக அனுப்ப அவர்கள் வழி செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு காலத்தில் ஆங்கில வருட முதல் தேதியில் நம்மூரில் விவேக் போன்றவர்கள் இப்படிப் பட்ட 'அள்ளிக் கொள்ளுங்கள், அதிரடி விலையில்' போன்ற சந்தைகளில் நிமிஷமாக பில் போட்டு பார்சல் பண்ணி விடுவார்கள். இங்கு மால்களிலும், ஷாப் ரைட், காஸ்ட்கோ போன்ற மகா சந்தைகளும் கூட பில் போடும் கௌண்டர்கள் மிகக் குறைவு. வாடிக்கையாளர்களின் பொறுமையை இப்படிச் சோதிக்கக் கூடாது.<br />
<br />
ஆனால் இன்றைய வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டது போல் கோடிக்கணக்கான பொது ஜனங்கள் 4500 இணைய தளங்கள் வழியாகவும் , நேரிலும் வந்தும் கடைகள் திறக்கும் பொழுதே உள்ளே விரைந்து 'என்ன நடந்தாலும், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் வாங்கியே தீருவேன்' என்ற முடிவுடன் இருப்பதாலும் , 1200 கோடி டாலர்கள் வியாபாரம் நடப்பதாலும், இதைக் கறுப்பு வெள்ளி என்று சொன்னாலும் வியாபாரிகளுக்கு என்னவோ சுபீக்ஷ வெள்ளியாகத் தான் இருக்கிறது ! </div>
Kapaleehttp://www.blogger.com/profile/11420147117744739485noreply@blogger.com2